10th Tamil Unit 1 Book Back Answers Guide New Revised Syllabus
10th Standard Tamil New Revised Syllabus Lesson 1 – Unit 1 அமுதஊற்று Book Back Question and answers download. Poem Unit 1: Book Back Answers and Solutions. book back answers and solutions for Unit 1 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. 10th All Subject Book Back question and answers.
- 10th Tamil Unit 1 to 7 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
-
10th Tamil Unit 1 Book Back Answers Guide New Revised Syllabus
Class 10 Tamil Unit 1 அமுதஊற்று Book Back Answers
10th Tamil 1st Lesson அமுதஊற்று Book Back Answer
1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்………
அ) இகழ்ந்தாால் என்மனம் இறந்து விடாாது
ஆ) என்மனம் இகழ்ந்தாால் இறந்து விடாாது
இ) இகழ்ந்தாால் இறந்து விடாாது என்மனம்
ஈ) என்மனம் இறந்து விடாாது இகழ்ந்தாால்
விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
2. “காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –
அ) இலைையும் சருகும்
ஆ) தோோகைையும் சண்டும்
இ) தாாளும் ஓலைையும்
ஈ) சருகும் சண்டும்
விடை : சருகும் சண்டும்
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
விடை: இ) எம் + தமிழ் + நா
4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் விளையாலணையும் பெயரும் முறையே –
அ) பாாடிய; கேட்டவர்
ஆ) பாாடல்; பாாடிய
இ) கேட்டவர்; பாாடிய
ஈ) பாாடல்; கேட்டவர்
விடை: ஈ) பாடல் : கேட்டவர்
5. வேர்க்கடலைை, மிளகாாய் விதைை, மாாங்கொட்டைை ஆகியவற்றைைக் குறிப்பது –
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
விடை: ஆ) மணிப்பெயர் வகை
ஆ) குறு வினா
1. ‘பலகை’ என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
- பல + கை – தொடர்மொழி ( பல கைகள் )
- பலகை – தனிமொழி மரப்பலகை
2. மன்னுஞ் சிலம்பேர் மணிமே கவைவடிவே!
முன்னும் தினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
-இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சிலப்பதிகாரம்,
- மனிமேகலை.
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
சரியான தொடர்கள்:
- ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ள
- ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
பிழையான தொடர்:
- ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
பிழை- காரணம் : சீப்பு என்பது வாழைத்தாற்றின் ஒரு பகுதி.
4. “கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது பாடல் அடிகளில் உள்ள மோனை. எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
மோனைச்சொற்கள்:
- கொள்வோர் , கொள்க.
- குரைப்போர், குரைக்க
எதுகைச் சொற்கள்:
- கொள்வோர் , உள்வாய்
5. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- செந்நெல், வெண்ணெல் , கார்நெல், சம்பா, மட்டை
இ) சிறு வினா
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
அழகாய் அமைந்த அன்னை மொழி
திருக்குறளின் பெருமையாய் இருப்பது.
பழமைக்கும் பழமையானது. புதுமைக்கும் புதுமையானது.
குமரிக்கண்டத்தில் அரசாண்ட மொழி.
2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது
இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க
நெல் நாற்று நட்டேன்.
வாழைக் கன்று வாங்கினேன்
தென்னம்பிள்ளை வளர்த்தேன்
பனை மடலியை கண்டேன்
பைங்கூழ் எடுத்தேன்
3. ‘அறிந்தது, அறியாதது, புரித்தது. புரியாதத, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’ – இவை அனைத்தையும் யாம் அறிவோம்.
இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
- அறிதல்-அறியாமை
- புரிதல்-புரியாமை
- தெரிதல்-தெரியாமை.
- பிறத்தல்-பிறவாமை.
ஈ) நெடு வினா
1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.
முன்னுரை:
நாடும் மொழியும் நமது இரு கண்கள்- என்கிறார் பாரதி .நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைக் காண்போம்
நாட்டுவளம்:
தமிழ் மொழி மிகவும் பழமையானது நாட்டின் வளமும், அங்கு பேசும் சொற்களின் வளமும் தொடர்புடையது நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது.
சொல்வளத்திற்கான சில சான்றுகள்:
உலகின் மூத்தமொழி தமிழ். அது காலத்திற்கேற்ப வளர்வதால் சொல்வளம் நிறைந்த மொழியாகிறது.
தமிழில் இலையைக் குறிக்க தாள், ஓலை, தோகை, இலை எனப் பல சொற்கள் உள்ளன. விளைபொருட்களின் மிகுதியால் சொல்வளம் பெருகுகிறது .
நெல் வகைகள் : செந்நெல், வெண்ணெல், கார், சம்பா, மட்டை
பயிர்களின் அடிப்பகுதி, கிளைப்பகுதி, இலை, காய், கனி, தோல், மணி முதலானவற்றைக் குறிக்க பல சொற்கள் உள்ளன.
முடிவுரை:
நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைக் கண்டோம்.
2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக
”கவிஞன் யானோர் காலக் கணிதம்.
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேவை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!”
