9th Tamil Unit 2 Book Back Question & Answer
Class 9 Tamil New Syllabus இயல் 2. உயிருக்கு வேர் Book Back Question and Answer.
Ninth Standard Tamil New Syllabus Unit 2 உயிருக்கு வேர், நீரின்றி அமையாது உலகு , பெரியபுராணம், புறநானூறு, தண்ணீர், பகுபத உறுப்பிலக்கணம் Book Back Question and Answer 2025 – 20256. 9th Tamil along with the corresponding book back questions and answers. This post covers the book back answers and solutions for 9th Tamil Nadu State Board 9th Standard Tamil textbook Answers. 9th All Subject Text Books Download pdf. Class 9 samacheer kalvi guide.
TN 9th Std 1st Lesson 1 – இயல் -1 Book in Q & A.
இயல் 2 – திறன் அறிவோம்
பலவுள் தெரிக.
1. “மாடு” – என்பதன் பொருள் என்ன?
அ) கீழே
ஆ) மேலே
இ) பக்கம்
ஈ) தொலைவு
இ) பக்கம்
2. நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) சமுத்திரம்
ஆ) ஆறுகள்
இ) இலைச்சி
ஈ) புலரி
ஈ) புலரி
3. பொருத்தமான விடையைத் தெர்க.
க. நீரின்றி அமையாது உலகு – திருவள்ளுவர்
உ. நீரின்று அமையாது யாக்கை – ஒளவையார்
ங. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
அ) க.ங
ஆ) உங்
இ) க,உ
ஈ) க.உங
அ) க.ங
4. பகுதி, விகுதி மட்டும் இடம் பெறும் சொல் எது?
அ) வென்றார்
ஆ) நடந்த
இ) வளர்
ஈ) பொருந்திய
இ) வளர்க
5. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின்
அ) மறைவா
ஆ) பூவரச மரம்
இ) வனம்
ஈ) பெரிய
இ) வளம்
குறு வினா
1. கூவல் என்பதன் பொருள் யாது?
- கூவல் என்பது உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.
2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- அகழி, அணை, ஏரி, குளம், ஊரணி, கண்மாய், தேனி, அருவி, கடல் என்பன பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆகும்.
3. உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.
-
நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது.
-
உணவையே முதன்மையாகவும் உடையது.
-
எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
-
”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!”
4. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
- எருமைகள் நீரில்விழுவதால்,அங்கு உள்ள மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாய்கிறது.
- இது நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் ஒப்பிடுகின்றது.
4. “மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழற் காடும் உடையது அரண்”. இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
- தெளிந்த நீரும், பரந்த நிலமும், சிறந்த மலையும், அடர்ந்த காடும் ஆகிய நான்கும் ஒரு நாட்டின் முக்கிய அரண்களாகும். அவற்றுள் நீருக்கே முதலிடம் தருகிறார் திருவள்ளுவர்.
சிறு வினா
1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை -அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
- நீரைச் சிக்கனப்படுத்த வேண்டும்.
- மழை நீரைச் சேமிக்க வேண்டும்.
- நீரை வீணாக்கக் கூடாது.
- ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் மழைநீரைச் சேமிக்க வேண்டும்.
2. நிலைத்தபுகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
- உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.
நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் உலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவராவர்.
நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலை பெருகச் செய்க.
நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழும் பெறுவர்.
3. சோழர் காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப் பட்டது?
- பயன்படுத்தத் தேவையான தண்ணீரை வெளியேற்றவும்.
- சேற்றை வெளியேற்றவும்
- சோழர் காலக் குமிழித் தூம்பு பயன்படுத்தப் பட்டது.
4. வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும செய்தியை விளக்கி எழுதுக.
- நீர்நிலைகளில் எருமைகள் வீழும்.
- அதனால் நீரிலுள்ள மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாய்கிறது.
- இதற்கு வானவில்லை பெரியபுராணம் ஒப்பிடுகின்றது.
நெடு வினா
1. வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.
- நீர் இல்லாமல் எதுவும் உயிர் வாழ முடியாது.
- சிறிய புல்லின் நுனியைக் கூட நீர் இல்லாமல் காணமுடியாது.
- அதனால் தான் நீரின்று அமையாது உலகு என்றார் வள்ளுவர்.
