You are currently viewing 4th Tamil Guide Term 1 Lesson 6

4th Tamil Guide Term 1 Lesson 6

4th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 4th Standard Term 1 Lesson 6 இயல் 6 முயல் அரசன் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

4th Tamil Guide Term 1 Lesson 6 முயல் அரசன்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “பல்லாண்டு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பல் + லாண்டு
  2. பல் + ஆண்டு
  3. பல + ஆண்டு
  4. பல + யாண்டு

விடை : பல + ஆண்டு

2. “செயலாக்கம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. செய + லாக்கம்
  2. செயல் + ஆக்கம்
  3. செயலா + ஆக்கம்
  4. செயல் + லாக்கம்

விடை : செயல் + ஆக்கம்

3. “இப்போது+ எல்லாம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. இப்போதெல்லாம்
  2. இப்போது எல்லாம்
  3. இப்போல்லாம்
  4. இப்போயெல்லாம்

விடை : இப்போதெல்லாம்

4. “பேசி + இருந்தால்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________

  1. பேசியிருந்தால்
  2. பேசியிரு
  3. பேசிஇருந்தால்
  4. பேசவிருந்தால்

விடை : பேசியிருந்தால்

5. “வந்து + இருந்தது” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக் கும் சொல் __________

  1. வந்துஇருந்தது
  2. வந்திஇருந்தது
  3. வந்திருந்தது
  4. வந்தியிருந்தது

விடை : வந்திருந்தது

வினாக்களுக்கு விடையளி

1. முயலின் கவலைக்குக் காரணம் என்ன?

  • தன் மூதாதையரைத் தன் பசிக்கு இரையாக்கிய புலி என்றாவது ஒரு நாள் தன்னையும் தின்று விடுமோ என்பதுதான் முயலின் கவலைக்குக் காரணம் ஆகும்.

2. விலங்குகளின் கூட்டத்தில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டதாக முயல் கூறியது?

  • முயல் புலியிடம், “நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக் கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றின” என்று கூறியது.

3. முயல், தான் அரசன் என்பதை நிரூபிக்க புலியை என்ன செய்யக் கூறியது?

  • முயல், தான் அரசன் என்பதை நிரூபிக்க புலியிடம், தன்னை முதுகில் ஏற்றிக் கொண்டு போகச் சொன்னது.

4. புலியை மன்னித்து விட்டுவிட முயல் கூறிய கட்டுப்பாடு என்ன?

  • புலியை மன்னித்து விட்டுவிட முயல், “உன்னை மன்னித்து விடுகிறேன். நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு” என்ற கட்டுபாட்டினை விதித்தது.

5. விலங்குகள் உண்மையில் எதைக் கண்டு அஞ்சின?

  • விலங்குகள் உண்மையில் புலியைக் கண்டு அஞ்சின

எதிர்ச்சொல்லால் சொற்றொடரை நிறைவுசெய்க

(பழைய, கவலை, மெதுவாக, தொடக்கம், தாழ்ந்த, பொய்)

  1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் _______________ அடைவர்.விடை : கவலை
  2. எப்பொழுதும் உண்மை பேசவேண்டும், பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.விடை : பொய்
  3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின் விடை : தொடக்கம்
  4. கணினி மூலம் கல்வி கற்பது புதியமுறை . கரும்ப லகை மூலம் கல்விகற்றது முறைவிடை : பழைய
  5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது குணம்விடை : தாழ்ந்த
  6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல் பேச வேண்டும்.விடை : மெதுவாக

சரி, தவறு எனச் சரியான குறியிடுக

  1. புலி, முயலின் மூதாதையரைக் கொன்று தின்றுவிட்டது.விடை : சரி
  2. முயல் புலிக்குக் கரும்பு கொடுத்தது.விடை : தவறு
  3. விலங்குகளின் கூட்டம் நடந்த போது புலி தூங்கிக் கொண்டிருந்தது.விடை : தவறு
  4. முயல் புலியிடம் காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் தன்னைக் கண்டு அஞ்சுவதாகக் கூறியது.விடை : சரி
  5. முயல் புலியைக் காட்டிலிருந்து ஆட்சி செய்ய. வேண்டும் எனக் கூறியது.விடை : தவறு

சக்கரம் காட்டும் ஈரெழுத்துச் சொற்கள் என்ன என்பதை கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிக்க.

  1. உலகம் என்பதன் வேறு சொல் ……………………………விடை : பார்
  2. திருவிழா என்றாலே இது இருக்கும் ……………………………விடை : தேர்
  3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் …………………………விடை : ஊர்
  4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை …………………………..விடை : நீர்
  5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் …………………………..விடை : மோர்
  6. மரம், செடி கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவும் …………………………..விடை : வேர்
  7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகளோடு செய்வது ……………………………விடை : போர்
  8. பூத்தொடுக்க உதவுவது …………………………..விடை : நார்

எது முன்னே? எது பின்னே? அகர வரிசைப்படுத்துக.

(பௌத்தம், பெட்டி, போர்வை, படை, பூமி, பிண்ணாக்கு பீர்க்கு, புத்தகம், பைந்தமிழ், பொத்தான்.)

விடை :  படை, பிண்ணாக்கு, பீர்க்கு, புத்தகம், பூமி, பெட்டி, பைந்தமிழ், பொத்தான். போர்வை,  பௌத்தம்

காலியிடங்களைக் கூடையில் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக

(நெல், பால், அகழ், பள்ளி, மகிழ்ச்சி, வள்ளி, மல்லி, அகல், வாள், நாள், யாழ்)

1. பல்லினை மெல்லத் தொடு

விடை : பல்லி, நெல், பால், அல்லி, சொல், அகல்

2. நாவினை உள்ளே தள்ளு

விடை : வாள், தோள், நாள், பள்ளி, வள்ளி, வெள்ளி

3. நாவினைச் சுழற்றி முழக்கு

விடை : அகழ், வாழ், தமிழ், புகழ், யாழ், மகிழ்ச்சி

Leave a Reply