You are currently viewing 11th Tamil Public Exam Important Questions 2022

11th Tamil Public Exam Important Questions 2022

11th Tamil Public Exam Important Questions 2022

11th Standard Tamil Most Important Questions Based on Reduced Syllabus 2022. 11th Public Exam Model Question Paper 2022. 11th Tamil Samacheer kalvi Full Guide – Click Here.

11th Tamil Public Exam Important Questions 2022

11th Tamil Public Exam Important Questions 2022

குறுவினாக்கள்

  1. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
  2. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
  3. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் – இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
  4. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?
  5. ‘அழகிய பெரியவன்’ – குறிப்பு வரைக.
  6. ‘ஏதிலிக்குருவிகள்’ காட்சிப்படுத்தும் அவலம் யாது?
  7. காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?
  8. தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
  9. தீயினால் சுட்டதைப் ‘புண்’ என்றும் நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?
  10. சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
  11. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
  12. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
  13. மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
  14. எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
  15. ‘திருச்சாழல்’ எங்கு யாரால் பாடப்பட்டது?
  16. அயர்ந்து, எழுந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
  17. தொடர் அமைத்து எழுதுக.
  18. முக்காற் புள்ளி இடம்பெற வேண்டிய இடத்தினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
  19. விளிக்குறி, வியப்புக்குறி வரும் இடங்களை வேறுபடுத்துக.
  20. ‘நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.
  21. உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?
  22. அலைகடல், புதுக்கியவர் – இலக்கணக்குறிப்புத் திருக.
  23. “ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள” – இவ்வடி, எதனைக் குறிப்பிடுகிறது?
  24. இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்து வரிகளில் எழுதுக.
  25. ‘மனோன்மணீயம்’ – குறிப்பெழுதுக.

சிறுவினா

  1. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
  2. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
  3. மொழிமுதல், மொழியிறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
  4. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?
  5. இறகு எழுதியது காவியமானதைப் பிரமிள் பார்வையில் விளக்குக.
  6. பிரமிள் குறித்து நீ அறிவன வை?
  7. “சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
  8. புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
  9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
  10. புகழுக்குரிய குணங்களாக நீவிர் கருதுவன யாவை? புகழின் பெருமையைப் பொதுமறைவழி நின்று கூறுக.
  11. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
  12. “கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது” – யாது?
  13. “மறுவிலா அரசென இருந்த மாநகர்” – உவமையைப் பொருளுடன் விளக்குக.
  14. உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக.
  15. மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?
  16. வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக.
  17. சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?
  18. கலைச்சொல்லாக்கத்திற்கும், அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?
  19. நிறுத்தற் குறிகளின் வகைகளையும், அவை எங்கெங்கு இடம் பெறுதல் வேண்டும் என்பதையும் தொகுத்து எழுதுக.
  20. ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?
  21. கூடுதல் வினாக்கள் ஜீவா சமூக நலனுக்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு குறித்து எழுதுக.
  22. ஜீவா மேடையில் வாழ்ந்த மாமனிதர் என்பதை விவரி.
  23. “உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
  24. பெருங்காடு, உழுதுழுது – பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுக.
  25. ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கார் வாழ்வியலில் மிகுந்துள்ளன. – ஏன்?
  26. திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக?

நெடுவினா

  1. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
  2. ‘திருமலை முருகன் பள்ளு’ கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க.
  3. வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக. (அல்லது) ‘வாடிவாசல்’ என்னும் குறும் புதினம் தமிழர் பண்பாட்டின் அடையாளத்தைப் புலப்படுத்துவதை நிறுவுக.
  4. கொடையில் சிறந்து விளங்க வள்ளுவம் கூறும் வழிகளை ஒப்புரவறிதல் அதிகாரம்வழி நிறுவுக.
  5. ‘அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும்’ – இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.
  6. ‘யானை டாக்டர்’ கதை வானலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.
  7. பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?
  8. “மதீனா நகரம் ஒரு வளமான நகரம்” என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
  9. ‘சிம்பொனி’த் தமிழரும், ‘ஆஸ்கர்’ தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.
  10. சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’ என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக.
  11. பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.
  12. நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.
  13. நர்த்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க.

அணி இலக்கணம்

  • உருவக அணி
  • பிறிது மொழிதல் அணி
  • உவமை அணி
  • சொல் பொருள் பின்வருநிலை அணி

11th Tamil Public Exam Important Questions 2022 Download PDF

Leave a Reply