Thirikatukam Important Notes – திரிகடுகம்
Thirikatukam Importnat Notes – TET – TNPSC
Thirikatukam Importnat Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes திரிகடுகம். Tamil eligibility test. All Exams very important Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

திரிகடுகம்
-
- ஆசிரியர் : நல்லாதனார்.
- ஊர் : திருத்து – (திருநெல்வேலி மாவட்டம்)
- பாடல்கள் : 100 வெண்பா
- சிறப்புப்பெயர் : செரு அடுதோள் நல்லாதன் : வைணவர்
- சமயம் : வைணவர்
- சுக்கு,மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு திரிகடுகம் எனப்பெயர்.
- அது போன்று திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்துகள் கற்போரின் மனத்திலுள்ள அறியாமையாகிய இருளைப் போக்கி குன்றின் மேலிட்ட விளக்காக திகழ்கிறது.
- திரி என்ற சொல்லுக்கு திரித்தல், விளக்குத்திரி, மூன்று போன்ற பொருள் பல உண்டு
- சுக்கு,மிளகு, திப்பிலி இவை மூன்றும் உடல் நோயைப் போக்கும் செரு அடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
- ஒவ்வொரு பாடலிலும் இம்மூன்றும் (அ) இம்மூவர் என்ற வார்த்தை இடம் பெறுகிறது.
- “அம்மை” என்னும் வனப்பு வகையைச் சார்ந்தது
“உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்
இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறைஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து”
-நல்லாதனார்
சொற்பொருள் :
- நெறி – வழி
- உண்பொழுது – உண்ணும் பொழுது
- தூ உயம் – தூய்மை உடையோர்.
- மாந்தர் – மக்கள்
- தூறு – புதர்
- வித்து விதை
- சாயினும் – அழியினும்
- வனப்பு – அழகு
- ஈயும் – அளிக்கும்
- நிறை ஒழுக்கம் – மேலான ஒழுக்கம்
- தேற்றாதான் – கடைபிடிக்காதவன்
- பால்பற்றி – ஒரு பக்கச் சார்பு (நடுநிலைமையிலிருந்து மாறுதல்)
மேற்கோள்:
-
“நெஞ்சம் அடங்குதல் வீடாகும்”
-
“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதானி”
-
“தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்”
-
“நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்”
-
“கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி”
-
“பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
-
திறன்வேறு கூறிற் பொறையும் அறவினையைக்
-
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்
-
ஊராண்மை என்னும் செருக்கு”

