9th Tamil Unit 3 Book Back Question & Answer
Class 9 Tamil New Syllabus இயல் 3 Book Back Question and Answer.
Ninth Standard Tamil New Syllabus இயல் 3 உள்ளத்தின் சீர் – ஏறுதழுவுதல், மணிமேகலை, மார்கழிப் பெருவிழா, தாய்மைக்கு வரட்சி இல்லை! தொடர் இலக்கணம், ஆகுபெயர், திருக்குறள்* Book Back Question and Answer 2025 – 20256. 9th Tamil along with the corresponding book back questions and answers. This post covers the book back answers and solutions for 9th Tamil Nadu State Board 9th Standard Tamil textbook Answers. 9th All Subject Text Books Download pdf. Class 9 samacheer kalvi guide.
இயல் 3 – திறன் அறிவோம்
பலவுள் தெரிக.
1. பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக.
அ) நல்ல நண்பன்
ஆ) இனிய வணக்கம்
இ) எந்த ஓவியம்?
ஈ) கொடிய விலங்கு
விடை: இ) எந்த ஓவியம்!
2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
விடை: ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
3. பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக.
அ) காலவாகுபெயர்
ஆ) காரியவாகுபெயர்
இ) கருவியாகுபெயர்
ஈ) கருத்தாவாகுபெயர்
விடை: ஆ) காரியவாகுபெயர்
4. தோரண வீதியும், தோமறு கோட்டியும் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) ஏவல் வினைமுற்று
ஆ) வினைத்தொகை
இ) எண்ணும்மை
ஈ) பண்புத்தொகை
விடை: இ) எண்ணும்மை
5. பொருந்தாத தொடரைக் கண்டறிக.
அ) பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்.
ஆ ) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.
இ) திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்.
ஈ) நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்.
விடை: இ) திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்.
குறு வினா
1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகின்றது?
- ஜல்லிக்கட்டு, ஏறு விடுதல், மஞ்சுவிரட்டு
2. ஏறுதழுவதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் சுட்டும், வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
- 1. ஏறுகோள்
- 2. எருதுகட்டி
3. பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
முரசு கொட்டுபவன் இவ்வரியை மக்களுக்குக் கூறினான்.
பொருள் விளக்கம்:
தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று முரசு கொட்டுபவன் அறிவித்தான்.
4. “கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்,கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ” இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம் :
ஆண்டாள் இயற்றிய திருப்பாவைப் பாடல்.
விளக்கம்:
ஆனைச்சாத்தன் குருவிகள் ஒலியெழுப்புவதால் பொழுது விடிந்தது என அறியலாம். நீ இன்னும் உறங்குகிறாயே!
5. “கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்த” – இவ்வடிகளில் கண்ணுக் கினியான் என்பது யாரைக் குறிக்கிறது?
கண்ணுக்கினியான் :
- அடியவர் கண்ணுக்கு இனியவனாகத் தோன்றும் சிவபெருமானைக் குறிக்கிறது.
6. காலவாகுபெயர் – குறிப்பு தருக.
எ.கா: கார் அறுத்தான்.
- கார் என்னும் காலப்பெயர் காலத்தைக் குறிக்காது. அக்காலத்தில் விளையும் பயிருக்குப் பெயராகி வந்தது. எனவே இது காலவாகு பெயராகும்.
9th Tamil Unit 3 Book Back Question & Answer
சிறு வினா
1. ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்துள்ளது?
- மருத மக்களின் வேளாண்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது மாடுகள்.
- பாலைநிலத்தில் போக்குவரத்திற்கு மாடுகள் பயன்படுத்தப்படுகின்றது.
- முல்லை நிலத்தில் இதன் தொடர்ச்சியாக ஏறினைத் தழுவி விளையாடி மகிழ்வர்.
2. திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
காலை வழிபாட்டு நிகழ்வு :
- இளம்பெண்களின் கூட்டத்திற்கே தலைவி நீ உறங்கலாமா!
- நாராயணன் மும்மூர்த்திகளின் தலைவன்! கேசவன்! என்று கண்ணனை எல்லாரும் பாடிடும் ஒலி கூடவா உன் காதில் விழவில்லை?.
- கண்ணன் நினைவில் உணர்வற்று உலகை மறந்து கிடக்கின்றாயா? ஒளிபடைத்த கண்ணழகி! எழுந்திரு!
- கதவைத் திற! நீராடச் செல்வோம்.
- பாவை நோன்பு எடுப்போம் வாடீ! என ஒரு பெண் அழைக்கின்றாள்.
3. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
- ஊரையே தூய்மை செய்து, வண்ணம் அடித்து, தோரணம் கட்டுவர்.
- இசை,கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்க ஏற்பாடு செய்வர்.
- இந்திரவிழாவுக்குத் தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றை அழகுபடுத்தினர்.
