11th Tamil Guide unit 3

11th Tamil Guide unit 3.1

11th Tamil Guide Unit 3.1

இயல் 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

Book Back | Additional Question and Answers

11th Tamil Samacheer kalvi guide Lesson 3. Unit 3.1 Book Back and Additional Question Answers.  இயல் 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு. +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 3 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 11th Tamil Guide Unit 3 Full Answer Key

11th Tamil Guide Unit 3 Book Back and Additional Question – Answers  இயல் 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

11th Tamil Guide unit 3

பலவுள் தெரிக

1.கூற்று : ‘கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் : ‘கோடு’ என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு .
அ) கூறும் சரி, விளக்கம் தவறு
ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி
இ) காற்று தவறு, விளக்கம் சரி
ஈ) கூற்றும் தவறு, விளக்கமும் தவறு
Answer:
ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி
2.அகத்திணை இயல், மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை, …………….எனக் குறித்தது.
அ) பாலை
ஆ) முல்லை
இ) குறிஞ்சி
ஈ) மருதம்
Answer:
இ) குறிஞ்சி
 
3.மலை. குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை ,………….. என்னும் கலைச்சொல் குறிக்கும்.
அ) Biology
ஆ) Geology
இ) Zoology
ஈ) Orology
Answer:
ஈ) Orology
 
4.முருகனைச் “சேயோன் மேய மைவரை உலகம்” எனக் கூறும் நூல் …………..
அ) திருமுருகாற்றுப்படை
ஆ) நற்றிணை
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
Answer:
இ) தொல்காப்பியம்
 
5.“விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் …………..
அ) தொல்காப்பியம்
ஆ) புறநானூறு
இ) திருமுருகாற்றுப்படை
ஈ) பரிபாடல்
Answer:
இ) திருமுருகாற்றுப்படை
 
6.திராவிடர்களை ‘மலைநில மனிதர்கள்’ என அழைத்தவர் …………..
அ) ஆர். பாலகிருஷ்ணன்
ஆ)அண்ணாமலையார்
இ) கமில் சுவலபில்
ஈ) தி. சு. செல்லப்பா
Answer:
இ) கமில் சுவலபில்
 
7.பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர் …………..
அ) குறும்பர்
ஆ) ஜதாப்பு
இ) தோடர்
‘ஈகோட்டா
Answer:
இ) தோடர்
 
8.‘கடையெழு வள்ளல்கள்’ வாழ்ந்த இடம் …………..
அ) பாலை
ஆ) காடு
இ) மனை
ஈ) தீவு
Answer:
இ) மலை
 
9.‘கொண்டா தோரா’ இனக் குழுவினர் வாழும் பகு) …………..
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப்பிரதேசம்
இ) ஒடிஸா
ஈ) பீஹார்
Answer:
ஆ) ஆந்திரப்பிரதேசம்
 
10.வீடுகளில் மேடைகள் அமைக்க முக்கியத்துவம் கொடுத்தோர் …………..
அ) கோண்டு இனத்தார்
ஆ) தோடர்
இ) ஜதாப்பு
ஈ) கொய்டெர் இனத்தவர்
Answer:
ஆ) தோடர்
 
11.தாழ்வாரத்தை ‘மெட்டு) எனக் குறிப்பிட்டவர் …………..
அ) ஜதாப்பு
ஆ) குறும்பர்
இ) தோடர்
ஈ) கோண்டு
Answer:
அம் குறும்பர்
 
12.‘மலை என்னும் திராவிடச் சொல், வடமொழியில் ………….. என வழங்கப்படுகிறது.
அ) வனர்
ஆ) மலா
இ) மலே
ஈ) மலய
Answer:
ஈ) மலய
 
13.விளிம்பு’ என்னும் பொருள் தரும் சொல் …………..
அ) முதல்
ஆ) அடி
இ) நுனி
ஈ) வரை
Answer:
ஈ) வரை
 
