Thirukkural Important Notes
TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes திருக்குறள். Thirukkural is part of the TNPSC Group 2, Group 4 syllabus. The Tamil language section of the TNPSC Group 4 exam includes Thirukkural, specifically focusing on understanding the content and structure of the text. Tamil eligibility test. All Exams very ude full Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.
திருக்குறள் – A to Z All Important Notes
-
திருக்குறள் – திரு + குறள்.
-
வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது.
-
குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர் ஆகும்.
-
திருக்குறள் என்பது அடையடுத்த ஆகுபெயர் ஆகும். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
-
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும், அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.
-
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக அறங்களைச் சொல்லும் நூல் திருக்குறள்.
-
பதினெண் கீழ்க்களாக்கு நூல்களுள் அதிக செய்யுளால் (பாவால்) பெயர்பெற்ற ஒரே நூல் திருக்குறள்.
-
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் 1 3/4 அடியில் ஆன ஒரே நூல் திருக்குறள்.
-
தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல்.
-
இதுவே தமிழர் திருமறை, உலகப் பொதுமறையுமாகும்.
-
எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார
-
திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்வை
-
“குறள்” என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும். அது “திரு” என்ற சிறப்பு அடைமொழி பெற்று நூலைக்குறித்தது
-
மனித வாழ்வின் மேன்மைகளை, வாழ்வியல் நெறிகளை, மனித நாகரீகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே வகுத்துக் காட்டிய நூல்.
-
ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் போன்ற 107 மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. உலகோர் விரும்பிப் படிக்கும் தமிழ்நூலாக விளங்குகிறது.
-
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
-
“பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்” என்னும் பழமொழிகள் இதன் பெருமையை விளக்குவனவாகும். இவற்றுள் “நால்” என்பது நாலடியாரையும் “இரண்டு” என்பது திருக்குறளையும் குறிக்கும்.
- மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறிவுரைதான் திருக்குறள்.
-
உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்.
-
இனம், சாதி, நாடு, குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை திருக்குறள்
-
இந்திய மொழிகளில் தன் ஆற்றல் மிக்க அறக்கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள்.
-
திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல்.
-
இறைக்கோட்பாட்டின் பொதுவான நெறியைத் திருக்குறள் காட்டுகிறது.
-
“அ” கரத்தில் தொடங்கி “ன” கரத்தில் முடியும் நூல்.
-
திருக்குறளின் சிறப்பை எடுத்துக் கூறும் நூல் திருவள்ளுவமாலை. இதில் 55 பாடல்கள் 53 புலவர்களால் பாடப்பட்டுள்ளது.
-
சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா போன்றனவும் குறளின் சிறப்பையே கூறுகின்றன.
-
மலையத்துவாசன் மகள் ஞானப்பிரகாசம் 1812 ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில்வெளியிட்டார்.
-
பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாகத் திருக்குறளைப் பதிப்பித்தவர் இராமானுஜ கவிராயர் (1840)
-
விக்டோரியா மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறார்.
-
திருக்குறயின் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனில் மொழிப்பெயர்த்தார்.
-
திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த ஜி.யு.போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
-
“உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையிலுள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது”.
-
இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள், விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
-
“திருக்குறள் ஒரு வருப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தாற்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று, அது மன்பதைக்கு – உலகுக்கு பொது” – திரு.வி.க.
-
“திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக.
-
உலகத்தார்க்கு தெரிந்திருக்காது” கி.ஆ.பெ.விசுவநாதம்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பொதுநெறி காட்டிய புலவர் திருவள்ளுவர்.
-
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
-
அனைத்து நாட்டினரும், இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துகளைப் படைத்தவர்.
-
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகள் உடையது.
-
9 ஒன்பது இயல்களையும், நூற்றுமுப்பத்துமூன்று(133) அதிகாரங்களையும், ஆயிரத்து முந்நூற்று முப்பது (1330) குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
அறத்துப்பால் – 38 அதிகாரம்
-
-
பாயிரயியல் -4
-
இல்லறவியல்- 20
-
துறவியல் – 13
-
ஊழியல் -1
-
பொருட்பால் – 70 அதிகாரம்
-
-
அரசியல் – 25
-
அங்கவியல் – 32
-
குடியியல் – 13
-
காமத்துப்பால் 25 அதிகாரம்
-
-
கனவியல் – 7
-
கற்பியல் – 18
-
திருக்குறளின் வேறு பெயர்கள்:
- முப்பால்
- இயற்கை வாழ்வில்லம்
- உத்திரவேதம்
- தெய்வநூல்
- பொய்யாமொழி
- வாயுறை வாழ்த்து
- தமிழ்மறை
- அறவிலக்கியம்
- பொதுமறை
- திருவள்ளுவப்பயன்
- வாழ்த்து
- திருவள்ளுவம்
- பொருளுரை
- உலகப்பொதுமறை
- முதுமொழி
- தமிழர் திருமறை
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:
- தெய்வப்புலவர்
- மாதானுபங்கி
- வள்ளுவநாயனார்
- செந்தாப் போதார்
- தேவர்
- பெருநாவன்
- முதற்பாவலர்
- பொய்யில் புலவர்
- நான்முகள்
திருவள்ளுவர் காலம்:
- காலம் கி.மு.31 என்று கூறுவர். கணக்கிடப்படுகிறது. இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:
- கிறித்து ஆண்டு (கி.பி)+31 = திருவள்ளுவர் ஆண்டு
- எடுத்துக்காட்டு 2000 +31=2031
- கி.பி. 2000 ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2031 என்று கூறுவோம்.
- தைத் திங்கள் 2ம் நாளைத் திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு அறிவித்துக் கொண்டாடி வருகிறது.
திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்:
“தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமேலழகர் திருமலையார்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்.”
என்று ஒரு பழம்பாடல் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களின் பட்டியலொன்றைத் தருகிறது.
- தருமர்
- தாமத்தர்
- பரிதி
- திருமலையர்
- மல்ல்ர்
- மணக்குடவர்
- நச்சர்
- பரிமேலழகர்
- பரிப்பெருமாள்
- காளிங்கர்
பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது ஆகும்.
- மணக்குடவர், பரிமேலழகள், பரிதி, பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய ஐவரின் உரை மட்டுமே கிடைத்துள்ளது.
- இராமானுஜக் கவிராயர், திரு.வி.க, நாமக்கல் ராமலிங்கனார், சரவண பெருமாள் ஐயர், தண்டபாணி தேசிகர், அரசஞ் சண்முகனார், புலவர் குழந்தை, பாரதிதாசன், மு.வரதராசனார், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் பிற்காலத்தே உரையெழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
-
- திருக்குறள் உரைவளம் – தண்டபாணி தேசிகர்
- திருக்குறள் உரைக்களஞ்சியம் -தண்டபாணி தேசிகர்
- திருக்குறள் நுண்பொருள் மால – காரிரத்தினக் கவிராயர்
- திருவள்ளுவ மாலை -புலவர் பலர் பாடியது –
- திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு -கி.வா.ஜகந்நாதன்
- வள்ளுவம் -வ.சுப.மாணிக்கம்
- வாழும் வள்ளுவம் -வ.செ.குழந்தைசாமி
- வள்ளுவர் கண்ட நாடும் காலமும் -தெ.பொ.மீ.
-
திருக்குறள் மணிவிளக்க உரை – க.அப்பாதுரையார் (பெரு விளக்க நூல்)
-
திருக்குறள் நடையியல் -இ.சுந்தரமூர்த்தி
-
சொல்வலை வேட்டுவர் -இ.சுந்தரமூர்த்தி
-
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம், குவளை
-
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
-
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
-
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் -குறிப்பறிதல்
-
திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
-
திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
-
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
-
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
-
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப் (1886)
மொழிபெயர்ப்பு:
-
-
இலத்தீன் -வீரமா முனிவர்
-
ஜெர்மன் – கிரால்
-
ஆங்கிலம் -ஜி.யு.போப்
-
பிரெஞ்சு – ஏரியல்
-
வடமொழி -அப்பாசாமி தீட்சதர்
-
இந்தி -பி.டி.ஜெயின்
-
தெலுங்கு – வைத்யநாத பிள்ளை
-
-
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர் கே.எம். பாலசுப்பிரமணியம் தமிழக அரசு ஆற்றிய தொண்டு.
-
திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
-
வள்ளுவர் கோட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் கட்டுமானப்பணி 1973 ல் தொடங்கி 1976 ல் முடிக்கப்பட்டது.
-
திருவாரூர்த்தேர் போன்ற வடிவமுடையது. தேரின் மொத்த உயரம் – 128 அடி
-
கருங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் இரண்டு தேரை இழுத்து செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
-
வள்ளுவர் கோட்ட தேரின் இரு பக்கங்களிலும் நான்கு சக்கரங்கள் வீதம்
-
யானைகள் அமைந்துள்ளது. தேரின் மையத்தில் எண் கோண வடிவ கருவறையினுள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
-
வள்ளுவர் கோட்டத்தில் குறள்கள் பளிங்குகற்களில் பொறிக்கப்பட்டள்ளன.
-
அறத்துப்பால் – கருப்பு நிற பளிங்கு கல்
-
பொருட்பால் – வெண்ணிற பளிங்கு கல்
-
இன்பத்துப்பால் -செந்திர பளிங்கு கல்
-
-
இந்தியாவின் தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உள்ளது.
-
திருவள்ளுவர் சிலை 1990 ஆம் ஆண்டு வடிவமைக்க தொடங்கி 2000 ஆம்
-
ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாளன்று திறந்து வைக்கப்பட்டது. பாறையிலிருந்து சிலையின் உயரம் 133 அடி ஆகும். இதில்
-
சிலையின் பீடம் – 38 அடி உயரம் (அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கிறது) சிலையின் உயரம் 95 அடி உயரம் (பொருட்பால், இன்பத்துப்பால் அதிகாரங்களை குறிக்கிறது)
-
திருவள்ளுவர் சிலையின் கீழ் உள்ள பீடத்தின் உள்ளே உள்ள மண்டபத்தில் திருக்குறள்கள் தமிழ், ஆங்கில மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளன.
-
திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3 முதல் 8 டன் வரையுள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
-
திருவள்ளுவர் சிலை மொத்தம் 7000 டன் எடை கொண்டது.
-
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை தமிழின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.
சிறப்புகள்:
தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்
–கபிலர்
வள்ளுவரும் தம்குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து
–பரனர்
உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு
–மாங்குடி மருதனார்
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே
– முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால்
வையத்து வாழ்வார் மனத்து
–தேனீக்குடி கீரனார்
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் – வித்தகன்
தெய்வப் புலவர் திருவள் ளுவர்சொன்ன
பொய்யில் மொழிஇருக்கும் போது
–கவிமணி
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம்
– கவிமணி
நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில்
ஓதித்தொழுது எழுக ஓர்ந்து
– கவிமணி
“வெல்லாத தில்லை திருவள்ளுவன்வாய் விளைந்த வற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே”
– பாரதிதாசன்
“என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போனம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்”
–இறையனார்.
“அணுவை துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்”
–ஒளவையார்.
“தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந் தொறும்உடணர் வாகும் வண்ணம்
கொள்ளு மறம்பொருள் இன்ப மனைத்தும் கொடுத்த திரு
வள்ளுவனைப் பெற்ற தால்பெற்ற தேபுகழ் வையகமே”
– பாரதிதாசன்
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு“
–பாரதியார்
கீழ்க்கண்ட குறளைப் படிக்கும் போது உதடுகள் ஒட்டும்; இதன் பொருளோ இறைவனைப் பற்றி நிற்கும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு – குறள், 350
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வந்த குறள்
அறன்ஈனும் இன்பமும் ஈனும்
திறனறிந்து தீதின்றி வந்த பொருள் – குறள், 754