– கண்ணதாசன்
திரண்ட கருத்து: பாடலைப் பத்தி வடிவில் எழுதுக.
மோனை நயம்: கவிஞன்- கருப்படு
எதுகை நயம்: கருப்படு – பொருளை – உருப்பட
இயைபு நயம்: தெய்வம் – செல்வம்
அணி நயம்: உருவக அணி
3. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
முன்னுரை:
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி படும்பாட்டையும் இங்குக் காண்போம்
வருணனை:
கடலில் கப்பல் சென்றபோது , வெயில் இமை நேரத்தில் மறைந்து மழை பெய்யத் தொடங்கியது. அலைகள் எண்ணெய் பூசியவை போல் மொழுமொழு வென நெளிந்தன. தொங்கான் அப்படியும் இப்படியுமாய்த் தாவிக்குதித்துத் தத்தளித்தது. பறவை – மீன்கள் இருபுறமும் கூட்டம் கூட்டமாய்ப் பறந்தன.
அடுக்குத்தொடர்கள் :
எங்கே எங்கே, ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள், அருவி அருவி, நடுநடுங்கி,விழுவிழுந்து, இருட்டிருட்டு, தாவித் தாவி, கூட்டம் கூட்டமாய், குதி குதித்து
ஒலிக்குறிப்புச் சொற்கள் :
கிடுகிடுக்கும், மொழுமொழுவென, நொறு நிற, மரமரப்பு, சிலு சிலு,கிறு கிறு, மொத்த மொத்தென்று, கெக்கலித்தன,
முடிவுரை:
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி படும்பாட்டையும் இங்குக் கண்டோம்.
II. மொழியை ஆள்வோம்
அ) படித்து சுவைக்க
பாடலில், மரம் என்னும் சொல், இடத்திற்கேற்பப் பொருள் தருவதாய் 11 இடங்களில் இடம்பெற்றுள்ளது. பொருள்களைப் பொருத்திப் படித்துச் சுவைக்க.
“மரமது(1) மரத்தில்(2) ஏறி
மரமதைத்(3) தோளில் வைத்து
மரமது(4) மரத்தைக்(5) கண்டு
மரத்தி(6)னால் மரத்தைக்(7) குத்தி
மரமது(8) வழியே சென்று
வளமனைக் கேகும் போது
மரமது(9) கண்ட மாதர்
மரமுடன்(10) மரம்(11) எடுத்தார்”
– சுந்தரகவிராயர்
ஆ) மொழி பெயர்ப்பு
- 1. If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela
- 2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown
விடைக் குறிப்பு:
1). அவனுக்குப் புரியும் மொழியில் பேசினால், அது அவன் தலைக்குச் செல்லும். நீங்கள் அவருடன் அவரது சொந்த மொழியில் பேசினால் அது அவரது இதயத்தைத் தொடும் – நெல்சன் மண்டேலா
2). மொழி என்பது ஒரு பண்பாட்டின் சாலை வரைபடம். அதன் மக்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்பதை இது உங்களுக்குச் சொல்கிறது – ரீட்டா மே பிரவுன்
இ) பிழைகளைத் திருத்தி எழுதுக:-
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
விடை : தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பதி காரமதை
ஊணிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே”
ஈ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
( குவியல், குலை,மந்தை,கட்டு )
- கற்குவியல்,
- புற்கட்டு,
- பழக்குலை,
- ஆட்டுமந்தை
உ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
- கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
- ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
- நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.
4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.
- பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.
1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
- புவியில் வாழும் மனிதர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்பதைப்போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.
2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
- வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையை வழங்கி மங்காப் பேறு பெற்றான்
3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.
- நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சி கொண்டனர்
4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
- காவில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன
5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்
- ஆவினைப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்
எ) கட்டுரை எழுதுக.
1. குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை வரைக
முன்னுரை:
உலகின் மூத்தமொழி தமிழ். தொன்மையான மொழி அது. அம்மொழியை வளர்த்த சான்றோர்கள் குறித்த கட்டுரை காண்போம்.
பிள்ளைத்தமிழ் :
பிள்ளைத்தமிழ் என்பது, ஒரு குழந்தை போல தெய்வங்கள், அரசர்கள், புலவர்கள் போன்ற பெரியோர்களை உருவகித்து பாடும் சிற்றிலக்கியம் ஆகும். இதில், குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் இருபத்தி ஒரு மாதம் வரை உள்ள பருவங்களை பத்து பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் பாடப்படும். முதல் பிள்ளைத்தமிழ் நூல் ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்.
பரணி :
போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் வெற்றியைப் பாடுவது பரணி. பரணி நூல்களுள் சிறந்த நூல் கலிங்கத்துப் பரணி.
கலம்பகம்:
இறைவன் அல்லது அரசனைத் தலைவனாகக் கொண்டு பலவகைச் செய்யுள்களால் பாடுவது கலம்பகம்.
காப்பியம்:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
நீதி இலக்கியம்:
திருக்குறள், நாலடியார், பழமொழி போன்ற நீதி இலக்கிய நூல்கள் புகழ்ப்பெற்றவை.
