11th Tamil Guide unit 3

11th Tamil Guide Unit 3.6

11th Tamil Guide Unit 3.6

இயல் 3.6 பகுபத உறுப்புகள்

Book Back | Additional Question and Answers

11th Tamil Samacheer kalvi guide Lesson 3. Unit 3.6 Book Back and Additional Question Answers.  இயல் 3.6 பகுபத உறுப்புகள். +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 3 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 11th Tamil Guide Unit 3 Full Answer Key

11th Tamil Guide Unit 3 Book Back and Additional Question – Answers  இயல் 3.6 பகுபத உறுப்புகள்

11th Tamil Guide unit 3

பலவுள் தெரிக

1.பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
அ) பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்
ஆ) பகுதி இடைநிலை, சாரியை
இ) பகுதி, சந்தி, விகாரம்
ஈ) பகுதி, விகுதி
Answer:
ஈ) பகுதி, விகுதி, இடைநிலை
2.இலக்கண வகையில் சொற்கள், ……………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு
3.பகுபத உறுப்புகள் மொத்தம் ………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
இ) ஆறு
 
4.பகுபதத்தில் அடிப்படை உறுப்புகள் …………………
அ) மூன்று
ஆ) ஆறு
இ) நான்கு
ஈ) இரண்டு
Answer:
ஈ) இரண்டு
5.பகுபதத்தில் ‘பகுதி’ என்பது, சொல்லின் ……………… அமையும்.
அ) இடையில்
ஆ) முதலில்
இ) இறுதியில்
ஈ) எங்கும் இல்லை
Answer:
ஆ) முதலில்
6.பகுதி என்பது, …………….. வரும்.
அ) பெயர்ச்சொல்லாக
அ) இடைச்சொல்லாக
இ) ஏவல்வினையாக
ஈ) உரிச்சொல்லாக
Answer:
இ) ஏவல்வினையாக
7.திணை, பால், எண், இடம் காட்டும் உறுப்பு………………
அ) பகுதி
ஆ) சந்தி
இ) விகுதி
ஈ) இடைநிலை
Answer:
இ) விகுதி
8.ஏவல்வினையாக அமையும் உறுப்பு…………….
அ) விகுதி
ஆ) இடைநிலை
இ) சந்தி
ஈ) பகுதி
Answer:
ஈ) பகுதி
9.காலம் காட்டும் விறுப்பு, …………. பகுபதத்தில் வரும்.
அ ) பெயர்
ஆ) இடை
இ) உரி
ஈ) வினை
Answer:
வரனை
10.எதிர்மலலப் பொருளைத் தரும் உறுப்பு ……………..
அ) வையர் இடைநிலை
ஆ) காலம் காட்டும் இடைநிலை
இ) எதிர்மறை இடைநிலை
ஈ) எதுவும் இல்லை
Answer:
இ) எதிர்மறை இடைநிலை
11.பொருத்துக.
1. ப்வ் – அ. நிகழ்கால இடைநிலை
2. த், ட், ற், இன் – ஆ. எதிர்மறை இடைநிலை
3. கிறு, கின்று, ஆநின்று – இ. பெயரிடைநிலை
4. ஆ, அல், இல் – ஈ. இறந்தகால இடைநிலை
– உ. எதிர்கால இடைநிலை
Answer:
1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ
12.இவற்றில் இறந்தகால இடைநிலை பெற்ற சொல்…………………
அ) பெறுவாள்
ஆ) நடக்கிற
இ) பாடினாள்
ஈ) உண்ண
Answer:
இ) பாடினாள்
13.இவற்றில் நிகழ்கால இடைநிலை பெற்ற சொல்…………..
அ) ஆடுவாள்
ஆ) ஆடியது
இ) செல்லும்
ஈ) பாடுகிறது
Answer:
ஈ) பாடுகிறது
14.கொடுப்பாள் – இதில் இடம்பெற்றுள்ளது …………….. இடைநிலை.
அ) இறந்தகால
ஆ) நிகழ்கால
இ) எதிர்கால
ஈ) எதிர்மறை
Answer:
இ) எதிர்கால
15.தவறான விடையைத் தெரிவு செய்க.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்
அ) திரு + புகழ் – திருப்புகழ்
ஆ) கவிதை + பேழை – கவிதைப்பேழை
இ) காவடி + சிந்து – காவடிச்சிந்து
ஈ) இந்த + பாடல் இப்பாடல்
Answer:
ஈ) இந்த + பாடல் – இப்பாடல்
16.கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சாரியை
1) திணை, பால் காட்டும்
2) பொருள் இல்லை
3) முதனிலை எனப்படும்
4) காலம் பணர்த்தும்
i) அ – 1, ஆ – 2, இ – 4, ஈ – 3
ii) 1, ஆ – 3, இ – 2, ஈ – 4
iii) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
iv) அ- 3, ஆ – 2, இ – 1, ஈ – 4
Answer:
iii) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 4