14.‘தோணிமலை’ என்னும் பெயர் உள்ள இடம் …………..
அ) கேரளம்
ஆ) ஆந்திரம்
இ) கர்நாடகம்
ஈ) தமிழகம்
Answer:
இ) கர்நாடகம்
 
15.காவல்மிகு காப்பரண் கொண்ட மதில் சூழ்ந்த கட்டமைப்பு, ………….. என வழங்கப்பட்டது.
அ) தோணிமலை
ஆ) மலையரண்
இ) கோட்டை
ஈ) காட்டரண்
Answer:
இ) கோட்டை
 
16.‘மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு’ கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் …………..
அ) கொற்கை, வஞ்சி, தொண்டி வளாக ஆய்வு
ஆ) அன்புள்ள அம்மா
இ) சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
ஈ) சிறகுக்குள் வானம்
Answer:
இ) சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
 
17.சரியானதைத் தேர்க.
அ) ‘வரை’ என்ற சொல் கோடு, மலை, சிகரம் என்னும் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஆ) நுனிமுதல் அடிவரை; அடிமுதல் நுனிவரை என்ற தொடர்களில், வரை என்பது விளிம்பு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1. அ, ஆ இரண்டும் சரி
2. அ சரி, ஆ – தவறு
3. அ தவறு, ஆ சரி
4. அ,ஆ இரண்டும் தவறு
Answer:
1. அ, ஆ இரண்டும் சரி
 
18.கீழ்க்காணும் கூற்றுகளுள் தவறானதைத் தேர்க.
கொற்கை, வஞ்சி, தொண்டி என்பன
அ) பழந்தமிழ் ஊர்ப் பெயர்கள்
ஆ) அரசியல், பொருளியல், பண்பாட்டில் உருவானவை
இ) ஆணிவேர் அடையாளங்கள்
ஈ) வடமொழி இலக்கியப் பிரிவுகள்
Answer:
ஈ) வடமொழி இலக்கியப் பிரிவுகள்
 
19.கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து தவறானதைத் தேர்கள்
அ) மலை, மனித சமூகத்தின் ஆதி நிலம்
ஆ) மலை, மனித முன்னேற்றத்திற்கு ஒரு தடை
இ) மலை, மற்றும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி
ஈ) மலை, திராவிடப் பழங்குடிகளின் வாழ்விடம்
1. அ தவறு
2. இ தவறு
3. ஆ தவறு
4. ஈ தவறு
Answer:
3. ஆ தவறு

குறுவினா

1.‘கோட்டை’ என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
‘கோட்டை என்னும் சொல், கோட்ட, கோடு, கோட்டே, கோண்டே, க்வாட் எனத் திராவிட மொழிகளில் எடுத்தாளப்படுகிறது.
கூடுதல் வினாக்கள்
 
2.திராவிடப் பழங்குடி இனப்பெயர்கள் எதன் அடிப்படையில் ஆக்கப்பெற்றுள்ளன?
இந்தியாவில் வாழும் பல்வேறு திராவிடப் பழங்குடி இனக்குழுப் பெயர்கள், மலை, குன்று என்று பொருள்தரும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்றுள்ளன.
 
3.திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள் எவற்றை உணர்த்துகின்றன?
திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், அப்பழங்குடியினரின் மலைசார்ந்த வாழ்வியல் சமூக, சமயக் கூறுபாடுகளைக் குறித்த புரிதலை உணர்த்துகின்றன.
 
4.மலை, குன்று சொல்லாட்சியை உறுதி செய்வது எது?
‘மலை’ என்பது உயரமானதையும், ‘குன்று’ என்பது உயரம் குறைவானதையும் குறிக்கின்றன. மலை, குன்று என்னும் சொல்லாட்சிகள் வெளிப்படுத்தும் உயர வேறுபாட்டை, வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் மலை சார்ந்த இடப்பெயர்கள் உறுதி செய்வது வியப்பளிப்பதாக உள்ளது.
 
