9th Tamil Unit 1 Book Back Question & Answer
Class 9 Tamil New Syllabus இயல் -1 அமுதென்று பேர் – தமிழ்விடு தூது, திராவிட மொழிக் குடும்பம், தமிழோவியம், ஆறாம் திணை, எழுத்து – அளபெடை Book Back Q & A.
Ninth Standard Tamil New Syllabus Unit 1 Book Back Question and Answer 2025 – 20256. 9th Tamil along with the corresponding book back questions and answers. This post covers the book back answers and solutions for 9th Social Science from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook Answers. 9th All Subject Text Books Download pdf. Class 9 samacheer kalvi guide.
TN 9th Std 1st Lesson 1 – இயல் -1 அமுதென்று பேர் – தமிழ்விடு தூது, திராவிட மொழிக் குடும்பம், தமிழோவியம், ஆறாம் திணை, எழுத்து – அளபெடை Book in Q & A.
9th Tamil – இயல் 1 – திறன் அறிவோம் – Question & Answer
பலவுள் தெரிக.
1. திணை,பால்,எண், ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?
அ) தமிழ்
ஆ) தெலுங்கு
இ) மலையாளம்
ஈ) கன்னடம்
இ) மலையாளம்
2. தமிழ்விடு தூது …………..என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள்
ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம்
ஈ) தனிப்பாடல்
இ) சிற்றிலக்கியம்
3. பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?
அ) குக்கூஉ எனக் குயில் கூவியது.
ஆ) கொக்கரக்கோஒ எனச் சேவல் கூவியது.
இ) அண்ணாஅ என அழைத்தான்.
ஈ) ஓடி வா ஓடி வா.
ஈ) ஓடி வா ஓடி வா
4. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த
காலமும் நிலையாய் இருப்பது தமிழே! – இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?
அ) முரண், எதுகை, அளபெடை
ஆ) இயைபு, அளபெடை, அந்தாதி
இ) மோனை, எதுகை, இயைபு
ஈ) மோனை, முரண், அந்தாதி|
இ) மோனை, எதுகை, இயைபு
5. சிந்தா மணி என்பதன் இலக்கணக்குறிப்பு-
அ)வேற்றுமைத்தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
குறு வினா
1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
- நாங்கள் பேசும் மொழி தமிழ் திராவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது.
2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் கவர்ந்த அடிகள் குறித்து எழுதுக.
- காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
-இவ்வடிகள் தமிழ் மொழி எல்லா மொழிக்கும் மூத்த மொழி என்கின்றது.
3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
- இரண்டு இரண்டு அடிகளை வைத்து எதுகையால் எழுதப்படும் செய்யுள் கண்ணி எனப்படும்.
4. “அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலணங்களவை இலக்கியங்களின் பாடுபொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?
- அகமும் புறமும் இலக்கியங்களின் பாடுபொருள்.
5. தென்திராவிடமொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
1.தமிழ்
2.மலையாளம்
3.கன்னடம்
4.குடகு
6. அளபெடை எத்தனை வகைப்படும்?அவை யாவை?
அளபெடை இரண்டு வகைப்படும்
- உயிர் அளபெடை
- ஒற்று அளபெடை
சிறு வினா
1. தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின்சிறப்புகள் யாவை?
- தித்திக்கும் தெளிந்த அமுதமாய் முத்திக்கனியாய் உள்ளது.
- இயல்,இசை,நாடகம் என முத்தமிழாய் சிறந்து விளங்குவது.
- அறிவால் உண்ணப்படும் தேனானது
- பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்றது.
2. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
- தென் திராவிட மொழிகள்,வட திராவிட மொழிகள். நடுத்திராவிட மொழிகள் ஆகியவை திராவிட மொழிகளின் பிரிவுகள் ஆகும்
- தெரிந்த மொழி: தமிழ்மொழி
சிறப்பியல்புகள்:
- தொன்மையான மொழி தமிழ்.
பிறமொழித் தாக்கம் இல்லாத மொழி.
3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
மூணு – மலையாளம்
மூரு-கன்னடம்
மூடு -தெலுங்கு
மூஜி துளு
4. ‘புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்” – உங்கள் பங்களிப்பை விளக்குக.
- புதிய கலைச்சொல்லாக்கத்தை உருவாக்குவேன்.
- தமிழ் மருத்துவக்கலைக்களஞ்சியம் உருவாக்குவேன்.
