You are currently viewing 7th Tamil Guide Term 1 Unit 1.5 Book Back Answers

7th Tamil Guide Term 1 Unit 1.5 Book Back Answers

7th Tamil Guide Term 1 Unit 1.5 Book Back Answers

 Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 எங்கள் தமிழ் Solution | Lesson 1.5

7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1, Term 2, Term 3 Book Back and additional Questions and answers download pdf. 7th Tamil Term 1 Lesson 1 Unit 1.5  குற்றியலுகரம், குற்றியலிகரம் Book Answers and solutions. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Guide Term 1 Lesson 1.1

Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 குற்றியலுகரம், குற்றியலிகரம் Solution | Lesson 1.5

 கற்றவை கற்றபின் 

I. ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.

எண்ணுப்பெயர்கள்
  • ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து
குற்றியலுகரச் சொற்கள்
  • ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து

2. குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

வன்தொடர் குற்றியலுகரம்
  • மூன்று
  • எட்டு
  • பத்து
மென்தொடர் குற்றியலுகரம்
  • ஒன்று
  • இரண்டு
  • நான்கு
  • ஐந்து
  • ஒன்பது
உயிர்த் தொடர் குற்றியலுகரம்
  • ஆறு

3. குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.

எண்ணுப்பெயர்கள் மாத்திரை அளவு
  • ஒன்று —- 1 + ½ + ½ = 2
  • இரண்டு —- 1 + 1 + ½ + ½ = 3
  • மூன்று —- 2 + ½ + ½ = 3
  • நான்கு —- 2 + ½ + ½ = 3
  • ஐந்து —- 2 + ½ + ½ = 3
  • ஆறு —- 2 + ½ = 2½
  • ஏழு —- 2 + 1 = 3
  • எட்டு —- 1 + ½ + ½ = 2
  • ஒன்பது —- 1 + ½ + 1 + ½ = 3
  • பத்து —- 1 + ½ + ½ = 2

4. கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.

  • கு – பாகு, வாகு
  • டு – பாடு, சாடு, ஓடு, விடு
  • சு – காசு, வீசு, பேசு
  • து – வாது, கேது, சாது, மாது
  • று – வறு, சேறு, செறு

 மதீப்பீடு 

I. கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து
 
நெடில் தொடர்
  • காசு ஆறு, ஏடு
ஆய்தத் தொடர்
  • எஃகு
உயிர்த் தொடர்
  • விறகு 
வன் தொடர்
  • உழக்கு, எட்டு 
மென் தொடர்
  • பந்து, கரும்பு
இடைத் தொடர்
  • கொய்து

II. பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

1. பசு, விடு, ஆறு, கரு
 
விடை: கரு
 
2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
 
விடை: பஞ்சு
 
3. ஆறு, மாசு, பாகு, அது
 
விடை: அது
 
4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு
 
விடை: அரசு
 
5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு
 
விடை : எஃகு
 

III. குறுவினா

1. ’குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

 
தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்
 
குற்றியலுகம் = குறுமை + இயல் + உகரம்
 

2. குற்றியலிகரம் என்றா ல் என்ன?

 
முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்
 

 மொழியை ஆள்வோம் 

I. கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.

கோதை கவிதையைப் படித்தாள்

II. படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக

  • உயர்திணை – ஆண்பால்
  • அஃறிணை – ஒன்றன்பால்
  • உயர்திணை –  பெண்பால்

III. கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.

வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்
 
உயர்திணை
  • முகிலன்
  • கயல்விழி
  • தலைவி
  • ஆசிரியர்
  • சுரதா
அஃறிணை
  • வயல்
  • குதிரை
  • கடல்
  • புத்தகம்
  • மரம்

IV. தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

  1. இருதிணை : உயர்திணை, அஃறிணை
  2. முக்கனி : மா, பலா, வாழை
  3. முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
  4. நாற்றிசை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
  5. ஐவகைநிலம் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
  6. அறுசுவை : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு

V. கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.

VI. இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

  • 1. அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண் டும்.
  • ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
 
  • 2. மழலை பேசும் மொழி அழகு.
  • இனிமைத் தமிழ் மொழி எமது.
 
  • 3. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடை பழகும்.
  • அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி வழக்கு.

 

  • 4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்
  • எழுத்துகள் தொடர்ந் து நின்று பொருள் தருவது சொல்
 
  • 5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர் .
  • குழந்தையை மெதுவாக நட என்போம்.
 
  • 6. நீதி மன்றத்தில் கொடுப்பது வழக்கு.
  • நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு வழக்கு
 

  நிற்க அதற்குத் தக

I. கலைச்சொல் அறிவோம்.

  • ஊடகம் – Media
  • பருவ இதழ் – Magazine
  • மொழியியல் – Linguistics
  • பொம்மலாட்டம் – Puppetry
  • ஒலியியல் – Phonology
  • எழுத்திலக்கணம் – Orthography
  • இதழியல் – Journalism
  • உரையாடல் – Dialogue

  குற்றியலுகரம், குற்றியலிகரம் – கூடுதல் வினாக்கள்  

1. முற்றியலுகரம் என்றால் என்ன?

  • ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்
 (எ.கா) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
 

2. குற்றிலியலுகரத்தின் வகைகள் யாவை

  • குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்
நெடில்தொடர் குற்றியலுகரம்
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
 
(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு .
 