- பாக்கு, வாழை, கரும்பு நட்டு வைத்தனர்.
- எங்கும் புது மணலைப்பரப்பினர்.
4. தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
தோழியை எழுப்பும் நிகழ்வு :
- பாடிவரும் பாவையருள் ஒருத்தி ‘ஒளிமிக்க முத்துப் போன்ற பல் தெரிய சிரிக்கும் தோழி! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையோ?’ என்கிறாள்.
- உறங்கிக் கொண்டிருந்த முத்துப்பல்லழகி அழகிய கிளிமொழி பேசும் பாவையர் எல்லாரும் வந்திருக்கின்றனரா?’ என்கிறாள்.
- எழுப்பியவருள் மற்றொருத்தி, உன் கேள்விக்கு வந்துள்ளவரை எண்ணிப் பார்த்தல்லவோ விடை கூற வேண்டும்’ என்கிறாள்.
- மூன்றாவது பெண் ‘அப்படிச் செய்யாதே. தோழி! அதுவரையில் கண்ணைமூடி உறங்கப் பார்க்கிறாயா? நம் மார்கழி நோன்பு நேரத்தை வீணாகக் கழித்து விடாதே’ என்கிறாள்.
- நான்காவதாக ஒருத்தி, ‘விண்ணவர்க்கு ஒப்பற்ற அமிழ்தாக உள்ளவனை. நான்மறைகள் போற்றும் உயர்ந்தவனை, அடியவர் கண்ணுக்கு இனியவனை புகழ்ந்துப் பாடி மனம் குழைந்து உருவிடவா என்கிறாள்.
5. அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.
எண்ணலளவை ஆகுபெயர்:
- எ.கா: ஒன்று பெற்றால் ஒளிமயம்.
- ஒன்று என்னும் எண்ணுப் பெயர் அவ்வெண்ணைக் குறிக்காமல், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்ததால் இது எண்ணலளவை ஆகுபெயர் ஆகியது.
எடுத்தலளவை ஆகுபெயர் :
- எ.கா: இரண்டு கிலோ கொடு.
- இரண்டு கிலோ – நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காது. அவ்வளவையுள்ள பொருளுக்குப் பெயராகி வந்துள்ளதால் எடுத்தலளவை ஆகுபெயராயிற்று.
முகத்தலளவை ஆகுபெயர்:
- எ.கா: அரை லிட்டர் வாங்கு.
- முகந்து அளக்கும் அரை லிட்டர் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காது, அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
நீட்டலளவை ஆகுபெயர்:
- எ.கா: ஐந்து மீட்டர் வெட்டினான்.
- நீட்டி அளக்கும் ஐந்து மீட்டர் என்னும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காமல், அவ்வளவையுள்ள பொருளுக்குப் பெயராகி வந்துள்ளது.
நெடு வினா
1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விளக்குக.
முன்னுரை
பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது தமிழர் வரலாறு. முல்லை மற்றும் மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது ஏறு தழுவுதல். இது நூற்றாண்டுகள் பல கடந்தும் தமிழர் தம் அடையாளமாகவே நிறுவப்பட்டிருக்கிறது.
விளையாடி மகிழ்தல்
வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும்.
பிறநாட்டில் காளை விளையாட்டு
மேலைநாடுகளில் குறிப்பாக ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது உண்டு.
ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்
- தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.
- எவராலும் அடக்க முடியாத காளைகளும் உண்டு. எனவே,காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
- அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
நம் கடமை
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையுடையது. இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாப்பது நம் கடமை.
முடிவுரை:
பண்டைய வீரவுணர்வை நினைவூட்டும் ஏறு தழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் மாடுவளர்த்தலையும் வலியுறுத்தும், பண்பாட்டுக் குறியீடு ஆகும்.
2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாத்தல்:
- நன்றி தெரிவிக்கும் பண்பாட்டினை மாட்டுப் பொங்கல் மூலம் இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும்.
- அன்பையும் வீரத்தையும் வளர்த்தெடுக்கும் ஏறுதழுவுதல் பற்றிப் புரிய வைக்க வேண்டும்.
- இயற்கையைச் சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்து வாழ, இளைய தலைமுறையினரை வலியுறுத்த வேண்டும்.
- நடுகற்கள், சிற்பங்கள், தொல்லியல் ஆய்வுகளைச் சிதைக்காமல் நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும்.
- வீரவுணர்வும், விலங்குகள் வழிபாடும். இயற்கை வேளாண்மையும் நம் பண்பாட்டுக் கூறுகள் என்பதை இளையோர்க்கு நாம் உணர்த்த வேண்டும்.
மொழியை ஆள்வோம்
படித்து சுவைக்க.