 

சிறுவினாக்கள்

 
1.பகுபத உறுப்பிலக்கணம் கூறுக. அ. வருகின்றாள் ஆ. வாழ்வான் இ. காண்பிப்பார் ஈ. பிரிந்த
அ. வருகின்றாள் – வா (வரு) + கின்று + ஆள்
வா – பகுதி, ‘வரு’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை,
ஆள் – படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி.
ஆ. வாழ்வான் – வாழ் + வ் + ஆன்
வாழ் – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.
இ) காண்பிப்பார் – காண்பி + ப் + ப் + ஆர்
காண்பி – (பிறவினைப்) பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை,
ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.
ஈ. பிரிந்த – பிரி + த் (ந்) + த் + அ
பிரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

கூடுதல் வினாக்கள்

 
2.‘பகுதி’ என்பதனை விளக்குக.
சொல்லின் முதலில் நிற்கும் உறுப்பு; முதல்நிலை ; பகுதி; அடிச்சொல்; வேர்ச்சொல்.
பகுதி, ஏவல் வினையாக அமையும். மேலும் பிரிக்க இயலாது.
எ – டு: செய், உண், கல், படி, நட, ஓடு, தா, பாடு, எழுது.
3.‘விகுதி’ என்பதனை விளக்குக.
சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பு; இறுதிநிலை; விகுதி.
வினைமுற்றுச் சொல் விகுதி. இடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை ), பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்), எண் (ஒருமை, பன்மை), திணை (உயர்திணை, அஃறிணை) என்பவற்றை உணர்த்தும்.
எச்சம், தொழிற்பெயர், ஏவல், வியங்கோள் – அவ்வவற்றிற்கு உரிய விகுதி பெறும்.
4.இடைநிலை என்பதை விளக்குக.
இடைநிலை என்பது, சொல்லின் இடையில் நிற்கும்; காலம் காட்டும்; சில, எதிர்மறைப் பொருள் உணர்த்தும்.
5.சந்தி என்பதனை விளக்குக.
‘சந்தி’ என்பது பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றுவது.
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். (புணர்ச்சியில் திரிதலும் கெடுதலும் – விகாரமாகும்).
த், ப், க் என்னும் மெய்களும் ய், வ் உடம்படு மெய்களுமாகும்.
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையிலும் சில சொற்களில் இடம்பெறும்.
6.சாரியை என்பதனை விளக்குக.
இடைநிலையையும் விகுதியையும் பொருந்தச் (இயையச்) செய்வது, ‘சரிய’ என்னும் உறுப்பு. அ, அன், கு என்பவை சாரியையாக வரும். பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் உயிர்மெய் எழுத்தும் சாரியை எனப்படும்.
7.விகாரம் என்பது யாது?
பகுபத உறுப்புகள் புணரும்போது ஏற்படும் எழுத்துகளின் வடிவமாற்றம் (திரிதல், கெடுதல், குறுகல்) விகாரம் எனப்படும்.

