Elathi Important Notes
ஏலாதி All Exam Important Points
Elathi Important Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes ஏலாதி. Tamil eligibility test. All Exams Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.
ஏலாதி – Elathi Important Notes
-
- ஆசிரியர் : கணிமேதாவியார்
- காலம் : கடைச்சங்க காலம்.
- சமயம் : சமணம்
- பாடல்கள் : 81 வெண்பாக்கள் (சிறப்புப்பாயிரம் தற்சிறப்புப் பாயிரம் உட்பட )
- சிறப்பு : தமிழரின் அருமருந்து.
- ஏலத்தை முதன்மையாகக் கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளே ஏலாதி.
- நான்கு அடிகளில் ஆறு அறக்கருத்துக்களை கூறுகிறது.
- திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே.
- ஏலாதி சமணசமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துக்களை வலியுறுத்துகிறது.
“வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல் நோக்கி வாழ்வான் நுணித்து.”
- இது இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடலாகும்.
சொற்பொருள்:
- மாண்டார் – மாண்புடைய சான்றோர்; நோக்கி – ஆராய்ந்து; நுணங்கிய நூல் – நுண்ணறிவு நூல்கள்.
இலக்கணக் குறிப்பு:
- நூல் நோக்கி – இரண்டாம் வேற்றுமைத் தொகை; பழியில்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
மேற்கோள்:
“தாய்இழந்த பிள்னை தலைஇழந்த பெண்டாட்டி
வாய்இழந்த வாழ்வினார், வணிகம் போய் இழந்தார்
கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்கு ஈந்தார்
வைத்து வழங்கிவாழ் வார்”
- “எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு”