11th Tamil Guide Unit 5

11th Tamil Guide Unit 5.2

11th Tamil Guide Unit 5.2

இயல் 5.2 சீறாப்புராணம்

Book Back | Additional Question and Answers

11th Tamil Samacheer kalvi guide Lesson 5. Unit 5.2 Book Back and Additional Question Answers.  இயல் 5.2 சீறாப்புராணம். +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 5 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. TNPSC, TNTET Materials. 11th Tamil Guide Unit 5 Full Answer Key

11th Tamil Guide Unit 5 Book Back and Additional Question – Answers  இயல் 5.2 சீறாப்புராணம்

11th Tamil Guide Unit 5

 
11th Tamil Guide Unit 5.2

மாளிகை நகரம்

வடவரை பொருவென மலிந்த மேனிலைக்
கடலென ஒலித்ததா வணத்தின் கம்பலைப்
புடவியை அளந்தன போன்று வீதிகள்
இடனற நெருங்கின மாடம் எங்குமே

கொடை நகரம்

கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணிய(து)
இலையெனா(து) அரும்பொருள் யாவும் எய்தலால்
மலைவிலா(து) அருளிய வள்ளி யோரினும்
தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர்

பொன்னகரம்

தோரணத் தொடும் கொடிக்காடு துன்னலால்
வாரண மதமலை மலிந்து நிற்றலால்
காரணத் தொம்வர வாறு காணலால்
பூரணப் புவியெனப் பொலிந்த பொன்னகர்

செம்மை நகரம்

தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும்
மானமும் பூத்ததிண் மறனும் வெற்றியும்
ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்
தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்.
-உமறுப்புலவர்

சொல்லும் பொருளும்

  • வரை- மலை;
  • கம்பலை – பேரொலி; உலகம்; எய்துதல் பெறுதல்; புடவி
  • வாரணம் – யானை;
  • பூரணம் – நிறைவு:
  • நல்கல் – அளித்தல்;
  • வதுவை – திருமணம்;
  • கோன் அரசன்;
  • மறுவிலா – குற்றம் இல்லாத;
  • துன்ன – நெருங்கிய;
  • பொறிகள் – ஐம்புலன்;
  • தெண்டிரை – தெள்ளிய நீரலை; விண்டு திறந்து;
  • மண்டிய – நிறைந்த:
  • காய்ந்த – சிறந்த:
  • தீன் – மார்க்கம்.

பலவுள் தெரிக

1.உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு…………….
அ) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி
ஆ) வினைத்தொகை, இடவாகுபெயர்
இ) வினையெச்சம், வினைத்தொகை
ஈ) பெயரெச்சம், பண்புத்தொகை
Answer:
அ) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி
 
 2.சரியானவற்றைத் தேர்ந்தெடு.
அ) வரை – மலை
ஆ) வதுவை – திருமணம்
இ) வாரணம் – யானை
ஈ) புடவி – கடல்
i) அ, ஆ, இ – சரி; ஈ – தவறு
ii) ஆ, இ, ஈ – சரி; அ வறு
iii) அ, இ, ஈ – சரி; ஆ – தவறு
iv) அ, ஆ, ஈ – சரி; தவறு
Answer:
i) அ, ஆ, இ – சரி; ஈ – தவறு
 

குறுவினாக்கள்

1.மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
மேருமலைபோல் மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன.
அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி, பெருங்கடல்போல் இருந்தது.
மதீனா நகரின் வீதிகள், பிரபஞ்சம்போல் பரந்து விரிந்திருந்தன.
அத்துடன் பெரிய மாளிகைகள் சிறிதும் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்திருந்தன.
தோரணங்களும், கொடிகளும் கட்டப்பட்டுப் பொன்னகர்போல் பொலிந்தது.
அதனால், மதீனா நகரம், ‘ஒரு மாளிகை நகரம்’ என்பது உறுதிப்பட்டது.
2.“ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்”- இப்பாடலடிகளில் ஒளிரக் காய்த்தது எது? பழுத்தது எது?
மதீனா நகரில், திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், அவ்வெற்றியைத் தரும் குறைவற்ற ஊக்கமும் காய்த்திருந்தன; தீன் என்னும் செல்வம் பழுத்திருந்தது.
சிறுவினாக்கள்
1.“கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது” – யாது?
மதினா நகரில் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டோர் நிறைந்திருந்ததால் கலைஞர்களும், மறையவர்களும் தாம் எண்ணிய பொருள்வளத்தைக் கொண்டிருந்தனர் என்பதாம்.
 
2.“மறுவிலா அரசென இருந்த மாநகர்” – உவமையைப் பொருளுடன் விளக்குக.
‘குற்றம் குறை இல்லாத அரசன் ஆட்சி நடத்துவதுபோல’ என்பது உவமையின் பொருள்.
மதீனா நகருக்கு இது உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
மதீனா நகரில் பகை, வறுமை, நோய் முதலானவை இல்லை. அவை ஓடி மறைந்த நிலையில் குறைவில்லாத மானுட அறம், அந்நகரில் செங்கோலாட்சி புரிந்தது. அதனால் மதீனா நகரம், சிறந்த அரசைப்போல் பொலிவுடன் இருந்தது என, உமறுப்புலவர் கூறுகிறார்

நெடுவினா

1.“மதீனா நகரம் ஒரு வளமான நகரம்” என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
மதீனா நகர வீதிகள் :
மதீனா நகரில், மாளிகைகளின் மேல்மாடங்கள், மேருமலைபோல் உயர்ந்திருந்தன. அங்காடித் தெருக்களில் பெருங்கடல் ஒலிபோல் மக்கள் ஆரவாரம் செய்தனர். வீதிகள், பிரபஞ்சம்போல் பரந்து விரிந்து கிடந்தன்
கொடைநகர் மதீனா :
கலைஞர்களும் மறையவர்களும் எண்ணிய வளத்தைப் பெறும் வகையில் வாரி வழங்கும் வள்ளல்கள் பலர், பழமையான மதீனா நகரிலும் இருந்தனர். அவர்களால் மதீனா மேலும் புகழ்பெற்றது. தோரணங்களாலும் கொடிகளாலும் மதீனா நகரின் வீதிகள் ஒழுங்குடன் காணப்பட்டன.
செங்கோலாட்சி நகர் :
பொன்னகர்போல் விளங்கிய மதீனா நகர மாளிகைகள், வெண்சுண்ணச் சாந்தில் பொலிந்து ஒளிர்ந்தன. வீதிகளில் புதிய மலர்கள், சிந்திக் கிடந்தன. விருந்தினர் உபசரிக்கப்பட்டதால், வீடுகள் திருமண வீடுகள்போல் பொலிந்தன. பகை, வறுமை, நோய் இல்லாத மதீனா நகரம், மானுட அறத்தைக் கடைப்பிடிக்கும் செங்கோல் ஆட்சி புரிவதுபோல் பெரும்புகழ் பெற்றுச் சிறந்தது.
தீன் பழுத்த நகர் மதீனா :
பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் நிறைந்திருந்ததால், மணி, முத்து அணிகளைச் சிதறும் கடல்போல், மதீனா நகர் காட்சி தந்தது. தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம் எங்கும் பூத்துத் திண்ணிய வலிமை நல்கும் வெற்றி குறையாத ஊக்கம் செழித்துத் ‘தீன்’ என்னும் பழம் பழுத்துச் செம்மை பொருந்திய நகராகத் திகழ்ந்த து.

இலக்கணக் குறிப்பு

  • மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த, படைத்த – பெயரெச்சங்கள்
  • இடன் (இடம்) – ஈற்றுப்போலி
  • பெரும்புகழ், தெண்டிரை, அரும்பொருள், தொன்னகர், புதுமலர் – பண்புத்தொகைகள்
  • பொன்னகர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • மாநகர், உறுபகை – உரிச்சொற்றொடர்கள்
  • யாவும், ஐந்தும் – முற்றும்மை
  • சிந்தி, பணிந்து – வினையெச்சம்
  • வறுமைநோய் – உருவகம்
  • ஆரமும் பூணும் தானமும் ஒழுக்கமும் தவமும் மறனும் வெற்றியும் – எண்ணும்ளைகார்.
  • தரும் – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  • மலைவிலா, தொலைவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
  • இடுவிருந்து – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. மலிந்த – மலி + த் (ந்) + த் + அ
  • மலி – பகுதி,
  • த் – சந்தி,
  • ‘ந்’ ஆனது விகாரம்,
  • த் இறந்தகால இடைநிலை,
  • அ – பெயரெச்ச விகுதி.
2. நெருங்கின – நெருங்கு + இன் + அ
  • நெருங்கு – பகுதி,
  • இன் – இறந்தகால இடைநிலை,
  • அ – பெயரெச்ச விகுதி.
3. அளந்தன – அள + த் (ந்) + த் + அன் அ
  • அள – பகுதி,
  • த் – சந்தி,
  • ‘ந்’ ஆசாது விகாரம்,
  • த் – இறந்தகால இடைநிலை,
  • அன் – சாரியை,
  • அ – பலவின்பால் வினைமுற்று விகுதி.
4. படைத்த – படை + த் + த் அ
  • படை – பகுதி,
  • த் – சந்தில் – இறந்தகால இடைநிலை,
  • அ – பெயரெச்ச விகுதி.
5. மலிந்து – மலி + த்(ந்)+த் + உ
  • மலி – பகுதி,
  • த் சந்தி,
  • ‘ந்’ ஆனது விகாரம்,
  • த் – இறந்தகால இடைநிலை,
  • உ – வினையெச்ச விகுதி.
6. பொலிந்த பொலி + த் (ந்) + த் + அ
  • பொலி – பகுதி,
  • த் – சந்தி,
  • ‘ந்’ ஆனது விகாரம்,
  • த் – இறந்தகால இடைநிலை,
  • அ பெயரெச்ச விகுதி.
7. உண்டார் – உண் + ட் + ஆர்
  • மண் – பகுதி,
  • ட் – இறந்தகால இடைநிலை,
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.
8. மண்டிய – மண்டு + இ(ன்) + ய் + அ
  • மண்டு – பகுதி,
  • இன் – இறந்தகால இடைநிலை,
  • ‘ன’ கரம் புணர்ந்து கெட்டது,
  • ய் – உடம்படு மெய்,
  • அ – பெயரெச்ச விகுதி.
9. சிந்தி – சிந்து + இ
  • சிந்து – பகுதி,
  • இ – வினையெச்ச விகுதி.
10. பணிந்து – பணி + த் (ந்) + த் + உ
  • பணி – பகுதி,
  • த் – சந்தி,
  • ‘ந்’ ஆனது விகாரம்,
  • த் – இறந்தகால இடைநிலை,
  • உ – வினையெச்ச விகுதி.
11. இருந்த – இரு + த் (ந்) + த் + அ
  • இரு – பகுதி,
  • த் – சந்தி,
  • ‘ந்’ ஆனது விகாரம்,
  • த் – இறந்தகால இடைநிலை,
  • அ – பெயரெச்ச விகுதி.
12. காய்ந்த – காய்த் (ந்) + த் + அ
  • காய் – பகுதி,
  • த் – சந்தி,
  • ‘ந்’ ஆனது விகாரம்,
  • த் – இறந்தகால இடைநிலை,
  • அ – பெயரெச்ச விகுதி.
13. பழுத்த – பழு + த் + த் + அ
  • பழு – பகுதி,
  • த் – சந்தி,
  • த் – இறந்தகால இடைநிலை,
  • அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

  1. அரும்பொருள் – அருமை + பொருள் “ஈறுபோதல்” (அரு + பொருள்), “இனமிகல்” (அரும்பொருள்).
  2. மனையென – மனை + என “இ ஈ ஐ வழி யவ்வும்” (மனை + ய் + என) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மனையென ).
  3. மலைவிலாது – மலைவு + இலாது “முற்றும் அற்று” (மலைவ் + இலாது) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மலைவிலாது).
  4. தொலைவிலா – தொலைவு + இலா “முற்றும் அற்று” (தொலைவ் + இலா) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தொலைவிலா).
  5. குறைவற – குறைவு + அற  “முற்றும் அற்று” (குறைவ் + அற) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (குறைவற).
  6. கம்பலைப்புடவி – கம்பலை + புடவி “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (கம்பலைப்புடவி).
  7. கடலென – கடல் + என “உடல்மேல் உயிர்வந்து இன்றுவது இயல்பே” (கடலென ).
  8. இடனற – இடன் + அற “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (இடனற).
  9. பெரும்புகழ் – பெருமை + புகழ் “ஈறுபோதல் (பெரு + புகழ்), “இனமிகல்” (அரும்பொருள்).
  10. தொன்னகர் – தொன்மை + நகர் “ஈறுபோதல்” (தொன் + நகர்) ”னல முன் றனவும் ஆகும் தநக்கள்” (தொன்னகர்).
  11. பொன்னகர் – பொன் + நகர் ”னல முன் றனவும் ஆகும் தநக்கள்” (பொன்னகர்).
  12. புதுமலர் – புதுமை + மலர் “ஈறுபோதல்” (புதுமலர்).
  13. மனையென – மனை + என “இ ஈ ஐ வழி யவ்வும்” (மனை + ய் + என) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மனையென )
  14. அரசென – அரசு + என “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அரச் + என) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அரசென ).
  15. ஒண்ண கர் – ஒண்மை + நகர் “ஈறுபோதல்” (ஒண் + நகர்) “ணௗ முன் டணவும் ஆகும் தநக்கள்” (ஒண்ண கர்).
  16. குறைவற – குறைவு + அற “முற்றும் அற்று ஒரோ வழி” (குறைவ் + அற) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (குறைவற).