- கணினிச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல் உருவாக்குவேன்.
நெடு வினா
1.காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப் பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.
- தொன்மையும் தனித்தன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற உலக நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ்.
- தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழி .
- ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி.
- தமிழானது தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டது.
- பிற மொழித்தாக்கம் குறைவு
- தொன்மையான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன.
2. புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.
ஆறாம் திணை
முன்னுரை:
புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாகக் காண்போம்.
முத்துலிங்கம்
இலங்கையில் உள்நாட்டுப் போர் காலம் அது. அப்போது முத்துலிங்கத்தின் குடும்பம் அங்கு இருந்தது.எப்போதும் தூங்காது,உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அகதிகள் முகாம்
அனைவரும் அகதிகள் முகாமிற்குச் சென்றனர்.
யாரோ போட்ட உடைகள்கைதிகளைப் போல வரிசையில் நின்று சாப்பாட்டிற்கு கை ஏந்துகின்றனர்.
அங்கு இரண்டு கரண்டி தான் சோறு கிடைக்கும்.
வேறு நாடு
உயிர் வாழ வேறு நாட்டிற்குச் சென்றனர்.
30வயதுள்ள புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்.பல நாடுகளில் சிறை,பனிச்சரிவு. அடி உதை அனுபவித்தார்.
எங்கும் வேலை கிடைக்கவில்லை.8வது இடம் கேட்ட கேள்விக்கு, “இன்று வரைக்கும் உயிர் தப்பி வாழ்கிறேன் என்றால் அது என் திறமை ” என்றார்.
அவர் இப்போது வரை கனரக வாகனம் ஓட்டுகிறார்.
முடிவுரை
புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என் பதை ஆறாம் திணை வாயிலாகக் காண்போம்.
9th Tamil Unit 1 Question & Answer – மொழியை ஆள்வோம்
படித்து சுவைக்க.
விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த
பிறகுநான் வீணையாய்ப் போனேன்; – சிறகுநான்
சின்னதாய்க்கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!
நின்னால் விமானமானேன் நான்!தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்
வருவாய் எனநீ வருவாய்; – ஒருவாய்
உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்று!
– கவிஞர் வாலி
மொழி பெயர்க்க.
- Comparative Grammer- ஒப்பிலக்கணம்
- Lexicon-பேரகராதி
- Vowels- உயிரொலிகள்
- Consonants- மெய்யொலிகள்
- Linguistics – மொழியியல்
- Literature- இலக்கியம்
- Philologist- மொழி ஆய்வறிஞர்
- Polyglot- பன்மொழி அறிஞர்
- Phonologist- ஒலியியல் ஆய்வறிஞர்
- Phonetics- ஒலியியல்
அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களில் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ____________ (திகழ்)
விடை : திகழ்கிறது
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ____________ (கலந்துகொள்)
விடை : கலந்துகொள்வாள்
3. உலகில் மூவாயிரம் மொழிகள் ____________ (பேசு)
விடை :பேசப்படுகின்றன
3. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ____________ (செல்)
விடை : சென்றனர்
4. தவறுகளைத் ____________ (திருத்து)
விடை : திருத்துவேன்
வடிவம் மாற்றுக.
பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம்பெறும் அறிவிப்பாக மாற்றுக.
மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணி ஆற்றி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த “உள்ளங்கையில் உலகம்” என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் முன்னாள் மாணவர் இன்சுவை (கின்னஸ் சாதனை படைத்த) நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.
தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.
1. இளமையில் கல்வி ____________ விடை : சிலைமேல் எழுத்து
2. சித்திரமும் கைப்பழக்கம் ____________ விடை : செந்தமிழும் நாப்பழக்கம்
3. கல்லாடம் படித்தவரோடு ____________ விடை : சொல்லாடாதே
4. கற்றோர்க்குச் சென்ற ____________ விடை : இடமெல்லாம் சிறப்பு
கடிதம் எழுதுக .
உங்களின் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய “கால் முளைத்த கதைகள்” (ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்) என்னும் நூல் குறித்த கருத்துக்களைக் கடிதமாக எழுதுக.
நண்பனுக்குக் கடிதம்
10.தமிழ் நகர்,
இடம்:இஇஇ.
நாள்:——-
அன்புள்ள நண்பனுக்கு,
உன் நண்பன் எழுதும் கடிதம்.நலம் நலமறிய ஆவல். பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “கால்முளைத்த கதைகள்” என்னும் நூலைப் படித்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.
பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து இந்தக் கதைத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதனைப் படிக்க வைத்த உனக்கு மிக்க நன்றிகள்.மீண்டும் சந்திப்போம்!
இப்படிக்கு
——–(பெயர்)
உறைமேல் முகவரி
பெறுநர்:
இ.இளங்கோ
12,காந்தி நகர்,
கோவை-1
நயம் பாராட்டுக.
கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக.
விடுகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில், புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே.
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!
– ம.இலெ. தங்கப்பா
திரண்ட கருத்து
வானம், கடல், மலை. அருவி, புல்வெளி,வயல், விலங்கு, பறவை என அனைத்திலும் காணுகின்ற பாடலே! தூய்மை ஊற்றே! மக்கள் உள்ளத்தில் நிலையாக இருக்க வேண்டுகின்றேன்.
பொருள் நயம்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே என்பதில் பொருள் நயம் சிறப்பாக உள்ளது.
சொல் நயம்
காட்டில், புல்வெளியில்,நல்வயலில் ஆகிய சொற்கள் சொல் நயம் தோன்ற உள்ளது.
மோனை நயம்
முதல் எழுத்து ஒரே மாதிரி வருவது மோனை.
விரிகின்ற – விண்ணோங்கு, தெரிகின்ற – தெவிட்டாத
எதுகை நயம்
இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வருவது எதுகை.
பொழிகின்ற -பொழிலில் புல்வெளியில் நல்வயலில்
அணி நயம்
இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.
சந்த நயம்
சிந்து சந்தத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.
சுவை நயம்
பெருமிதச் சுவையில் இப்பாடல் அமைந்துள்ளது.
நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க.
உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத்தாய் மொழி நாள்(பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.
உலகத் தாய்மொழி நாள் விழா நிகழ்ச்சி நிரல்
நிகழ்ச்சி நிரல்
- இறைவணக்கம்
- தமிழ்த்தாய் வாழ்த்து
- வரவேற்புரை : வை.மணி (10-அ), இலக்கிய மன்றச் செயலாளர்
- தலைமையுரை :அ.அருண் அவர்கள், தலைமையாசிரியர்
- சிறப்புரை : கவிஞர் திரு.மு.மேத்தா அவர்கள்
- நன்றியுரை : ச.மதி, 10-ஈ
- நாட்டுப்பண்
மொழியோடு விளையாடு
அந்தாதிச் சொற்களை உருவாக்குக.
- அத்தி, குருவி, விருது, இனிப்பு, வரிசையாக
இனிப்பு – புளிப்பு – புதியது – துணிவு – உடைமை – மைஞ்சு – சுக்கு – கும்மி – மிக்கவை
அத்தி – திகைப்பு – புகழ்ச்சி – சிரிப்பு – புன்னகை – கைபேசி – சிறப்பு – புதுமை –
குருவி – விளக்கு – குரங்கு – குறும்பு – புங்கை – கைதி – திகைப்பு – புத்தி – திண்ணை
வரிசையாக – கல்வி – விருது – துடுக்கு – குரங்கு – குத்து – துதி – திங்கள்
கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி விடுபட்டுள்ள கட்டங்களில்
காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
முடியுமோ முடியாதோ என்ற எண்ணமில்லை முயற்சியே இங்கு வெற்றிவாகை சூடுகிறது. கட்டுகளுக்குள்ளேயே சிக்கிக் காலங்கழிக்காமல் தன்னந்தனியாய்த் தானே முயன்று துள்ளிக் குதிக்கிறது தனிக்காட்டு ராஜாவாக வலம் வர
அகராதியில் காண்க.
நயவாமை, கிளத்தல், கேழ்பு, செம்மல், புரிசை,
- நயவாமை – விரும்பாமை, புகழாமை
- கிளத்தல் -தெளிவாகக் கூறுதல் / வியந்து
- கேழ்பு – நன்மை
- செம்மல் – தலைவன், இறைவன், வீரன்
- புரிசை – மதில்,மதில்சுவர்
படிப்போம்; பயன்படுத்துவோம்!
- Comparative Grammar – ஒப்பிலக்கணம்
- Vowels – உயிரொலிகள்
- Lexicon -பேரகராதி
- Consonants – மெய்யொலிகள்
அறிவை விரிவு செய்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்
- மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் – மணவை முஸ்தபா தமிழ்நடைக்கையேடு