You are currently viewing Palamoli Nanuru Importnat Notes

Palamoli Nanuru Importnat Notes

Palamoli Nanuru – பழமொழி நானூறு

Palamoli Nanuru Importnat Notes – TET – TNPSC

Palamoli Nanuru Importnat Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes பழமொழி நானூறு. Tamil eligibility test. All Exams very ude full Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

பழமொழி நானூறு

 

  • ஆசிரியர்            -மூன்றுறை அரையனார்
  • குடிப்பெயர்                  – அரையன்
  • சமயம்                            -சமணம்
  • ஊர்                                  -மூன்றுரை (பாண்டிய நாட்டிலுள்ள ஊர்)
  • காலம்                             -கி.பி. 4ஆம் நூற்றாண்டு
  • சிறப்புப் பெயர்                -மூதுரை, முதுமொழி, உலக வசனம்.
  • பாடல்கள்400                – ( 34 அதிகாரங்கள்)

 

  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடல் மூலம் ஆசிரியர் சமண சமயத்தை சார்ந்தவர் என அறிய முடிகிறது.

  • ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இருக்கும்.

  • இந்நூலில் உள்ள அனைத்தும் இலக்கியப் பழமொழிகளே.

  • தொல்காப்பியர் பழமொழியை “முதுசொல்” என்று குறிப்பிடுகிறார்.

  • சங்ககால மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல்,

  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல். நீதி நூல்களுள் திருக்குறள், நாலடியாருக்கு அடுத்துப் புகழ்பெற்ற நூல்.

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரிமடமகள் பாண்மகற்கு நீர் உலையுள்

பொள்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்

ஒன்றாகு முன்றிலோ இல்                                     

    –    முன்றுரையரையனார்

சொற்பொருள்:

  • மாரி – மழை: புகவா- உணவாக; மடமகள் – இளமகள்; முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை)

பாடலின் பொருள் :

  • மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், வள்ளல் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.
  • இப்பாடலில் உள்ள பழமொழி: “ஒன்றாகு முன்றிலோ இல்”. இதன் பொருள்: ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

 நாற்றிசையும் செல்லாத நாடில்வை; அந்நாடு

வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்

 ஆற்றுணா வேண்டுவது இல்,”                                        

 – முன்றுரையரையனார்

சொற்பொருள் :

  • ஆற்றவும் – நிறைவாக; ஆறு – வழி; உணா – உணவு: தமவேயாம் – தம்முடைய நாடே; ஆற்றுணா – ஆறு + உணா

மேற்கோள்:

  • “கற்றலின் கேட்டலே நன்று”
  • “குன்றின் மேல் இட்ட விளக்கு”
  •  “தனிமரம் காடாதல் இல்”
  • “திங்களை நாய்க் குறைத்தற்று”
  • “நிறைகுடம் நீர்த்ததும்பல் இல்”
  • “நுணலும் தன்வாயால் கெடும்”
  • “பாம்பறியும் பாம்பின் கால்”
  • “முறைக்கு மூப்பு இளமை இப்” (கரிகாலன்)
  •  “கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்” (மனுநீதிச் சோழன்)
  • “பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா” (பாரதம்)

“பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து

இலங்கைக் கிழவற்கு இளையோன்..”

 – என்று இராமாயணக் கதையை குறிப்பிடுகிறது

  • “முதலில்லார்க்கு ஊதியமில்”
  • “புல்மேயா தாகும் புலி”
  • “தமக்கு மருத்துவர் தாம்”
  •  “அணியெல்லாம் ஆடையின் பின்”

Leave a Reply