5.‘வரை’ என்னும் சொல்வழக்குக் குறித்து அறியப்படுவது யாது?
‘நுனிமுதல் அடிவரை’, அடிமுதல் நுனிவரை’ என்னும் தொடர்களில் வரை’ என்ற சொல், ‘விளிம்பு’ என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
6.பழந்தமிழ்ச் சமூகத்திற்கு ஆணிவேர் அடையாளங்களாகத் திகழும் ஊர்கள் எவை?
கொற்கை, வஞ்சி, தொண்டி என்னும் ஊர்கள், பழந்தமிழ்ச் சமூகத்திற்கு ஆணிவேர் அடையாளங் களாக திகழும் ஊர்களாகும்.
 

சிறுவினா

 
1.‘மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது’ என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.
மனித சமூகத்தின் ஆதிநிலம் மலை.
மலைநிலத்தைத் தமிழ் இலக்கியம், குறிஞ்சி’ என்றே குறிப்பிடுகிறது.
திராவிடர்களைக் கமில் சுவலபில், ‘மலைநில மனிதர்கள்’ என்கிறார்.
இந்தியப் பழங்குடியினர் பெயர்கள், மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்து கொன்றன.
பழங்குடியினர், உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறு, ஓடைகல ஒட்டிக் குடியிருப்பை அமைத்துள்ளனர்.
அவை, பழங்குடியினரின் மலைசார்ந்த சமூக, சமயக் கூறுபாடு சார்ந்த புரிதலைத் தருகின்றன.
 

நெடுவினா

1.“இயற்கையோடு இயைந்த வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன” – கூற்றினை மெய்ப்பிக்க.
மனிதன் தோன்றியது மலைநிலம்:
மலை, மனித சமூகத்தின் ஆதி நிலமாகும். தமிழரின் பண்டைப் பதிவுகள், கடவுளையும் மலையையும் வாழ்வில் தொடர்புபடுத்துவனவாக விளங்குகின்றன.
மலை, தமிழ் இலக்கியங்களில் ‘குறிஞ்சி’ எனக் குறிக்கப்படுகிறது. திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள், மலைசார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.
இயற்கையோடு இயைந்த வாழ்வு :
பழங்குடியினர் ஓடும் நீரையே குடிநீராகப் பயன்படுத்தினர். தம் குடியிருப்புப் பகுதியைவிட உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறுகள், ஓடைகளில் நீர் எடுத்துப் பருகினர்.
மலைஉச்சியில் அமைந்த பழங்குடித் தலைவரின் வீடு, வாழ்விட வடிவமைப்பு, வாழ்வியலில் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தைக் காட்டுகின்றன.
சொல்வழக்கு :
சிந்துவெளி, திராவிட மலைவாழ் மக்களின் அன்றாடப் புழங்கு சொநகளின் தொடர்ச்சி சிந்திக்கத்தக்கதாகும்.
தென்னிந்திய மலைவாழ் மக்களிடையே மலை, மலா, மலே என்னும் சொற்கள் வழங்குகின்றன.
‘மலை’, ‘குன்று’ என்னும் சொல்லாட்சி, மலை சார்ந்த மக்களிடம் வழங்குகிறது சிறப்பாகும்.
கோட்டை:
‘கோட்டை’ என்னும் சொல், செயற்கையான காப்பு அரண்களான கோட்டைகளைக் கட்டி எழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியில் தோன்றின என்பதைவிட, தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதே உண்மை.
மலைப் பெயர்களின் நீட்சி :
வடமேற்கு நாடுகளில் கண்டறியப்பட்ட சான்றுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நெடுமலைகளோடு பொருந்திப் போகும் திராவிடர்களின் மலைப் பெருமிதத்தின் நீட்சியாக உள்ளன. அப்பகுதிகளில் திராவிடர் வாழ்ந்த சான்றுகளை உறுதி செய்கின்றன.
இவற்றால், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வில், இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தமை புலப்படும்.