இலக்கணதி தேர்ச்சிகொள்

1.பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
பகுபத உறுப்புகள் ஆறு. அவை : பகுதி. விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
2.காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
த், ட், ற், இன் – என்னும் இடைநலைகள், இறந்தகாலம் காட்டும்.
எ – கா : செய்தான் – செய்த் + ஆன்; உண்டாள் – உண் + ட் + ஆள்
கற்றார் – எல் ) + ற் + ஆர்; வணங்கினேன் – வணங்கு + இன் + ஏன்
கிறு, கின்று, ஆதின்று – நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்.
எ – கா : உண்கமான் – உண் + கிறு + ஆன், உண்கின்றன – உண் + கின்று + அன் + அ,
செய்யா நின்றான் – செய் + ஆநின்று + ஆன்
ப், வ் எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்.
எ – கா : படிப்பான் – படி + ப் + ப் + ஆன் வருவான் – வா (வரு) + வ் + ஆன்
3.பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்வெவ்விடங்களில் அமையும்?
சந்தி : பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும். சிறுபான்மை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் அமையும்.
சாரியை : இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் அமையும். சிறுபான்மை பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும்.
4.விகுதிகள், எவற்றை உணர்த்தும்?
விகுதிகள், திணை (உயர்திணை, அஃறிணை), பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்), எண் (ஒருமை, பன்மை), இடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை ) ஆகியவற்றை உணர்த்தும்.
5.வேர்ச்சொல், எதிர்மறை இடைநிலை, விகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சொற்களை உருவாக்குக.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

‘தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்’ என்று போற்றப்படும் சி.வை.தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து, தம் இருபதாவது வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலை உரை டன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். 1868ஆம் ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும், பின்னர்க் கலித்தொகை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாகப் பதிப்பித்துப் புகழ்கொண்டார். அத்துடன் நில்லாது, கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். ஆறாம் வாசகப் புத்தகம் முதலிய பள்ளிப்பாட நூல்களையும் எழுதினார்.
அவருடைய தமிழ்ப்பணியைக் கண்ட பெர்சிவல் பாதிரியார், அவரைத் தாம் நடத்திய ‘தினவர்த்தமானி’ என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார். அவ்வமயம் அவர் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார். அரசாங்கத்தாரால், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். பிறகு, பி. எல். தேர்விலும் தேர்ச்சி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதிக் கடமையாற்றினார்.
1.மாநிலக் கல்லூரி – புணர்ச்சிவிதி கூறுக.
மாநிலக்கல்லூரி – மாநிலம் + கல்லூரி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்” (மாநில + கல்லூரி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (மாநிலக்கல்லூரி)
2.ஆசிரியராக்கினார் – இதன் பகுதி…………..
அ) ஆசு ஆ) ஆசிரி
இ) ஆசிரியராக்கு
ஈ) ஆசி
Answer:
இ) ஆசிரியராக்கு
3.சிறுசிறு தொடர்களாக மாற்றி எழுதுக.
தாமோதரனார், நீதிநெறி விளக்கம் என்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டுக் கலித்தொகை வீராசாழியம் உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்துக் கட்டளைக் கலித்துறை, நட்சத்திரமாலை, சூளாமணி கனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
தாமோதரனார், நீதிநெறி விளக்கம் என்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். தாமோதரனார், கலித்தொகை, வீரசோழியம் உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தார்.
தாமோதரனார், கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமானி கவசம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
4.பெரும்புகழ் – இலக்கணக்குறிப்புத் தருக.
பண்புத்தொகை.
5.கல்லூரி, உயர்நீதிமன்றம், வரலாறு, பணி ஆகியவற்றிற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொற்களை எழுதுக.
கல்லூரி – College, உயர்நீதிமன்றம் – High court. வரலாறு – History, பணி – Work, Job

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. தாமோதரனார், கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
வினா : தாமோதரனார், எக்கால்களை எழுதியுள்ளார்?
2. தாமோதரனார், எந்தப் பாதி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதிக் கடமையாற்றினார்.
வினா : தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும், எவ்வாறு கருதிக் கடமையாற்றினார்?

