You are currently viewing 6th Social Science History Guide Term 3 Lesson 2

6th Social Science History Guide Term 3 Lesson 2

6th Social Science History Guide Term 3 Lesson 2

6th Standard Social Science History  Term 3 Guide Lesson 2 இந்தியா – மெளரியருக்குப் பின்னர்

6th Standard Social Science Term 2 History Lesson 2 இந்தியா – மெளரியருக்குப் பின்னர் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.

6th Social Science Guide Term 3 Lesson 2 இந்தியா – மெளரியருக்குப் பின்னர் Tamil Medium Book Back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் ________

  1. புஷ்யமித்ரர்
  2. அக்னிமித்ரர்
  3. வாசுதேவர்
  4. நாராயணர்

விடை : புஷ்யமித்ரர்

2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்_____

  1. சிமுகா
  2. சதகர்ணி
  3. கன்கர்
  4. சிவாஸ்வதி

விடை : பல்லவர்

3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

  1. கனிஷ்கர்
  2. முதலாம் கட்பிசஸ்
  3. இரண்டாம் கட்பிசஸ்
  4. பன்-சியாங்

விடை : கனிஷ்கர்

4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

  1. தக்காணம்
  2. வடமேற்கு இந்தியா
  3. பஞ்சாப்
  4. கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

விடை : தக்காணம்

5. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

  1. சிர்கப்
  2. தட்சசீலம்
  3. மதுரா
  4. புருஷபுரம்

விடை : சிர்கப்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

1 கூற்று : இந்தோ-கிரேக்கர்களின், இந்தோ-பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.

காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்

  1. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
  2. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
  3. கூற்று சரி; காரணம் தவறு.
  4. கூற்றும் காரணமும் தவறானவை.

விடை : கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

1 கூற்று 1 : இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.

கூற்று 2 : இந்தோ-கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.

  1. கூற்று ‘1’ தவறு , ஆனால் கூற்று ‘2’ சரி
  2. கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி
  3. இரண்டு கூற்றுகளுமே சரி
  4. இரண்டு கூற்றுகளுமே தவறு

விடை : கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி

2. பொருந்தாததை வட்டமிடுக

புஷ்யமித்ரர், வாசுதேவர், சிமுகா,    கனிஷ்கர்

விடை : ‘கனிஷ்கர்

3. ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்

1. கடைசி சுங்க அரசர் யார்?

விடை : தேவபூதி

2. சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?

விடை : ருத்ரதாமன்

3. மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?

விடை : வாசுதேவர்

4. கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

விடை : புனித தாமஸ்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் __________________விடை : கோண்டோ பெர்னஸ்
  2. தெற்கே __________________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.விடை: அசோகரின்
  3. ஹாலா எழுதிய, நூலின் பெயர் __________________விடை: சட்டசாய் (சப்தசதி)
  4. ___________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.வினட: கசர்மன்
  5. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் __________________ஆகும்.வினட: பெஷாவர் (புருஷபுபரம்)

IV. சரியா ? தவறா ?

  1. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்ததுவிடை : சரி
  2. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.விடை : சரி
  3. குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.விடை : தவறு
  4. ‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டதுவிடை : சரி

V. பொருத்துக

  1. பதஞ்சலி – கலிங்கம்
  2. அக்னிமித்ரர் – இந்தோ-கிரேக்கர்
  3. அரசர் காரவேலர் – இந்தோ-பார்த்தியர்
  4. டெமிட்ரியஸ் – இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
  5. கோண்டோ பெர்னெஸ் – மாளவிகாக்னிமித்ரம்

விடை : 1- , 2 – , 3 – , 4 – , 5 –

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. கடைசி மெளரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?

  • மெளரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.

2. காளிதாசரின் ‘மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.

  • அக்னிமித்ரர் காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார்.

3. கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக

  • கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது. அவர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

கன்வ அரசர்கள்

  • வாசுதேவர்
  • பூமிமித்ரர்
  • நாராயணர்
  • சுசர்மன

4. சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.

  • சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
  • கி.மு .(பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில், தக்காணப் பகுதிகளில் கண்டரா மொழிப்பள்ளியைச் சார்ந்த சமஸ்கிருதம் செழித்தோங்கியது.
  • பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.

5. சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?

  • காந்தாரம், மதுரா, அமராவதி, புத்த கயா, சாஞ்சி, பாகுத் ஆகிய இடங்கள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடங்களுக்கும் பெயர் பெற்றவையாகும்.
  • மதுரா சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச் சிலைகளையும் வடித்தது.

6. முதலாம் கட்பிசஸ்ஸின் சாதனைகளைக் குறிப்பிடுக.

  • குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி
  • இவரேயாவார்.
  • அவர் இந்தோ-கிரேக்க, இந்தோ-பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
  • தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.

7. கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார்.
  • அஸ்வகோஷர், வசுமித்ரர், நாகார்ஜுனர் போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.

VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்

1. மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?

  • மெளரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ-கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
  • அசோகரின் மறைவுக்குப் பின்னர் தெற்கே சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
  • குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்தனர். கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.

2. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

  • புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
  • புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.
  • புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.
  • பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையை புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார். ஆனால் மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார்.
  • கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.
  • மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார். புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர்.
  • அவர் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார

3. கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.

  • சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்ணியாவார்.
  • இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
  • பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இவர்களின் பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
  • கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ள வசிஸ்டபுத்திர புலமாயி நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
  • போகர் கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது

4. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

  • இந்தோ-கிரேக்கர், இந்தோ-சைத்தியர் ஆகியோருக்குப் பின்னர் இந்தோ – பார்த்தியர் வந்தனர்.
  • அதனைத் தொடர்ந்து இவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குஷாணர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • இந்தோ-பார்த்திய அரசு அல்லது கோன்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது.
  • இந்தோ- பார்த்தியர் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிறித்துவ உபதேசியார் புனித தாமசுடன் தொடர்புடையதாகும்.
  • கிறித்துவ மரபின்படி புனித தாமஸ் இந்தியவிற்கு வருகை புரிந்தார்.
  • கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு அவரது வருகையால் மன்னர் கிறித்துவத்தை தழுவினார்.

5. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?

  • மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர்களில் ஒருவராவார்.
  • வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது.
  • இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்துநதி கடந்து மேற்கு உத்தரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன.
  • மிலிந்த பன்கா எனும் நூல் ஒன்று உள்ளது.
  • பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது.
  • மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாகக் கருதப்படுகிறது.

6. சாகர்கள் யார்?

  • இந்தியாவில் இந்தோ-கிரேக்கரின் ஆட்சிக்குச் சாகர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
  • நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.
  • இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்.
  • சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சைத்தியர்கள் ஆவர். சமஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
  • சாகர்களின் ஆட்சியானது மாவோஸ் அல்லது மோகா என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது.
  • அவருடைய தலைநகர் சிர்காப் ஆக இருந்தது.
  • மோரா கல்வெட்டில் அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அவருடைய நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

7. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.

  • கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார்.
  • கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
  • பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.
  • கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்தபோதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.
  • கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார்.
  • மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார்.
  • புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் திபெத், சீனா மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பிவைத்தார்.
  • பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார்.
  • இப்பேரவையில்தான் ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.

Leave a Reply