- எல்லா உயிர்களுக்கும் உணவும் நீரும் அவசியமாகும்.
- மழையே பயிரும் உயிரும் வாழப் துணை புரிகின்றது.
- மழையால் விதை ஆயிரமாகப் பெருகுகிறது.
- மண் வளமாகின்றது. விதை முளைக்கின்றது. பயிர் வளர்கின்றது.
- நீரால் உழவு செழிக்கின்றது.
2. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
- காவிரி மலையிலிருந்து புதிய பூக்களை அடித்து வர,அதனை வண்டுகள் மொய்த்து ஒலி எழுப்பும்.
- காடுகளில் கரும்புகள் உள்ளன.சோலைளில் அரும்புகள் உள்ளன
- பக்கங்களில் குவளை மலர்கள் உள்ளன.
- வயல்களில் சங்குகள் கிடக்கின்றன.
- குளங்கள் எல்லாம் கடல் போல உள்ளன.
- நீர்நிலைகளில் எருமைகள் மூழ் மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும்.
- இது வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.
நெல்கட்டுகள், மீன்கள், முத்துக்கள், மலர்கள் ஆகியவற்றை கரையில் குவித்து வைத்திருந்தனர்.
3. ‘தண்ணீர்’ கதையைக் யக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
முன்னுரை
- ‘தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கிக் காண்போம்.
தண்ணீர் பிரச்சனை
- அது ஒரு சிற்றூர். கிணறுகளில் தண்ணீர் இல்லை. மூன்று மைல் தூரம் நடந்து சென்று பிலாப்பட்டியில் தண்ணீர் பிடித்து வரவேண்டும்.பிலாப்பட்டி மக்கள் மதியம் வரை தண்ணீர் எடுப்பார்கள். பிறகு தான் வெளியூர்க் காரர்கள் பிடிக்க வேண்டும்.
ரயிலில் தண்ணீர்
- ரயிலில் தண்ணீர் பிடிக்கலாமென ஊர்க்காரர்கள் முடிவு செய்தார்கள்.3 மணிக்கு வரும் பயணிகள் ரயிலில் தண்ணீர்ப் பிடிக்க முடிவு செய்தார்கள். இந்திராவும் மற்ற பெண்களும் குடங்களை எடுத்துக் கொண்டு புகைவண்டி நிலையம் நோக்கி ஓடுவார்கள்.
இந்திரா
- ஒரு நாள் இந்திராவும் தண்ணீர்ப் பிடிக்க பெட்டியில் ஏறினாள். தண்ணீர்ப் பிடிப்பதற்குள் வண்டி கிளம்பியது. வண்டியிலிருந்து குதித்துவிடலாம் என்று நினைத்து போது வடக்கத்தியப் பெண், இவள் தற்கொலைக்கு முயல்வதாக நினைத்து பெட்டிக்குள் இந்திராவை இழுத்துவிடுகிறாள்.
குடும்பம் தேடுதல்
- இந்திரா வண்டியோட போய்ட்டா என்று அலறி அடித்து அம்மா, ஐயா, சின்னவன், உறவினர். ஊர்க்காரர்கள் தேடிச் சென்றார்கள். இந்திராவின் அம்மா நானும் சாகிறேன் என்று ஓட இந்திரா குடத்தைக் தூக்கிட்டு வருகிறாள். மகளே இவ்வளவு நடந்தும் இத சுமந்து வரனுமா என்று ஐயா கூற, நாளைக்கு வரைக்கும் தண்ணிக்கு எங்கப் போறது
என்றாள் இந்திரா.
முடிவுரை
- தண்ணீருக்காக மக்கள் படும் துன்பத்தை அறிந்தோம்.
மொழியை ஆள்வோம்
பொன் மொழிகளைத் தமிழில் மொழிப்பெயர்த்து எழுதுக.
1. Every flower is a soul blossoming in nature – Gerald De Nerval
ஒவ்வொரு மலரும் இயற்கையாக மலரும் போது சிறப்புப் பெறுகிறது – ஜெரால்டு டி நெர்வால்
2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும் பிடித்த நிறமாகும்; வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும் – மேட்டி ஸ்டீபனெக்
3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வது அன்றைய நாள் முழுவதும் ஆசியைத் தரும் -ஹென்றி டேவிட் தோரேவ்
4. Just living is not enough….. One must have sunshine, freedom and a little flower -Hans Christian Anderson
வாழ்வு மட்டும் போதுமானதல்ல. ஒவ்வொருவருக்கும் ஒளி, சுதந்திரம்,மலரின் மென்மை அவசியம் – ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன்.