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

1.குமரனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் குமரனது வீடு.
குமரனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகை தாருங்கள். என் வீட்டிற்குப் பக்கத்து வீடுதான் குமரனது வீடு.
 
2.அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை பெறவேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியைப் பெற வேண்டும்.
 
3.கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவர்.
கல்வி கேள்விகளில் சிறந்தவர், நன்மை தீமைகளைப் புரிந்து பேசுவர்.
 
4.தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
தமிழர், ஆற்றுத் தண்ணீரைத் தேக்கிச் சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
 
5.சான்றோர் மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்ட செய்தனர்.
சான்றோர், மிகுந்த பொறுப்புடன் சிறப்பான சேவை புரிந்து, கொள்கையை நிலைநாட்டச் செய்தனர்.

தமிழாக்கம் தருக

1. Education is the most powerful weapon, which you can use to change the world.
Answer:
கல்வி என்பது அதிக ஆற்றல் வாய்ந்த கருவி என்பதனைக் கொண்டு, நீ உலகையே மாற்றலாம்.
2. Looking at beauty in the world is the first step of purifying the mind.
Answer:
உலகில் காணப்படும் அழகை நோக்குவதே, மனத்தைத் தூய்மை செய்வதற்கு முதல் படியாகும்.
3. Culture does not make people; People make culture.
Answer:
பண்பாடு என்பது மக்களை உருவாக்குவதில்லை; மக்களே பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.
4. People without the knowledge of their past history and culture is like a tree without roots.
Answer:
கடந்தகால வரலாற்றையும் நாகரிகத்தையும் பற்றிய அறிவைப் பெறாத மக்கள், வேர் இல்லாத மரத்திற்கு ஒப்பாவர்.
5. A nation’s culture resides in the hearts and in the soul of its people.
Answer:
ஒரு தேசத்தின் பண்பாடு என்பது, அத் தேசமக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது.

கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப் பதாகை ஒன்றை உருவாக்குக.

Answer:
அறிவிப்புப் பதாகை உருவாக்கம்
தமிழ்ப் பகை கட்டுக் கருத்தரங்கு
பங்கு பெற வருக!
இடம் : பாரதி கலைக்கூட அரங்கு (மதுரை) (தெப்பக்குளம் அருகில்)
நாள் : ஜனவரி – 13,
தலைப்பு : ‘பண்பாநாகணல் வாழும் தமிழர்’
உரையாற்றுபவர் : கவிஞர் அன்பரசி (சமூக ஆர்வலர்)
கலந்துரையாடலும் நடைபெறும்.
ஆர்வலர்களே! மாணவாகளே! கலந்து கொள்ளத் திரண்டுவருக!
ஒருங்கிணைப்பாளர் :
இனியன்
(சிறகுகள் அமைப்பு)
மொழியோடு விளையாடு

கட்டுரை எழுதுக.