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்காத கண்ணே உன்னைத் தூங்க வைப்பேன் ஆரிராரோ
மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம்போட்டுத்
தேன் பார்த்து நெல்விளையும் செல்வந்தனார் புத்திரனோ!
வெள்ளித்தேர் பூட்டி மேகம்போல் மாடுகட்டி
அள்ளிப் படியளக்கும் அதிர்ஷ்டமுள்ள புத்திரனோ
முத்துச் சிரிப்பழகா முல்லைப்பூப் பல்லழகா
தொட்டில் கட்டித் தாலாட்டத் தூக்கம் வருமோடா
கதிரறுக்கும் நேரத்திலே கட்டியுன்னைத் தோளிலிட்டால்
மதியத்து வெயிலிலே மயக்கமும்தான் வாராதோ
வயலிலே வேலை செய்வேன் வரப்பினிலே போட்டிடுவேன்
வயலைவிட்டு ஏறுமுன்னம் வாய்விட்டு அழுவாயோ?
-நாட்டுப்புறப்பாட்டு, தகவலாளர்: வேலம்மாள்
மொழி பெயர்க்க.
1. A nation’s culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi
விடைகுறிப்பு: நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.
2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
விடைகுறிப்பு: மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி
3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
விடைகுறிப்பு: அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.
4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
விடைகுறிப்பு: உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள்.
5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
விடைகுறிப்பு: வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள்.
வடிவம் மாற்றுக.
பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
விடைகுறிப்பு:
1. தமிழ் மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ் மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேடும் பள்ளமும்
2. நகமும் சதையும்
3. முதலும் முடிவும்
4. கேளிக்கையும் வேடிக்கையும்
5. கண்ணும் கருத்தும்
விடைகுறிப்பு:
எ. கா : மேலும் கீழும்:
ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.
- 1. மேடும் பள்ளமும்:
சேரி மக்களின் வாழ்க்கை மேடும் பள்ளமும் கொண்டதாக இருக்கிறது.
2. நகமும் சதையும்:
- மும்தாஜும் தமிழரசியும் நகமும் சதையும் போல இணைபிரியாத் தோழிகள்.
3. முதலும் முடிவும்:
- இது போன்ற தவறுகள் முதலும் முடிவும் ஆக இருக்கட்டும் என்று ஆசிரியர் அவர்களிருவரையும் எச்சரித்தார்.
4. கேளிக்கையும் வேடிக்கையும்:
- எங்கள் ஊர்த் திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்ததாக இருந்தது.
5. கண்ணும் கருத்தும்:
- அன்பழகன் கண்ணும் கருத்துமாகப் படித்துத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.
9th Tamil Unit 3 Book Back Question & Answer
தொகுப்புரை எழுதுக.
பள்ளியில் நடை பெற்ற இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சிகளை திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.
தொகுப்புரை
தமிழ்த்தாய் வாழ்த்துடன் இலக்கிய மன்ற விழா காலை 9 மணியளவில் தொடங்கியது.
தலைமை ஆசிரியர் தலைமை ஏற்று தலைமை உரை வழங்கினார்.
அவர் தலைமை உரை வழங்கும் பொழுது மாணவர்கள் அனைவரும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையோடும் படிக்க வேண்டும் என்றார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவர் முயற்சி என்னும் தலைப்பில் சிற்றுரை வழங்கினார். பேச்சுப் போட்டி – கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு மாணவர் தமிழரசன் நன்றியுரை வழங்க நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
விடைகுறிப்பு: காங்கேயம் இனக் காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
அ) கர்நாடகம்
ஆ) கேரளா
இ) இலங்கை
ஈ) ஆந்திரா
விடைகுறிப்பு: இ) இலங்கை
3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.
ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன.
இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன.
ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.
விடைகுறிப்பு: அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.
4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
அ) வினாத் தொடர்
ஆ) கட்டளைத்தொடர்
இ) செய்தித்தொடர்
ஈ) உணர்ச்சித்தொடர்
விடைகுறிப்பு: இ) செய்தித்தொடர்
மொழியோடு விளையாடு
பொருள் எழுதித் தொடரமைக்க.
கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
அலை – கடலை இன்று கடலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.
அழை – வரவழைதல்ளா என் நண்பர்களை வரவழைத்துள்ளேன்.
விடைகுறிப்பு:
1. அலை – கடலலை – இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாவுள்ளது.
2. அழை – வரவழைத்தல் – என் நண்பர்களை வரவழைத்துள்ளேன்
3. கரை – ஆற்றின் ஓரம் – ஆற்றங்கரையில் தென்னை மரங்கள் செழித்து வளர்ந்து உள்ளன.
4. கறை – படிவது கறை – சட்டையில் கறை படிந்துள்ளது.
5. குளவி – பூச்சி வகைகளுள் ஒன்று – வாசல் நிலைப்படியில் குளவி கூடுகட்டியிருக்கிறது.