முடிவுரை:
தமிழின் சிறப்புகளைத் தமிழ்வளர்த்த சான்றோர் வழியே கண்டோம்.
கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக.
கவிதையில் உள்ள திரண்ட கருத்து. பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம்பெற வேண்டும்.
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
– கா.நமச்சிவாயர்.
மொழியோடு விளையாடு
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ
- தேன்மழை.
- பூ விலங்கு.
- பொன்செய்
- பொன்விலங்கு.
- மணிவிளக்கு
- பூமழை
- மணிமேகலை.
- வான்மழை
எண்ணுப்பெெயர்களைைக் கண்டுபிடித்துத் தமிழ் எண்களில் எழுதுக.
இ) அகராதியில் காண்க.
அடவி, அவல், சுவல், செரு, பழனம், புறவு
விடைக்குறிப்பு:
- அடவி – காடு
- அவல் – பள்ளம் , விளைநிலம்,
- சுவல் – மேட்டு நிலம்,
- செறு- வயல் ,
- பழனம்- பொய்கை,மருதநிலம், நீர் நிலச் சேறு,
- புறவு- காடு , முல்லை நிலம்
தலைப்பு : கல்வி
பூட்டின் திறவுகோல் சாவி
அறிவின் திறவுகோல் புத்தகம்
புத்தகம் நாளும் படித்திடுவோம்
அறிவை நாளும் பெருக்கிடுவோம்
நாளும் பொழுதும் படித்திடு
உலகை நீ வென்றிடு!
செயல் திட்டம்
நீங்கள் வாழும் பகுதியிலுள்ள எவையேனும் ஐந்து பயிர்வகைச் சொற்களுக்கான படத்தொகுப்பை உருவாக்குக.
அ) நிற்க அதற்குத் தக!
இன்சொல் வழி
பிறர் மனம் மகிழும்
அறம் வளரும்
புகழ் பெருகும்
நல்ல நண்பர்கள் சேருவர்
அன்பு நிறையும்
தீய சொல் வழி
பிறர் மனம் வாடும்
அறம் தேயும்
இகழ் பெருகும்
நல்ல நண்பர்கள் விலகுவர்
பகைமை நிறையும்
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
விடை:
- 1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.
- 2. என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.
- 3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்
- 4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்
- 5. பிறருக்கு நன்மை செய்வேன்
- 6. என் நண்பர்களை நல்ல நண்பர்களாக மாற்றுவேன்
படிப்போம், பயன்படுத்துவோம்!
- Vowel – உயிரெழுத்து
- Consonant – மெய்யெழுத்து
- Homograph – ஒப்பெழுத்து
- Monolingual – ஒரு மொழி
- Conversation – உரையாடல்
- Discussion – கலந்துரையாடல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்
சேர்க்கை – இணையவழி விண்ணப்பப்பதிவு
1) முழுப்பெயர் : ……………………..
2) பாலினம். : …………………….
3) கைபேசி எண். : …………………….
4) மின்னஞ்சல் முகவரி : …………………….
5) பிறந்த தேதி : …………………….
6) இரத்த வகை : …………………….
7) தந்தையின் பெயர் : …………………….
8) தாயாரின் பெயர் : …………………….
9) தொடர்பு முகவரி
கதவு எண் : …………………….
தெருவின் பெயர்/ கிராமம் : …………………….
(அல்லது) நகரத்தின் பெயர் : …………………….
மாவட்டம் : …………………….
அஞ்சல் குறியீட்டு எண். : …………………….
10) நிரந்தர முகவரி :
கதவு எண் / தெருவின் பெயர்/ கிராமம் :
(அல்லது) நகரத்தின் பெயர்:
மாவட்டம் :
அஞ்சல் குறியீட்டு எண் :
மாநிலம் : தமிழ்நாடு
இனம் : இந்தியன்
ஆதார் எண். : XXXX XXXX XXXX
உங்கள் புகைைப்படத்தைப் பதிவேற்றவும்.
கடவுச் சொல் : xxxxxxxxxxx
கடவுச் சொல்லை உறுதிபடுத்துக: xxxxxxxxxxx
மாநில அளவில் நடைபெற்ற ‘கலைத்திருவிழா’ போட்டியில் பங்கேற்று ‘கலையரசன்’ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
காந்தி தெரு,
10.06.2025
அன்புள்ள நண்பன் அமுதனுக்கு,
வணக்கம். நான் நலமாக இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? இல்லத்தில் அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற கலைத்திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில் கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய்.
தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாய். இதன் காரணமாகக் ‘கலையரசன்’ பட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் பெற்றுள்ளாய். உனக்குக் கிடைத்த பெருமையால் நண்பர்கள் அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம். உன்னைப் போல பட்டங்கள்பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
இதைப்போல, வரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம்.
இப்படிக்கு,
உன் அன்புள்ள நண்பன்,
மா. குறளரசன்.
உறைமேல் முகவரி
பெறுநர்
ஆ. தமிழ்ச்செல்வன்,
50, அன்னை இல்லம்.
கபிலர் தெரு.
கோயமுத்தூர் 641 001.