10th Social Science Samacheer Guide

10th Social Science History Unit 6 Additional Questions

10th Social Science History Unit 6 Additional Questions

10th Social Science Samacheer kalvi guide – Unit 6 Additional Questions Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide History Unit 6 Answers Tamil Medium. SSLC Social Science 6th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide 6. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 6. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் – Additional Questions

10th Social Science History Unit 6 Additional Questions

10th Social Science – History Unit 6 Question answers

10th Social Science – History

Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )

 

SSLC History Unit 6 | Tamil Medium | Additional Question and Answers

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.பரம்பரை பரம்பரையாக ………………… பாளையக்காரர்கள் இருக்கிறார்கள்.

அ) 72
ஆ) 52
இ) 62)
ஈ) 27

விடை: அ) 72

2.…………… இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டும் குறுநில அரசைக் குறிக்கிறது.

அ) சமஸ்கிருதம்
ஆ) ஹிந்தி
இ) தமிழ்
ஈ) பெங்காலி

விடை: இ தமிழ்

3.எந்த ஆண்டில் பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?

அ) 16 மார்ச் 1761
ஆ) 18 மே 1961
இ) 16 மே 1761
ஈ) 18 மார்ச் 1761

விடை: இ 16 மே 1761

4.யூசுப்கான் மீது நம்பிக்கை துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?

அ) 1764
ஆ) 1876
இ) 1766
ஈ) 1876

விடை: அ) 1764

5.ஹைதர் அலி தனது ……………… கோட்டை படைத்தலைவரான சையதிடம் அவருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.

அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை

விடை: இ திண்டுக்கல்

6.பிரிட்டிஷ் படைகளால் கோபால நாயக்கர் ……………. வெற்றிகொள்ளப்பட்டார்.

அ) 1872
ஆ) 1901
இ) 1801
ஈ) 1972

விடை: இ 1801

7.கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் …………………. பகோடாக்களாக இருந்தது.

அ) 2510
ஆ) 3310
இ) 6310
ஈ) 3301

விடை: ஆ) 3310

8.1798 ஆகஸ்ட் 18ல் …………… வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஜாக்சன் ஆணை பிறப்பித்தார்.

அ) திருச்சி
ஆ) இராமநாதபுரம்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை

விடை: ஆ) இரா மநாதபுரம்

9.மருது சகோதரர்களும், கட்டபொம்மனும் இணைந்து …………….ஐ எதிர்ப்பது என்று முடிவெடுத்தனர்.

அ) துருக்கியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) ஆங்கிலேயர்கள்
ஈ) டச்சுக்காரர்கள்

விடை: இ ஆங்கிலேயர்கள்

10.சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் ………………. அன்று தூக்கிலிடப்பட்டார்.

அ) 13 செப்டம்பர்
ஆ) 31 செப்டம்பர்
இ) 13 அக்டோபர்
ஈ) 30 அக்டோபர்

விடை: அ) 13 செப்டம்பர்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.நாடுபிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை ……………… பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்த பூலித்தேவரிடமிருந்து வெளிப்பட்டது.

விடை:திருநெல்வேலி

2.பூலித்தேவர் மைசூரின் …………….. மற்றும் பிரெஞ்சுகாரர்களது ஆதரவினைப் பெற முயன்றது.

விடை:உடையாள்

3.……………… என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.

விடை:ஹைதர் அலி

4.வசூலிக்கப்பட்ட வரியில் ……………… நவாபிற்கும் குடும்ப பராமரிப்பிற்கும் ஒதுக்கப்பட்டது.

விடை:ஆறில் ஒரு பங்கு

5.கட்டபொம்மனும் நிலுவைத் தொகையில் ………………. பகோடாக்கள் நீங்கலாக பிற நிலுவைத் தொகையினை செலுத்தி இருந்தனர்.

விடை:1080

6..கட்டபொம்மணின் ………………. மேஜர் பானர்மென் செப்டம்பர் 5 அன்று கோட்டையைத் தாக்கினார்.

விடை:பிடிகொடுக்கா பதிலால்

7.………………. கோட்டை மிக குறைந்த காலத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது.

விடை:பாஞ்சாலங்குறிச்சி

8.மருது சகோதரர்கள் …………….. நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.

விடை:ஜீன் 1801

9.ஆங்கிலேயரின் ………………. என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களில் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.

விடை:பிரித்தாளும் கொள்கை

10.கலகக்காரர்களில் ……………… பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.