6. குழவி – குழந்தை – குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்)
7. வாளை – மீன்களில் – ஒருவகை நீர் நிலைகளில் வாளை மீன் துள்ளிக் குதித்தது.
8. வாழை – வாழை மரம் – திருமணப் பந்தலில் வாழை மரங்கள் கட்டினர்.
9. பரவை – பரந்துள்ள கடல் – மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றூர் பரவை.
10. பறவை – பறப்பவை – காலைப் பொழுதில் பறவைகள் பாடும்.
11. மரை – மான், தாமரை – தாமரை நீர் நிலையில் மலரும்.
12. மறை – வேதம் – வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன.
அகராதியில் காண்க.
இயவை, சந்தப்பேழை, சிட்டம், தகழ்வு, பௌரி
விடைகுறிப்பு
இயவை : வழி, மூங்கில் அரிசி, துவரை, தோரை நெல், காடு
சந்தப்பேழை : சந்தனப் பெட்டி
சிட்டம் : நூல் சிட்டம், எரிந்து கருகியது, பெருமை அறிவு, நீதி, உயர்ந்து
தகழ்வு : அகழ், அறிவு, உண்கலம்
பௌரி : பெரும் பண்வகை.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
விழாக்கள்
தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு – இது
தரணியிலே சிறந்த நாடு – இங்கே
மேள தாளங்கள் முழங்கிடுமே
மங்கள வாத்தியங்கள் இசைத்திடுமே
ஆடலும் பாடலும் இணைந்திடுமே
அழகிய நாட்டியம் புனைந்திடுமே
வண்ணக் கோலங்களை வாசலிலிட்டு
வருகின்ற விழாக்களை கொண்டாடிடுவோம்.
செயல் திட்டம்
தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் குறித்த செய்திகளை, நாளிதழ்களிலோ புத்தகங்களிலோ திரட்டிச் செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.
விடைகுறிப்பு
தொல்லியல் பற்றிய செய்திகள்:
தேனி மாவட்டம், போடி, சி.பி.ஏ., கல்லூரி வரலாற்றுத்துறை மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியியல் துறை மூலம், இந்த ஆய்வு நடந்தது.
உதவி பேராசிரியர், மாணிக்கராஜ் கூறியதாவது:
தே.கல்லுப்பட்டி அருகே, கவசகோட்டை கிராமத்தில், பண்ணைமேடு எனப்படும், அக்ரஹாரமேடு பகுதியில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில், ஆய்வு மேற்கொண்டோம். இதில், தமிழரின் தொன்மை எழுத்து வடிவமான, தமிழ், ‘பிராமி’ எழுத்துக்கள் பொறித்த, கருப்பு, சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மைகள், மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பானை ஓடுகளில், கி.பி. 1 மற்றும் 2ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்றுள்ளது. தொடர் எழுத்துகள் கிடைக்காததால், முழுவதும் படித்து அறிய முடியவில்லை.
இங்கு காணப்படும் செங்கல்கள், கீழடி அகழ்வாய்வு கட்டுமானத்தில் இருந்த
செங்கல்களின் அமைப்பை போன்றே காணப்படுகிறது. துவாரங்கள் உள்ளது இதன் சிறப்பு. மற்றொரு பானை ஓட்டில், மீன் உருவம் பொறித்துள்ளது.
முதுமக்கள் தாழிகளின் மேற்கு பகுதியில் வட்டவடிவமான அலங்காரங்கள் மூன்று மற்றும் நான்கு அடுக்கில் பொறிக்கப்பட்டுள்ளது.
தாழியின் விளிம்பு பகுதியில் கயிறு போன்ற அலங்கார குறியீடுகள் காணப்படுகின்றன. இவை மண்பாண்டங்கள் சுடுவதற்கு முன் வரையப்பட்டவை என தெரிகிறது.
நிற்க அதற்குத் தக..
அ) நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள்.
அ) கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது.
ஆ) கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.
இ) _______________________________
ஈ) _______________________________
விடைகுறிப்பு:
அ) கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது.
ஆ) கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.
இ) நகரப் பேருந்து நிலையத்தில் வழிகேட்ட பெரியவருக்கு வழிகாட்டிய போது.
ஈ) பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது முதியவரின் பழுதாகி நின்ற இருசக்கர வாகனத்தைச்
செய்த போது.
படிப்போம்; பயன்படுத்துவோம்!
- Hero stone – நடுகல்
- Embossed sculpture – புடைப்புச் சிற்பம்
- Archaeology – தொல்லியல்
- Excavation – அகழாய்வு
- Cultural Identity – பண்பாட்டு அடையாளம்
அறிவை விரிவுசெய்.
1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி
2. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்
3 தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்
4. தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா. ராஜன்
5. தமிழர் சால்பு சு. வித்யானந்தன்