பிழை நீக்கி எழுதுக.
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை: சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டு தான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
விடை: மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
விடை: மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
விடை: நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கின்றனர்.
5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
விடை: சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.
வடிவ மாற்றம் செய்க
நீர்ச்சுழற்சி குறித்த கருத்து விளக்கப்படத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி அமைக்க
நீர்ச்சுழற்சி குறித்த கருத்து விளக்கப்படத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி அமைக்க
நீர் சுழற்சியின் போது ஆற்றல் பரிமாற்றம் நிகழ்கிறது. இதனால் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெருங்கடல் மற்றும் கடல் போன்ற நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் சூடாக்கப்பட்டு நீராவியாகி காற்றில் கலக்கின்றன. சிறிதளவு பனி மற்றும் பனிக்கட்டி போன்றவையும் பதங்கமாகி நேரடியாக நீராவியுடன் கலக்கின்றன. மண்ணிலுள்ள தாவரங்களின் நுண்ணிய இலைத்துளைகள் வழியாக நீர் ஆவியாக மேற்செல்லும்.
வளிமண்டலத்தில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. நீராவியின் நீர் மூலக்கூறுகள் குறைந்த அளவு மூலக்கூறு நிறையைக் கொண்டுள்ளன. எனவே வளிமண்டலத்தில் நீராவியின் அடர்த்தி குறைவானதாக உள்ளது. இந்த வேறுபாடு காரணமாக ஈரக்காற்று மிதக்கும் தன்மை பெற்று மேலே உயர்ந்து மிதக்கிறது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அழுத்தம் குறைந்து வாயு விதிகளின்படி வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது.
வளிமண்டல நீர் சுழற்சியால் நீராவியானது உலகெங்கும் நகர்கிறது. மேகத்துகள்கள் மோதுகின்றன. விண்ணில் திரண்ட மேகங்களில் பெரும்பாலானவை மீண்டும் நீராக அதாவது மழையாகத் திரும்புகின்றன. நில மேற்பகுதியில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது. பின்னர் சிற்றோடைகள், அருவிகள், ஆறுகள் வழியாகப் பாய்ந்து மீண்டும் கடலை நோக்கி இந்நீர் செல்கிறது. சிறுபகுதி நீர் நிலத்தடி நீராகவும் ஏரிகள் அணைகள் போன்ற நீர்த்தேக்கங்களில் நன்னீராகச் சேமிக்கப்படுகிறது.
நிலத்தின் மேற்பகுதியில் ஓடும் தண்ணீர் ஊடுருவல் மூலம் நிலத்தடிக்குள் செல்கிறது. சிறிதளவு நீர் நிலத்தின் மிகுந்த ஆழத்திற்கு ஊடுருவிச் சென்று நீர் நிலைகளை உருவாக்குகிறது. இங்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு நன்னீராகவே இருக்கிறது. நிலப்பரப்பிற்குச் சற்று கீழே சேகரிக்கப்படும் நீர் ஊற்றாகச் சுரந்து மீண்டும் புவிமேற்பரப்பிலுள்ள சமவெளிகளின் நீர்நிலைகளை அடைந்து கடலை நோக்கிச் செல்கிறது. மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் பரிமாற்றம் புவியில் தொடர்ந்து நிகழ்ந்தபடி உள்ளது. இறுதியாகக் கடலுக்குச் செல்லும் தண்ணீர் நீர் சுழற்சியைத் தொடர்கிறது.
வரவேற்பு மடல் எழுதுக.
சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் புள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.
வரவேற்பு மடல்!
கல்வித் தந்தையே!
மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர். எங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை வருக!வருக! என வரவேற்கிறோம்.
அன்பின் ஊற்றே!
பெரியவர், சிறியவர் என்று பார்க்காமல், அனைவரிடமும் அன்புடன் பழகுபவரே! வருக!வருக!
நேர்மையானவரே!
தன் பணியில் கடமை தவறாமல்,நேர்மையாக நடக்கும் உத்தமரே!வருக!வருக!