நூல்வெளி

இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை என்பது பொருள். புராணம் வரலாறு நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனி அகமது மரைக்காயர் இதன் தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார். உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர். நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை ஆதரித்தனர்.

கூடுதல் வினாக்கள்

1.நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் …………….
அ) சின்ன ச் சீறா
ஆ) முகமாழிமாலை
இ) சீறாப்புராணம்
ஈ) தம்பாவணி
Answer:
இ) சீறாப்புராணம்
 
2.பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த நகர் அ) பாக்தாத் நகர் …………….
ஆ) மக்கா நக்இ
ஆ) மக்கா ந ‘
இ) மதீனா நகர்
ஈ) முத்து நகர்
Answer:
இ) மதீனா நகர்
 
3.மதீனா நகர மக்கள், தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறுவது …………….
அ) ஆரணிய காண்டம் –
ஆ) விலாதத்துக் காண்டம்
இ) நுபுவ்வத்துக் காண்க
ஈ) ஹிஜிரத்துக் காண்டம்
Answer:
ஈ) ஹிஜிரத்துக் காண்டம்
 
 4. ‘சீறத்’ என்னும் ஆபுசசொல், …………….எனத் திரிந்தது.
அ) சிறா 17
ஆ) சீரா
இ) சீற்
ஈ) சீறா
Answer:
ஈ) சீறா
 
5.‘வாழ்க்கை’) என்னும் பொருளை உணர்த்தும் சொல் …………….
அ) சீறக்
ஆ) புராணம்
இ) சீறா
ஈ) சீரா
Answer:
இ) சீறா
 
6. உமறுப்புலவர், சீறாப்புராணத்தை வள்ளல் – வேண்டுகோளுக்கிணங்கி இயற்றினார்.
அ) சடையப்பர்
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) சீதக்காதி
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) சீதக்காதி
 
7. ‘முதுமொழிமாலை’யை நபிகள்நாயகம்மீது பாடியவர்
அ) பனு அகமது மரைக்காயர்
ஆ) அப்துல்காசிம் மரைக்காயர்
இ) கடிகை முத்துப் புலவர்
ஈ) உமறுப்புலவர்
Answer:
ஈ) உமறுப்புலவர்
 
8. எட்டயபுரத்தின் அரசவைப் புலவராகப் பதவி வகித்தவர்
அ) சீதக்காதி
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) உமறுப்புலவர்
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) உமறுப்புலவர்
 
9. ‘சின்னச் சீறா’ என்னும் நூலைப் பாடியவர்
அ) சீதக்காதி
ஆ) கடிகை முத்துப் புலவர்
இ) பனு அகமது மரைக்காயர்
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) பனு அகமது மரைக்காயர்
 
10. கடிகை முத்துப் புலவரின் மாணவர்
அ) சீதக்காதி
ஆ) அப்துல்காசிம்
இ) பனு அகமது
ஈ) உமறுப்புலவர்
Answer:
ஈ) உமறுப்புலவர்
 
11. முகம்மது நபி, மதீனாவிற்கு யாருடன் சென்றார்?
அ) அகுமதுவுடன்
ஆ) அப்துல்காசீமுடன்
இ) அபூபக்கருடன்
ஈ) பனு அகமதுவுடன்
Answer:
இ) அபூபக்கருடன்
 
12. மதீனா நகரின் வீதிகள், — போன்று பரந்திருந்தன.
அ) குறிஞ்சி
ஆ) மேருமலை
இ) முல்லை
ஈ) பிரபஞ்சம்
Answer:
ஈ) பிரபஞ்சம்
 
13. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள்
அ) அப்துல்காசிம் மரைக்காயர், பனு அகமது
ஆ) சீதக்காதி, பனு அகமது மரைக்காயர்
இ) வள்ளல் சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயா
ஈ) வள்ளல் சீதக்காதி, கடிகை முத்துப் புலகர்
Answer:
இ) வள்ளல் சீதக்காதி, அப்துல்க் சிம் மரைக்காயர்
 