பண்பாட்டைப் பாதுகாப்போம்! பகுத்தறிவு போற்றுவோம்’ – என்னும் பொருள்பட ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
பண்பாடாவது யாது ? :
நெடுங்காலம் தொடர்ந்து வாழ்ந்த வாழ்க்கை முறையில் உருவான சிறந்த பண்புகளை உள்ளடக்கிய நெறிமுறைகளைப் பண்பாடு என்று கூறுவர். குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்கள் நடத்தும் வாழ்க்கை நெறிமுறை, உறைவிட அமைப்பு, இறைவழிபாடு, ஆடல் பாடல் சார்ந்த கலை, சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்வுநிலை, உணவு உடை தொடர்பானவை அனைத்தையும் உள்ளடக்கியதைப் பண்பாடு எனக் கூறுவர்.
முன்னோர் வகுத்தளித்த நெறிகள் :
நமக்கென முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள பாரம்பரிய நன்னெறிப் பண்புகளை, அவர்களது வழிவந்த சந்ததியினர் என்கிற முறையில் நாமும் பின்பற்றி வருகிறோம்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’, ‘வறியார்க்கு ஒன்று ஈதல்’ என்னும் பல்வேறு பண்பாட்டு நெறிகளை நம் முன்னோர் நமக்கு வகுத்தளித்துள்ளனர். அந்த வகையில் கூடி வாழ்தல், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல், பிறர் துன்பம் கண்டு வருந்தி, அத் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளுதல், உற்றுழி உதவுதல், இல்லாதார்க்கு ஈதல் என்கிற எத்தனையோ பண்புகள் நம்மிடையே காணப்படுகின்றன.
பண்பாடு கெடாமல் வாழ்க :
பண்படுத்தப்பட்ட நிலம்தான் நல்ல விளைவைக் கொடுக்கும். நல்ல விளைபொருளைப் பெறுவதற்கு நிலத்தைப் பலமுறை உழுது பண்படுத்தி, நீர் தேங்க வழிவகுத்துக் கொள்வதுபோல, நம் நல வாழ்வுக்குத் தேவையான பல நெறிமுறைகளை முன்னோர் வாழ்விலிருந்து அறிந்து கொள்கிறோம். உலகின் எண்ணற்ற இனம் சார்ந்த மக்கள், பலவேறு குழுக்களாக வாழ்கிறார்கள்.
அவ்வக் குழுக்களுக்கும் சில பண்பாட்டுப் பழக்கங்கள் உண்டு. ஒரு குழுவின் பண்பாடு, மற்றொரு குழுவுக்குப் பிடிக்காமல் போகலாம்; பிடித்தும் இருக்கலாம். எனினும், அவற்றிலிருந்து நல்லனவற்றை ஏற்று, நம் பண்பாடும் பாக்க வழக்கங்களும் கெடாமல் வாழப் பழகுதல் வேண்டும்.
நம் வாழ்க்கைமுறை :
மேற்கத்திய வாழ்வில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை கிடையாது. வயது வந்த பிள்ளைகள் பிரிந்து சென்று, தனிவாழ்வை நடத்துகின்றனர். நம் நாட்டுக் கூட்டுக்குடும்ப வாழ்க்கை, முதியவர்க்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக அமைந்தது. உணவும் உடைகளும் நம் தட்பவெப் நிலைக்கு ஏற்ப, உடலுக்கு ஊறு செய்யாதவை. பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நெறிமுறைான் உணவு உடை பழக்கம் என எல்லாம் எல்லாராலும் போற்றப்படுபவை.
பண்பாடே பாதுகாப்பு :
எனவே, புதியதான நாகரிகத்தையும் பண்பாட்டையும் தேடி அலைவோர், சிறிது சிந்தித்துப் பார்த்து, அதன் நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, ஏற்றதை மேற்கொள்வதே நல்ல வாழ்வைத் தரும். நமது பண்பாடும், நாகரிகமும் தொன்மை மிக்கவை. அவை பல ஆயிரம் ஆண்டுகள் பண்பட்டுத் தேர்ந்து வளர்ந்தவை.
அவற்றை நாமும் தொடர்ந்து கடைப்பிடிப்பது நமது நல வாழ்வுக்கு வழிவகுக்கும். நம் சந்ததியினருக்கு நல்ல வாழ்வுக்குரிய நெறியைக் காட்டும். எனவே பண்பாட்டைப் பாதுகாப்போம்; பகுத்தறிவைப் போற்றுவோம்.