ஆயுதத்தொடர் குற்றியலுகரம்
ஆ ய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
 
(எ.கா.) எஃகு, அஃது
 
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
 
(எ.கா.) அரசு (ர = ர் + அ) கயிறு (யி = ய் + இ)
ஒன்பது ( ப = ப் + அ) வரலாறு (லா = ல் + ஆ)
 
வன்த்தொடர் குற்றியலுகரம்
வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளை த் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
‘வன்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
 
(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று
 
மென்த்தொடர் குற்றியலுகரம்
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்த்தொடர் க் குற்றியலுகரம்’ எனப்படும்.
 
(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
 
இடைத்தொடர் குற்றியலுகரம்
இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந் து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
 
(எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
 

4. தமிழ் எழுத்துக்களின் வகைகள் யாவை

  • தமிழ் எழுத்துக்களை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிக்கலாம்
 

5. முதலெழுத்துக்கள் என்றால் என்ன?

  • உயிர் பன்னிரணடு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்.
 

6. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.
 
  1. உயிரமெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஒளகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

1. பொருத்துக.

1. நெடில் தொடர் – அ) எஃகு, அஃது
2. ஆய்தத் தொடர் – ஆ) அரசு, ஒன்பது, கயிறு
3. உயிர்த் தொடர் – இ) பாகு, மாசு, பாடு, காது
4. வன்தொடர் – ஈ) பாக்கு, பேச்சு, பாட்டு
 
அ) 1-அ, 2- ஈ, 3-இ, 4-ஆ
ஆ) 1-ஈ, 2-ஆ, 3-இ, 4-அ
இ) 1- இ, 2-அ, 3-ஆ, 4-ஈ
ஈ) 1- அ, 2-இ, 3-ஆ, 4-ஈ
Answer: இ) 1- இ, 2-அ, 3-ஆ, 4-ஈ
 

2. குற்றியலுகரத்தின் வகைகள்

அ) ஆறு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) இரண்டு
Answer: அ) ஆறு
 

3. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) உயிரெழுத்து – 12
ஆ) மெய்யெழுத்து – 18
இ) சார்பெழுத்து – 10
ஈ) தமிழ் எழுத்து – 5
Answer: ஈ) தமிழ் எழுத்து – 5
 

4. குற்றியலுகரம் பெறும் மாத்திரை அளவு

அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) அரை
ஈ) கால்
Answer: இ) அரை
 

5. குற்றியலிகரம் பெறும் மாத்திரை அளவு

அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) அரை
ஈ) கால்
Answer: இ) அரை
 

6. குற்றியலிகரம் பயின்று வந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க.

அ) எஃகு
ஆ) கயிறு
இ) பற்று
ஈ) கொக்கியாது
Answer: ஈ) கொக்கியாது
 

7. பின்வரும் சான்றுகளில் முற்றியலுகரம் அல்லாததைத் தேர்ந்தெடுக்க.

அ) புகு
ஆ) பசு
இ) பந்து
ஈ) ஏழு
Answer: இ) பந்து
 

8. மென் தொடர்க் குற்றியலுகரச் சான்றினைத் தேர்வு செய்க.

அ) எஃகு
ஆ) காது
இ) எய்து
ஈ) மஞ்சு
Answer: ஈ) மஞ்சு
 

9. இடைத் தொடர்க் குற்றியலுகரச் சான்றினைத் தேர்வு செய்க.

அ) எஃகு
ஆ) காது
இ) எய்து
ஈ) மஞ்சு
Answer: இ) எய்து

10. தோப்பியாது, கேண்மியா- ஆகிய சொற்கள் …………….. க்குச் சான்று.

அ) குற்றியலிகரம்
ஆ) நெடில் தொடர் குற்றியலுகரம்
இ) முற்றியலுகரம்
ஈ) குற்றியலுகரம்
Answer: அ) குற்றியலிகரம்
 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

 
  • 1. தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் …………………… உகரம்_
  • 2. முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் …………………….. எனப்படும்.
  • 3. தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ………………. என்பர்.
  • 4. குறில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அசைச் சொல் …………….
  • 5. நெடில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அசைச்சொல் ……………………
  • 6. குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அசைச் சொல் …………………..
  • 7. ஆய்த எழுத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் அசைச் சொல் …………………..
  • 8. சார்பெழுத்து, ……………….. வகைப்படும்.
  • 9. குற்றிலுகரத்தின் வகைகள் …………………….
  • 10. …………………. என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச்சொற்கள் இல்லை.
  • 11. ………….., ………………., …………… ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
 
Answer:
1. குற்றியலுகரம்
2. குற்றியலிகரம்
3. முற்றியலுகரம்
4. கரம்
5. கான்
6. காரம்
7. கேனம்
8. பத்து
9. ஆறு
10. ‘வ்’
11. சு, டு, று
 

குறுவினா

1. குற்றியலுகரத்திற்குச் சான்று தருக.

  • காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு.
 

2. முற்றியலுகரத்திற்குச் சான்று தருக.

  • புகு, பசு, விடு, அது, விடு, வறு.
 

3. குற்றியலிகரத்திற்குச் சான்று தருக.

  • கொக்கியாது, தோப்பியாது, நாடியாது, கேண்மியா, சென்மியா.
 

4. முற்றியலுகரம் என்றால் என்ன? சான்று தருக.

  • தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
  • எ.கா. புகு, பசு, விடு, அது, விடு, வறு.
 

5. முதலெழுத்துகள் யாவை?

  • உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்.

Leave a Reply