You are currently viewing 6th Tamil Lesson 1 Question & Answer – Term 1 New Syllabus 2025

6th Tamil Lesson 1 Question & Answer – Term 1 New Syllabus 2025

6th Tamil Term 1 Lesson 1 Question & Answer – New Syllabus 2025

6th Tamil Term 1 Lesson 1  இன்பத்தமிழ்

Class 6 Standard Tamil Term 1 Lesson 1 book back question and answers new syllabus 2025 – 2026. Tamil Nadu Stard board new revised syllabus 2025-26. 6th All subject book back question & answer. class 6 Tamil Term 1, Term 2, Term 3 Q & A.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்

  1. சமூகம்
  2. நாடு
  3. வீடு
  4. தெரு

விடை : 1. சமூகம்

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______________ ஆக இருக்கும்

  1. மகிழ்ச்சி
  2. கோபம்
  3. வருத்தம்
  4. அசதி

விடை : 4. அசதி

3. “நிலவு + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________

  1. நிலயென்று
  2. நிலவென்று
  3. நிலவன்று
  4. நிலவுஎன்று

விடை : 2. நிலவென்று

4. “தமிழ் + எங்கள்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________

  1. தமிழங்கள்
  2. தமிழெங்கள்
  3. தமிழுங்கள்
  4. தமிழ்எங்கள்

விடை : 2. தமிழெங்கள்

5. “அமுதென்று” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

  1. அமுது + தென்று
  2. அமுது + என்று
  3. அமது + ஒன்று
  4. அமு + தென்று

விடை : 2. அமுது + என்று

6. “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

  1. செம்மை + பயிர்
  2. செம் + பயிர்
  3. செமை + பயிர்
  4. செம்பு + பயிர்

விடை : 1. செம்மை + பயிர்

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக

  1. விளைவுக்கு –  அ. பால்
  2. அறிவுக்கு  –  ஆ. வேல்
  3. இளமைக்கு  –  இ. நீர்
  4. புலவர்க்கு  –  ஈ. தோள்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ.

ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சாெற்களை எடுத்து எழுதுக

  • பேர் – நேர்
  • பால் – வேல்
  • ஊர் – நீர்
  • வான் – தேன்
  • தாேள் – வாள்

குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

  • பாரதிதாசன் தமிழுக்கு அமுதம், நிலவு, மணம் என பெயர்களை சூட்டியுள்ளார்

2. நீங்கள் தமிழை எதனாேடு ஒப்பிடுவீர்கள்?

  • நாங்கள் தமிழை உயிரோடு ஒப்பிடுவோம். காரணம் உயிர் உள்ளவரைதான் உடலக்கு மதிப்பு அது போல தமிழ் உள்ளவரைதான் தமிழனுக்கு மதிப்பு

சிறுவினா

1. ‘இன்பத்தமிழ்’ – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக.

  • ‘தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்

2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

  • நீரின்றி அமையா உலகு என்பது வள்ளுவன் வாக்கு. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது நீராகும்.
    அத்தகைய நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றாங்கரையில் தான் மனித நாகரீகம் வளர்ந்துள்ளது. இதுவே விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு ஆகும்.

சிந்தனை வினா

1. வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்ப டுகிறது? உங்கள் கருத்தைக் கூறுக.

  • வேல் என்பது ஓர் ஆயுதம். அது எல்லா உயிர்களையும் ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.
  • வேல் மனிதர்களின் கரங்களில் இருக்கும்போது மனிதனுக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும்.
  • அதுபோல புலவர்களுக்கு தமிழ் கையிலிருந்தால் தைரியத்தையும். உற்சாகத்தையும் கொடுக்கும். புலவர்களின் பாடல்கள் மனித உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.
  • அதனால்தான் கவிஞர் வேலையும் தமிழையும் ஒப்பிட்டுப்பாடியுள்ளார்.