உடன்பட்டும் மறுத்தும் பேசுக
1. ஆங்கிலேயர் வருகை | உடன்படல் / மறுத்தல்
ஆங்கிலேயர் வருகை (உடன் மடல்)
ஆங்கிலேயர் வருகையால் இந்தியா முழுவதும் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. தொலைத்தொடர்பு வசதி, அவர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டின் மிகப்பெரிய அலுவலகக் கட்டடங்கள், அவர்கள் கட்டுமானத்தால் ஆனவையேயாகும். மேலும், நமது தொழில்துறையை மேம்படுத்தியதும் அவர்களே. அவர்களின் காலம், வார்ச்சிப் படிநிலையின் விடியற்காலம் எனலாம்.
ஆங்கிலேயர் வருகை (மறுத்தல்)
ஆங்கிலேயர், இந்தியாவில் இரயில் பாதைகளைத் துறைமுகங்களோடு இணைத்து, அதன் வழியாக நமது அரிய செல்வங்களையும் உற்பத்திப் பொருள்களையும் பிரிட்டனுக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் வாழ்வ மேம்படுத்திக் கொள்வதற்காகவே. தொலைத்தொடர்பு வசதிகளையும் பெரிய கட்டடங்களையும் உருவாக்கினர்; இந்தியர்களுக்காகச் செய்து கொடுக்கவில்லை. அவர்களின் ஆட்சிமுறைத் தேவைகளுக்காகவே செய்துகொண்டனர். எனவே, ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்த காலம், நம்மை நாமே தொலைத்திருந்த இருண்டகாலம் எனலாம்.
2. தொழில் நுட்பத்தால் விளைந்தது வளர்ச்சியே / தளர்ச்சியே
தொழில் நுட்பத்தால் விளைந்தது வளர்ச்சியே!
தொழில் நுட்பம் வளர்ந்ததால், மின்விசைக் கருவிகள் கிடைத்தன. ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தேவையான நீரைப் பெற முடிந்தது. எண்ணற்ற தொழில்கள் பெருகித் தொழிற்சாலைகள் வளர்ந்தன. போக்குவரத்து வசதிகள் பெருகியுள்ளன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். நிலத்தை உழவும், களை எடுக்கவும், அறுவடை செய்யவும் புதிய புதிய கருவிகள் கிடைத்துள்ளன.
தொழில் நுட்பத்தால் விளைந்தது தளர்ச்சியே !
தொழில்நுட்பம் பெருகியதால் சிற்றூர்கள் அழிந்தன. பேரூர்கள் பெருகின. தொழிற்பேட்டைகள் வளர்ந்தன. எரிபொருளுக்காகக் காடுகளை அழித்தனர். ஆழத் துளையிட்டு நீரை எடுத்ததால், பூமித்தாய் ஈரப்பசையை இழந்துவிட்டாள்.
இந்த மண்ணுலகம் மனிதனுக்குமட்டும் சொந்தமானதன்று. மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றிய எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றின் கதி என்ன? அவை இல்லாமல் மனிதன்மட்டும் தனித்து வாழ முடியுமா? காற்றுமாசு, நீர்மாசு, நிலமாசு எனச் சுற்றுச்சூழல் மாசுபடத் தொழில்நுட்பப் பெருக்கம்தானே காரணம்? அதனால் உலக உயிரின வீழ்ச்சிக்கு அடிப்படையே தொழில்நுட்ப வளர்ச்சிதான் என்பதை நிறுவ, எத்தனையோ சான்றுகளைத் தரலாம்.
3. தற்போதைய உணவுமுறை நல்வாழ்வை வளர்க்கிறது / குறைக்கிறது
தற்போதைய உணவுமுறை நல்வாழ்வை வளர்க்கிறது.
உயிர் வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாதது. இன்றைய நிலையில் விரைவாகச் செயல்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. எனவே, உணவுக்காகச் செலவிடும் நேரத்தைச் சுருக்கமாகச் செலவிட எண்ணுகின்றனர்.