14. உமறுப்புலவர், நபிகள் மீது பாடிய நூல்கள்
அ) தேம்பாவணி, சீறாப்புராணம்
ஆ) சீறாப்புராணம், முதுமொழிமாலை
இ) முதுமொழிமாலை, நொண்டி நாடகம்
ஈ) தேம்பாவணி, முதுமொழிமாலை
Answer:
ஆ) சீறாப்புராணம் முது மொழிமாலை

கூடுதல் குறுவினாக்கள்

1. மதீனா நகரம், எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
மாளிகைநகரம், கொடைநகரம், பொன்னகரம், மனைநகரம், மாநகரம், ஒண்ண கரம், செம்மைநகரம் என்றெல்லாம் மதீனா நகரம் அழைக்கப்படுகிறது.
 
2. நபிகள் நாயகம், மதீனாவுக்கு எவ்வாறு சென்றார்?
மதீனா நகர மக்களின் அழைப்பை ஏற்று, தம் துணைவரான அபூபக்கர் முதலானவர்களுடன் முல்லை, குறிஞ்சி நிலங்களைக் கடந்து, நபிகள் நாயகம் மதீனாவுக்குச் சென்றார்.
 
3. சீறாப்புராணம் – பொருள் தருக.
‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லின் திரிபான ‘சீறா’ என்பதற்கு, ‘வாழ்க்கை ‘ என்பது பொருள். ‘புராணம்’ என்பது பழைய வரலாறு. எனவே, சீறாப்புராணம் என்பதற்கு, “நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது” என்பது பொருள்.
 
4. மதீனா நகரத்தை எவை தீண்டவில்லை?
மதீனா நகரத்தைப் பகை, வறுமை, நோய்கள் தீண்டவில்லை.

கூடுதல் சிறுவினாக்கள்

1. ‘பூரணப் புவி’ என மதீனா பொலிந்ததை எழுதுக.
தோரணங்களாலும் கொடிகளாலும் மதீனா நகர வீதிகள், காடுகள் போல் நெருங்கி இருந்தன.
அவ்வீதிகளில் மலைபோன்ற யானைகள் நிறைந்திருந்தன. வீதிகள் யாவும் ஒழுங்குடன் காணப்பட்டன.
இவற்றால் பொன்போல் பொலிந்த மதீனா நகரமானது, ‘பூரணப் புவி’ எனப் பொலிந்தது.
2. மதீனா நகர், எவற்றால் ஒளி பெற்றுத் திகழ்ந்தது?
அலைவீசும் கடலானது முத்துகளையும் பல்வேறு அணி வகைகளையும் சிதறுவதுபோல், மதீனா நகரத்தில் வாழ்ந்த மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசினார்கள். பல்வேறு பொருள் வளத்தால் நிறைந்திருந்ததால், தேன் உண்டவர் மயங்குவதுபோல் மதீனா நகர், ஒண்ணகராய் ஒடியற்றுத் திகழ்ந்தது.
3. மதீனா, செம்மையான நகராகத் திகழ்ந்தமையை விளக்குக.
தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம் முதலானவை, மதீனா நகரில் பூத்திருந்தன.
திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், வெற்றியைத் தரும் குறைவற்ற ஆக்கமும் காய்த்திருந்தன.
தீன் என்னும் செல்வமும் பழுத்திருந்ததால் மதீனா, செம்மை பொருந்திய நகரமாக இருந்தது.
4. சீறாப்புராணம் குறித்துக் குறிப்பெழுதுக.
நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ‘சீறாப்புராணம்’.
வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்கி, உருதுப்புலவர் இதனை இயற்றினார்.
இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையான நாக விளங்குவது சீறாப்புராணம்.
இது, விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என மூன்று காண்டங் களையும், 92 படலங்களையும், 5027 விருத்த பாடல்களையும் பெற்றுள்ளது.
5. உமறுப்புலவர் குறித்துக் குறிப்பெழுதுக.
இசுலாமியத் தமிழ்ப்புலவர் உமறுப்புலவர்
இவர், எட்டயபுர அரசவைப் புலவர் கடிகைமுத்துப் புலவரின் மாணவர்.
வள்ளல் சீதக்காதியின் வேண்டுதலால், சீறாப்புராணத்தைப் பாடியவர்.
நபிகள் நாயகத்தின்மீது ‘முது மொழிமாலை’ என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
வள்ளல் சீதக்காதியும், இதுலகாசிம் மரைக்காயரும் உமறுப்புலவரை ஆதரித்தனர்.

Leave a Reply