You are currently viewing 8th Tamil Guide Unit 2.1

8th Tamil Guide Unit 2.1

8th Tamil Guide Unit 2.1

8th Standard Tamil Samacheer Kalvi Guide 2nd Lesson Book Answers

8th Standard Tamil Guide Lesson 2. இயல் 2.1 ஓடை Book Back and additional Question and answers. 8th Standard Samacheer Kalvi Guide, 8th Tamil Unit 2.1  Answers Notes, 8th Tamil Full Guide book Answers. 8th Tamil book back question iyal 2 you can download 8th Tamil book back question and answer all subjects. 8th Study Materials. 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers. 

8th Tamil Guide Lesson 2 Question and Answers 2.1. ஓடை



“ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்
(ஓடை ஆட…)
 
பாட இந்த ஓடை எந்தப்
    பள்ளி சென்று பயின்ற தோடி! 
எடு போதா இதன்கவிக் கார் 
    ஈடு செய்யப் போரா ரோடி!
(ஓடை ஆட…)
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி 
    நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக் 
கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக் 
குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி
(ஓடை ஆட…)
நெஞ்சில் ஈரம் இல்லார் தாண 
    நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் 
    சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்”
(ஓடை ஆட…)
-வாணிதாசன்
சொல்லும்  பொருளும்
  • தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்
  • பயிலுதல் – படித்தல்
  • ஈரம் – இரக்கம்
  • நாணம் – வெட்கம்
  • முழவு – இசைக்கருவி
  • செஞ்சொல் – திருந்தியசொல்
  • நன்செய் – நிறைந்தை நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  • புன்செய்  – குறைந்தை நீரொல் பயிர்கள்  விளையும் நிலம்
  • வள்ளைப்பாட்டு -நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்

பாடலின் பொருள்

நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்?
நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன், உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

  1. பயிலுதல்
  2. பார்த்தல்
  3. கேட்டல்
  4. பாடுதல்

விடை : பயிலுதல்

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.

  1. கடல்
  2. ஓடை
  3. குளம்
  4. கிணறு

விடை : ஓடை

3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

  1. நன் + செய்
  2. நன்று + செய்
  3. நன்மை + செய்
  4. நல் + செய்

விடை : நன்மை + செய்

4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

  1. நீளு + உழைப்பு
  2. நீண் + உழைப்பு
  3. நீள் + அழைப்பு
  4. நீள் + உழைப்பு

விடை : நீள் + உழைப்பு

5. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

  1. சீருக்குஏற்ப
  2. சீருக்கேற்ப
  3. சீர்க்கேற்ப
  4. சீருகேற்ப

விடை : சீருக்கேற்ப

6. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

  1. ஓடைஆட
  2. ஓடையாட
  3. ஓடையோட
  4. ஓடைவாட

விடை : ஓடையாட

III. குறுவினா

1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

  • ஓடை கற்களில் உருண்டும், தவழந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் கூறுகிறார்?

  • ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முகுக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்

IV. சிறுவினா

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை

  • நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களை செழிக்க செய்கிறது.
  • விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
  • கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
  • குளிர்ச்சியை தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
  • நெஞ்சில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையாழ ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

ஓடை – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதர் வாழ்வு _______________ இயைந்தது.
விடை : இயற்கையோடு
2. தமிழகத்தின் _____________ என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்
விடை : வேர்ட்ஸ்வொர்த்
3. பிரெஞ்சு அரசு கவிஞர் வாணிதாசனுக்கு _____________ வழங்கியுள்ளது.
விடை : செவாலியர் விருது
4. _____________ என்று அழைக்கப்படுபவர் கவிஞர் வாணிதாசன்
விடை : பாவலர்மணி

II. குறுவினா

1. வள்ளைப்பாட்டு என்றால் என்ன?

  • பெண்கள் நெல் குத்தும்போது பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு ஆகும்

2. நன்செய், புன்செய் நிலம் பற்றி எழுதுக

  • நன்செய் நிலம் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  • புன்செய் நிலம் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

3. நம் மனத்தை மயக்க வல்லவை எவை?

  • கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை.

III. சிறுவினா

1. வாணிகதாசன் எழுதியுள்ள நூல்கள் சிலவற்றை கூறு?

  • தமிழச்சி
  • கொடிமுல்லை
  • தொடுவானம்
  • எழிலோவியம்
  • குழந்தை இலக்கியம்

2. வாணிகதாசன் எந்தெந்த மொழிகள் வல்லவர்?

  • தமிழ்
  • தெலுங்கு
  • ஆங்கிலம்
  • பிரெஞ்சு

3. வாணிகதாசன் – குறிப்பு வரைக

  • தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
  • இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும்.
  • இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்
  • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்
  • கவிஞரேறு, பாவலர்மணி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
  • பிரெஞ்சு அரசு இவருக்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
  • தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக

1. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
2. வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு
3. வாணிதாசனின் சிறப்புப் பெயர்கள் கவிஞரேறு, பாவலர்மணி.
4. வாணிதாசனுக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
5. பாடப்பகுதியில் உள்ள ‘ஓடை’ என்னும் பாடல் தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.
6. ஓடையில் ஆட உள்ளம் தூண்டும்.
7. கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாய்வது ஓடை
8. ஓடை நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்க செய்கிறது.
9. ஓடை இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
10. ஓடை நாட்டு மக்களின் வறுமையைப் போக்குகிறது.

குறுவினாக்கள்

1.வாணிதாசன் அறிந்த மொழிகள் யாவை?

  • வாணிதாசன் அறிந்த மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு.

2.வாணிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?

  • தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

3.ஓடையின் அழகைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது?

  • சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்? என்று வாணிதாசன் ஓடையின் அழகைப் பற்றிக் கூறுகிறார்.

4.ஓடையைப் பார்த்ததும் தன் மனநிலை எவ்வாறு உள்ளது என்று கவிஞர் கூறுகிறார்?

  • நீரோடையைப் பார்த்ததும் நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது. கற்களில் உருண்டும் தவழ்ந்ததும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது என்று கவிஞர் கூறுகிறார்.

5.ஓடையின் பயன்கள் யாவை?

  • நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

6.ஓடையின் கொடையைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது?

  • நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

சிறுவினா

1.கவிஞர் வாணிதாசன் குறிப்பு எழுதுக.

  • ஆசிரியர் பெயர் : வாணிதாசன்
  • இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு
  • இவர் பாரதிதாசனின் மாணவர் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்.
  • அறிந்த மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு
  • சிறப்புப்பெயர் : கவிஞரேறு, பாவலர்மணி
  • பெற்று விருது : பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியது
  • இயற்றிய நூல்கள் : தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

நூல் வெளி

    தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை. தொடுவானம். எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.

    பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

8th Tamil samacheer kalvi guide Guide Lesson 2 Question and Answers

 

Leave a Reply