சிற்றுண்டி உணவு வகைகளைத் தயாரிக்க ஆகும் கால தாமத்ததைத் தவிர்க்கக் கடைகளில் வாங்கிக் கொள்வது எளிதாக உள்ளது. எனவே, விரைவு உணவகங்கள் பெருகியுள்ளன. பயணம் செய்யும்போது உண்பதற்கெனப் பல உணவு வகைகள் கிடைக்கின்றன உழைப்பு பெருகவும், விரைந்து செயல்படவும், நம் வாழ்வை எளிமையாக்கவும் இன்றைய உணவுப் பழக்கம் சிறப்பானதாக உள்ளது.
தற்போதைய உணவுமுறை நல்வாழ்வைக் குறைக்கிறது.
உயிர் வாழ்க்கைக்கு மட்டுமல்ல. நோயற்ற வாழ்வுக்கும் உணவு இன்றியமையாததாகிறது. நம் வீட்டில் சமைக்கும் உணவில் சத்துப் பொருள்கள் சரிவிகிதத்தில் இடம்பெறுகின்றன. விரைவு உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகளில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்ற வேதிப்பொருள்கள், முதுமைக் காலத்தில் நோய் செய்யும்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் கையாளுவதற்கு வசதியாக இருந்தாலும், அவற்றில் கலந்துள்ள வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறுவிளைக்கும். எனவே, இன்றைய நிலையில் கடைப்பிடிக்கப்படும் உணவுமுறை, நல்வாழ்வை வளர்ப்பதாக இல்லை; குறைப்பதாகவே உள்ளது.
4. தமிழர்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள் | தள்ளி வைத்திருக்கிறார்கள்
தமிழர்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள் :
தமிழர்களின் பண்பாடு தொன்மையானது; பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது; உடை, உணவு, பழக்கவழக்கம், மரத்க்கைமுறை ஆகியவற்றில் வெளிப்படுவது. இன்றளவும் தமிழர் தம் பண்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முன்னோர் கடைப்பிடித்த நெறிமுறைகளை இன்றளயை இடைவிடாமல் தொடர்ந்துகொண்டுதான் வருகிறார்கள்.
வேலை, தொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டாலும், மொழியையும் பண்பாட்டையும் மறவாமல் கடைப்பிடித்துக் கொண்டுதானே வருகிறார்கள். இந்த வகையில் தமிழர்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.
தமிழர்கள் பண்பாட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் :
பண்கொட்டுப் பழமையும் பாரம்பரியப் பெருமையும் கொண்ட தமிழ்மக்கள், இன்று அவற்றைக் கடைப்ப டிக்கின்றனரா? கேள்விக்குறியாகவே உள்ளது. முதலில் தங்களைப் பெற்றவர்களை ‘அம்மா’ என்றும் ‘அப்பா என்றும் அழைக்கிறார்களா? தாய்மொழியைக் கற்கின்றனரா? பிழை இன்றிப் பேசவும் எழுதவும் செய்கின்றனரா? இல்லையே! தமிழைக் கெடுத்து ஆங்கிலக் கலவையோடுதானே பேசுகின்றனர் ! அதுமட்டுமா? உணவுமுறை, உடை மற்றும் பழக்க வழக்கங்களைக்கூட மாற்றிக்கொண்டுள்ளதைக் காண்கிறோம் அல்லவா? நம் முன்னோர் கொண்டாடிய பொங்கல், தீபாவளி முதலான விழாக்களை, நம் முன்னோர் கொண்டாடியபடி கொண்டாடுகிறோமா? எங்கோ சிலர் பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையினராகிய தமிழர், பெயரளவில் தமிழராக வாழ்கின்றனர். தங்கள் பண்பாட்டைத் தள்ளிவைத்து, அன்னிய மோகத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

கலைச்சொல் அறிவோம்

  1. இனக்குழு – Ethnic Group
  2. முன்னொட்டு – Prefix
  3. புவிச்சூழல் – Eare EMironment
  4. பின்னொட்டு – Suffix
  5. வேர்ச்சொல் அகராதி – Raohord Dictionary
  6. பண்பாட்டுக்கூறுகள் – Cultural Elements

Leave a Reply