விடை:73 பேர்

10th Social Science History Unit 6 Additional Questions

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1.கூற்று : நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பினார்.
காரணம் : மாபூஸ்கான் வெற்றி பெற்றார்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.

விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .

2.கூற்று : நாயக்க மன்னர்களால் 75 பாளையங்கள் உருவாக்கப்பட்டது.
காரணம் : இவை இரு தொகுதியைக் கொண்டது .

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.

விடை:
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.

சுருக்கமான விடையளிக்கவும்.

1.ஏன் யூசுப்கான் பூலித்தேவருடன் போர் தொடுக்க ஆயத்தமாகவில்லை?

  • கம்பெனியாரால் அனுப்பப்பட்ட யூசுப்கான் (கான்சாகிப் என்றும் தமது மதமாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டவர்) திருச்சிராப்பள்ளியில் இருந்து தான் எதிர்பார்த்த பெரும்பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் வந்துசேரும் வரை பூலித்தேவர் மீது தாக்குதல் தொடுக்க அவர் ஆயுத்தமாகவில்லை.

2.பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யாவை?

  • நெற்கட்டும்செவல்
  • வாசுதேவநல்லூர்
  • பனையூர்

3.ஒண்டிவீரன் பற்றிக் குறிப்பு வரைக.

  • ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் தலைமையேற்றிருந்தார்.
  • பூலித்தேவரோடு இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப் படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்.

4.குயிலி பற்றிக் குறிப்பு வரைக.

  • வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்த குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
  • உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
  • குயிலி தனக்குத்தானே நெருப்புவைத்துக்கொண்டு (1780) அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.

5.கர்நாடக உடன்படிக்கை வரையறு.

  • 1799 மற்றும் 1800-1801ஆம் ஆண்டு பாளையக்காரர்களின் கலகம் அடக்கப்பட்டதன் விளைவு தமிழகத்திலிருந்த அனைத்து உள்ளூர் குடித்தலைமையினரின் எண்ணங்களையும் நீர்த்துப்போகச்செய்தது.
  • 1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி, பிரிட்டிஷார் நேரயாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.

10th Social Science History Unit 6 Additional Questions

விரிவாக விடையளிக்கவும்.

1.வேலூர்ப் புரட்சியைப் பற்றி மதிப்பிடுக.

விடை:
புரட்சியைப் பற்றிய மதிப்பீடு:

  • வெளியிலிருந்து உடனடியாக எந்தவொரு உதவியும் கிடைக்காத காரணத்தினாலேயே வேலூர் புரட்சி தோல்வியுற்றது.
  • புரட்சிக்கான ஏற்பாடுகளை 23ஆம் படைப்பிரிவின் 2ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடமும், ஷேக் ஹமீதும், ஜமேதாரான ஷேக் ஹீஸைனும், 1ஆம் படைப்பிரிவின் 1ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த இரு சுபேதார்களும், ஜமேதார் ஷேக் காஸிமும் சிறப்பாகச் செய்திருந்ததாகத் தெரிகிறது.
  • 1857ஆம் ஆண்டு பெரும்கலகத்திற்கான அனைத்து முன் அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் வேலூர் புரட்சி கொண்டிருந்தது.
  • ஒரே வித்தியாசம் என்னவென்றால், கலகத்தைத் தொடர்ந்து எந்த உள்நாட்டுக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை .
  • 1806ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடிந்துவிடவில்லை.
  • பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் அது எதிரொலித்தது.

2.வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் பற்றிக் குறிப்பு வரைக.

விடை:

  • தனது தந்தையாரான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின் பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
  • கம்பெனி நிர்வாகிகளான ஜேம்ஸ் லண்டன் மற்றும் காலின் ஜாக்சன் என்போர் இவரை அமைதியை விரும்பும் மனம் கொண்டவராகவே கருதினார்.
  • எனினும் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.
  • 1781இல் கம்பெனியாருடன் நவாப் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி, மைசூரின் திப்பு சுல்தானுடன் ஆற்காட்டு நவாப் போர்புரிந்து கொண்டிருந்தபோது, கர்நாடகப்பகுதியில் வரி மேலாண்மையும், நிர்வாகமும் கம்பெனியின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்நிலை ஏற்பட்டது.
  • வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
  • இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது.
  • அனைத்துப் பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்கரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
  • இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.

Leave a Reply