Palamoli Nanuru – பழமொழி நானூறு
Palamoli Nanuru Importnat Notes – TET – TNPSC
Palamoli Nanuru Importnat Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes பழமொழி நானூறு. Tamil eligibility test. All Exams very ude full Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.
பழமொழி நானூறு
- ஆசிரியர் -மூன்றுறை அரையனார்
- குடிப்பெயர் – அரையன்
- சமயம் -சமணம்
- ஊர் -மூன்றுரை (பாண்டிய நாட்டிலுள்ள ஊர்)
- காலம் -கி.பி. 4ஆம் நூற்றாண்டு
- சிறப்புப் பெயர் -மூதுரை, முதுமொழி, உலக வசனம்.
- பாடல்கள்400 – ( 34 அதிகாரங்கள்)
-
இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடல் மூலம் ஆசிரியர் சமண சமயத்தை சார்ந்தவர் என அறிய முடிகிறது.
-
ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இருக்கும்.
-
இந்நூலில் உள்ள அனைத்தும் இலக்கியப் பழமொழிகளே.
-
தொல்காப்பியர் பழமொழியை “முதுசொல்” என்று குறிப்பிடுகிறார்.
-
சங்ககால மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல்,
-
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல். நீதி நூல்களுள் திருக்குறள், நாலடியாருக்கு அடுத்துப் புகழ்பெற்ற நூல்.
“மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரிமடமகள் பாண்மகற்கு நீர் உலையுள்
பொள்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்
ஒன்றாகு முன்றிலோ இல்“
– முன்றுரையரையனார்
சொற்பொருள்:
- மாரி – மழை: புகவா- உணவாக; மடமகள் – இளமகள்; முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை)
பாடலின் பொருள் :
- மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், வள்ளல் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.
- இப்பாடலில் உள்ள பழமொழி: “ஒன்றாகு முன்றிலோ இல்”. இதன் பொருள்: ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை
“ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்வை; அந்நாடு
வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்,”
– முன்றுரையரையனார்
சொற்பொருள் :
- ஆற்றவும் – நிறைவாக; ஆறு – வழி; உணா – உணவு: தமவேயாம் – தம்முடைய நாடே; ஆற்றுணா – ஆறு + உணா
மேற்கோள்:
- “கற்றலின் கேட்டலே நன்று”
- “குன்றின் மேல் இட்ட விளக்கு”
- “தனிமரம் காடாதல் இல்”
- “திங்களை நாய்க் குறைத்தற்று”
- “நிறைகுடம் நீர்த்ததும்பல் இல்”
- “நுணலும் தன்வாயால் கெடும்”
- “பாம்பறியும் பாம்பின் கால்”
- “முறைக்கு மூப்பு இளமை இப்” (கரிகாலன்)
- “கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்” (மனுநீதிச் சோழன்)
- “பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா” (பாரதம்)
“பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையோன்..”
– என்று இராமாயணக் கதையை குறிப்பிடுகிறது
- “முதலில்லார்க்கு ஊதியமில்”
- “புல்மேயா தாகும் புலி”
- “தமக்கு மருத்துவர் தாம்”
- “அணியெல்லாம் ஆடையின் பின்”