நாள் :
இடம்:
இப்படிக்கு
பள்ளி இலக்கிய மன்றம்
பத்தியை படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
வினாக்கள்:
-
1. மதுரை நகருக்கு அருகே எந்த ஊரில் அகழாய்வு நடத்தப்பட்டது?
-
2. தொன்மையானவை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன?
-
3. தமிழரின் உயரிய நாகரிகத்தைக் கண்முன் காட்டும் சான்றுகள் யாவை?
-
4. கீழடி என்னுமிடத்தில் நடத்தப்பட்ட ஆகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள்கள் யாவை?
-
5. இப்பத்திக்கேற்ற தலைப்பொன்று தருக.
நயம் பாராட்டுக.
கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக
கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்,
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
– கவிமணி
திரண்ட கருத்து:
- காடு, மலை குதித்து, செடிகளைக் கடந்து மேடுகள் பல ஏறி, ஏரி குளங்கள் நிரப்பி வந்தேன். நீர் ஊறாத ஊற்றிலும் உள்ளே புகுந்து ஓடி வந்தேன்.
பொருள் நயம்:
- ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் என்பதில் பொருள் நயம் சிறப்பாக உள்ளது.
சொல் நயம்:
- குதித்து, கடந்து, நிரப்பி ஆகிய சொற்கள் சொல் நயம் தோன்ற உள்ளது.
மோனை நயம்:
- முதல் எழுத்து ஒரே மாதிரி வருவது மோனை.
கல்லும் – கடந்து தவழ்ந்து – தவழ்ந்து
எதுகை நயம்:
- இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வருவது எதுகை.
கல்லும் – எல்லையும் ஏறாத – ஊறாத
அணிநயம்:
- இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.
சந்த நயம்:
- சிந்து சந்தத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.
சுவை நயம்:
- பெருமிதச் சுவையில் இப்பாடல் அமைந்துள்ளது.
மொழியோடு விளையாடு
சொல்லுக்குள் சொல் தேடுக.
எ.கா : ஆற்றங்கரையோரம் – ஆறு / கரை / ஓரம்
அ) கடையெழுவள்ளல்கள்
ஆ) எடுப்பார் கைப்பிள்ளை
இ) தமிழ்விடு தூது
ஈ). பாய்மரக்கப்பல்
உ) எட்டுக்கால்பூச்சி
விடைகுறிப்பு:
அ) கடையெழுவள்ளல்கள் – கடை / எழு / வள்ளல்
ஆ) எடுப்பார் கைப்பிள்ளை – எடுப்பார் / கை / பிள்ளை
இ) தமிழ்விடு தூது – தமிழ்/விடு / தூது
ஈ). பாய்மரக்கப்பல் – பாய் / மரம் / கப்பல்
உ) எட்டுக்கால்பூச்சி – எட்டு / கால் / பூச்சி
அகராதியில் காண்க.
கந்தி, நெடில், பாலி, மகி, கம்புள், கைச்சாத்து
விடைகுறிப்பு:
- கந்தி – கந்தகம், கழுகு, தவப்பெண், வாசம்
- நெடில் – நெட்டெழுத்து, மூங்கில்
- பாலி – அணை, ஆலமரம், எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கறை
- மகி – பூமி, பசு
- கம்புள் – கம்பங்கோழி, சங்கு, வானம்பாடி
- கைச்சாத்து – கையெழுத்து, பொருள்பட்டி
சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.
எ.கா : அரிசி போடுகிறேன்.
- புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
1. மழை பெய்தது.
2. வானவில்லைப் பார்த்தேன்.
3. குழந்தை சிரித்தது.
4. எறும்புகள் போகின்றன.
5. படம் வரைந்தான்.
விடைகுறிப்பு:
1. மழை பெய்தது.
- மாலையில் மழை பெய்தது.
- நேற்றுக் மாலையில் மழை பெய்தது.
- நாள்தோறும் மாலையில் மழை பெய்தது.
- நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்தது.
- நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
- நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்தது.
2. வானவில்லைப் பார்த்தேன்.
- மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
- மாலையில் மழை பெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
- நான் மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
- நான் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
- நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
- நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப்
- பக்கம் வானவில் பார்த்தேன்.
3. குழந்தை சிரித்தது.
- தொட்டிலில் குழந்தை சிரித்தது.