 

6th Tamil Lesson 1 Question & Answer – Term 1 New Syllabus 2025

Unit 1 – வளர் தமிழ்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் _________________

புதுமை
பழமை
பெருமை
சீர்மை

விடை : பழமை

2. ‘இடப்புறம்’ எனற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________

இடன் + புறம்
இடது + புறம்
இட + புற
இடப் + புறம்

விடை : இடது + புறம்

3. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________

சீர் + இளமை
சீர்மை + இளமை
சீரி + இளமை
சீற் + இளமை

விடை : சீர் + இளமை

4. “சிலம்பு + அதிகாரம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________

சிலம்பதிகாரம்
சிலப்பதிகாரம்
சிலம்புதிகாரம்
சிலபதிகாரம்

விடை : சிலப்பதிகாரம்

5. “கணினி + தமிழ்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

கணினிதமிழ்
கணினித்தமிழ்
கணிணிதமிழ்
கனினிதமிழ்

விடை : கணினித்தமிழ்

6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________

கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்

விடை : பாரதியார்

7. ‘மா’ என்னும் சொல்லின் பொருள்________

மாடம்
வானம்
விலங்கு
அம்மா

விடை : விலங்கு

கோடிட்ட இடத்தை நிரப்புக

  1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ________________விடை : மொழி
  2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ________________விடை : தொல்காப்பியம்
  3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ________________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.விடை : எண்களின்

 

சொற்களைத் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக

தனிச்சிறப்பு

  • விடை : உலக மொழிகளுள் தனிச்சிறப்பு உடையது தமிழ்

நாள் தோறும்

  • விடை : நாம் நாள்தோறும் திருக்குறள் படிப்பது நல்லது.

 

குறுவினா

1. தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?

  • இலக்கியம் தோன்றிய பிறகே இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைமையான நூல்.
  • அப்படியென்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் தோன்றியருக்க வேண்டும். ஆகவே இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மூத்தமொழியென அழைக்கப்படுகிறது.

2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  • சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையபதி, குண்டலகேசி

 

சிறுவினா

1. அஃறிணை , பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?

  • திணையினை உயிர்திணை, அஃறிணை என இரு வகைபடுத்தலாம். உயர்திணை எதிர்ச்சொல் தாழ்திணை என அமைய வேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை – உயர்வு அல்லாத திணை) என பெயரிட்டு அழைக்கிறாேம்.
    பாகற்காய் கசப்பு சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல் இனிப்பு அல்லா காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என அழைக்கிறோம்.

2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

  • தமிழ் இலக்கியங்கள் பலவும் செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை ஆகிய இனிமையான ஓசைகளையும், மோனை, எதுகை, இயைபு என்னும் சொல் இனிமையையும், செய்யளில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கான பொருளும் இனிமை மிகுந்தனவாக அமைந்து உள்ளதால் தமிழை இனியமொழி என்று அழைக்கின்றோம்.

3. தமிழ் மொழியின் சிறப்புக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.

  • மூத்த தமிழ் மொழி என்றும் இளமையானது. எளிமையானது. இனிமையானது, வளமையானது காலத்திற்கேற்ப தன்னை தகுதிப்படுத்திக் கொண்டது
  • காலத்திற்கேற்ப தன்னை தகுதிபடுத்திக் கொண்டது
  • நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது. நம் வாழ்வைச் செழிக்க செய்வது.
  • உலக செம்மொழிகளுள் ஒன்றாக விளங்குவது தமிழ் மொழியின் சிறப்பாகும்
  • உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே
    அவற்றை செம்மைமிக்க மொழி என ஏற்றுக் கொள்ப்பட்டவை ஒரு சில மொழிகளே தமிழ் மொழி அத்தகு சிறப்புமிக்க செம்மொழியாகும்

சிந்தனை வினா

1. தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?

  • தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துக்களை எளிதாக ஒலிக்கலாம்.
  • எழுத்துக்களை கூட்டி ஒலித்தால் தமிழ்படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.
    தமிழ் மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துக்கள் வலஞ்சுழி, இடஞ்சுழி எழுத்துகளாக உள்ளன.
    அவற்றுள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.

  • தமிழில் காலந்தோறும் பலவகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிகாக உருவாகி வருகின்றன.
  • புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றவை தமிழ்கவிதை வடிவங்கள், கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
    தற்போது அறிவியல் தமிழ், கணிணித்தமிழ என்று மேலும் மேலும் வளரந்து கொண்டு வருகிறது. இதனால் தான் தமிழ்மொழியை வளர்மொழி என்று கூறுகிறோம்.

 

6th Tamil Term 1 – Lesson 1 ஒளி பிறந்தது 

தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?

  • போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக்கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன்.
  • பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையை’ கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை அளித்ததாக கூறுகிறார்.

Leave a Reply