கூடுதல் வினாக்கள்

2.கடந்தகால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்களாக ஆசிரியர் கூறியுள்ளன யாவை? (அல்லது) கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் – குறிப்பு எழுதுக
கொற்கை, வஞ்சி, தொண்டி என்னும் ஊர்ப் பெயர்கள், பழந்தமிழரின் அரசியல், பொருளியல், பண்பாடு களின் விளைவால் உருவானவை. சங்ககாலப் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கையும், வஞ்சியும், தொண்டியும் ஆணிவேர் அடையாளங்கள்.
 
இப்பெயர்களில் எதையும் வடமொலி இலக்கியங்கள் பதிவு செய்யவில்லை. ஆனால், சங்ககால மன்னர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு, வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன.)
கொற்கை, வஞ்சி தொண்டி காட்டும் பொதுத்தன்மைகள் மிக முக்கியமானவை. இவை கடந்தகால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள் என ஆசிரியர் கூறுகிறார்.
 
3.கொற்கை, வஞ்சி தொண்டிவளாகம் – குறிப்புத் தருக.
கொற்கை, வஞ்சி, தொண்டிவளாகம் என்னும் ஊர்ப்பெயர்கள், பழந்தமிழரின் அரசியல், பொருளியல், பண்பாடுகளின் விளைவால் உருவானவை. சங்ககாலப் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கையும், வஞ்சியும், தொண்டியும் ஆணிவேர் அடையாளங்கள்.
சங்ககால மன்னர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு, வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன. இவை, கடந்தகால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள்.
 
4.‘மலை’, ‘கோட்டை’ என்னும் சொற்களை அடிப்படையாகக் கொண்ட திராவிட இனப்பெயர்கள் யாவை?
மால் பஹாடியா (ஜார்கண்ட்), மல அரயன், மல குறவன், மல மூத்தன், மல பணிக்கர், மலயன், மல வேடா (கேரளம், மலேரு (கர்நாடகம்), என்னும் பழங்குடி இனப்பெயர்கள், ‘மலை’ என்னும் சொல்லடியால் உருவான திராவிட இனப்பெயர்களாகும்.
கோட்டா (நீலகிரி), கொண்ட தோரா (ஆந்திரம்), கொண்டு, கொய்டர் (ஒடிஸா) என்னும் பழங்குடி திராவிட இனப்பெயர்கள், ‘கோட்டை’ என்பதன் அடிப்படையில் உருவானவை.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. நீலகிரியில் உள்ள தோடர் இனத்தஷர், பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர்.
வினா :
பால் எருமைக் கொட்டல்களைப் புனித இடமாகக் கருதுபவர் எவர்?
 
2. திராவிடச் சொல்லான மலை’ என்பது. சமஸ்கிருத மொழியில் ‘மலய’ என்று வழங்கப்படுகிறது.
வினா :
திராவிடச் செல்லான ‘மலை’ என்பது, சமஸ்கிருத மொழியில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
 
3. ‘நுனிமுதல் அடிவரை’ மற்றும் ‘அடிமுதல் நுனிவரை’ என்ற தொடர்களில், ‘வரை’ என்ற சொல் ‘விளிம்பு’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வினா :
(வரை என்ற சொல், எந்தெந்தத்தொடர்களில் விளிம்பு’ என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது?
 
4. தமிழ் மொழியில் ‘கோட்டை’ என்ற சொல், காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் ஒசூழப்பட்ட கட்டமைப்பைக் குறிக்கிறது.
வினா :
தமிழ்மொழியில் ‘கோட்டை’ என்ற சொல், எக்கட்டமைப்பைக் குறிக்கிறது?
 
5. ‘கோடு’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு மலையுச்சி, சிகரம், மலை என்ற பொருள்களோடு வல்லரண், கோட்டை என்ற பொருள்களும் உண்டு.
வினா:
‘கோடு’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு எவ்வெப் பொருள்கள் உண்டு?
 
6. சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய பெயர்கள், ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்.
வினா:
சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்கு எப்பெயர்கள் ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்?

Leave a Reply