- தொட்டியில் அழுத குழந்தை சிரித்தது.
- அம்மாவைப் பார்த்தது அழுத குழந்தை சிரித்தது.
- அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து சிரித்தது.
- அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து சிரித்தது.
- அழுத குழந்தை தொட்டிலை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.
4. எறும்புகள் போகின்றன.
- எறும்புகள் போகின்றன.
- எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
- எறும்புகள் வரிசையாகக் கல்லில் போகின்றன.
- எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள் போகின்றன.
- சர்க்கரையை நோக்கி வரிசையாகப் போகின்றன.
- அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.
5. படம் வரைந்தான்.
- படம் வரைந்தான்.
- அவன் அழகாக வரைந்தான்.
- விலங்குகளின் படங்களை வரைந்தான்.
- இயற்கையைப் படம் வரைந்தான்.
- இயற்கை மரங்களைப் படமாக வரைந்தான்.
- படிக்கும் பறவைகளைப் படமாக வரைந்தான்.
வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.
முதல்வினைகள் – பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.
எ.கா : பார்த்தேன்
1. எழுதிப் பார்த்தேன்
2. தடுக்கப் பார்த்தேன்
3. கொடுத்துப் பார்த்தேன்
4. ஓடப் பார்த்தேன்
விடைகுறிப்பு:
அ) கொடுத்தார்
1. எழுதிக் கொடுத்தார்
2. படிக்கக் கொடுத்தார்
3. வாங்கிக் கொடுத்தார்
4. பார்த்துக் கொடுத்தார்
ஆ) நடந்தான்
1. பார்த்து நடந்தான்
2. கேட்டு நடந்தான்
3. வாங்கி நடந்தான்
4. சிரித்து நடந்தான்
இ) சேர்ந்தார்
1. வந்து சேர்ந்தார்
2. போய்ச் சேர்ந்தார்
3. நடந்து சேர்ந்தார்
4. ஓய்ந்து சேர்ந்தார்
ஈ) அமைத்தோம்
1. பார்த்து அமைத்தோம்
2. கண்டு அமைத்தோம்
3. கேட்டு அமைத்தோம்
4. சேர்த்து அமைத்தோம்
வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைத்துத் தொடர்களை உருவாக்குக.
வினையடி – வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு. எ.கா : வினையடி – வை
விடைகுறிப்பு:
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
மூவறிவுடைய எறும்பே
ஆறு அறிவுடையவனுக்கு
அறிவு புகட்டுகிறாய்!
உன் எடையைக் காட்டிலும்
எட்டு மடங்கு எடையைத் தூக்கிச் செல்கிறாயே!
நீ ஊர்ந்து செல்லச் செல்ல
கல் கூடத் தேயுமாமே?
மனிதப் பண்புகளின் மகத்துவத்தை
உன்னிடத்தில் இருந்து தெரிந்து கொண்டோம்.
செயல் திட்டம்.
கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பில் உள்ள காணொலியைக் கண்டு அது குறித்த உங்கள் கருத்துகளை இருபக்க அளவில் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக.
நிற்க அதற்குத் தக.
என் பொறுப்புகள்…
அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது நாட்டம் இருந்தும் அவற்றைத் தொரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
ஈ) ………………………………………………………………………………………
உ) ………………………………………………………………………………………
ஊ) ………………………………………………………………………………………
விடைகுறிப்பு:
அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது நாட்டம் இருந்தும் அவற்றைத் தொரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
ஈ) வெற்றுக் காகிதங்களைச் சுருட்டி வகுப்பறைக்குள்ளும் பள்ளி வளாகத்திலும்
போடமாட்டேன்.
உ) பள்ளி வளாகத்துக்குள்ளிருக்கும் மரங்களுக்கு ஊறு விளைவிக்க மாட்டேன்
ஊ) ஆசிரியர்களிடத்தும் பெற்றோர்களிடத்தும் மதிப்புடன் நடந்து கொள்வேன்.
கலைச்சொல் அறிவோம்.
குமிழிக் கல் – Conical Stone
நீர் மேலாண்மை – Water Management
பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
வெப்ப மண்டலம் – Tropical Zone
அறிவை விரிவு செய்.
1. அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
2. தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்
3. தண்ணீர் தேசம் – வைரமுத்து
4. வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
5. மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்