12th Tamil Samacheer Kalvi Guide இயல் 3 Book Back & Additional Question-Answers www.studentsguide360.com

12th Tamil Guide Unit 3.5 Answers

12th Tamil Unit 3 Guide

இயல்: 3.5 பொருள் மயக்கம்

12th Tamil Guide Unit 3.5 Answers. TN Standard Tamil Samacheer kalvi Guide இயல்: 3.5 பொருள் மயக்கம் Book Back and Additional Question with answers. +2 Tamil New Syllabus Full Answer key Important Question with the answer for Mid Term, Quarterly, Half-yearly, Revision Exams, and also Public Exams. STUDENTS GUIDE 360
12th Tamil Guide Unit 3 இயல்: 3.5 பொருள் மயக்கம் Book Back and Additional Question-Answers.
12th Tamil Samacheer Kalvi Guide இயல் 3 Book Back & Additional Question-Answers www.studentsguide360.com

இலக்கணத் தேர்ச்சி கொள் | இயல்: 3.5 பொருள் மயக்கம்

1. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
Answer: இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல் 
2. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
அ) பாலை பாடினான் – 1. தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
ஆ) பாலைப் பாடினான் – 2. தேரினைப் பார்த்தான்
இ) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்
ஈ) தேரைப் பார்த்தான் – 4. பாலைத் திணை பாடினான்
அ) 4, 1, 3, 2
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
Answer: இ) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான் 

3. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.

Answer:
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர். 

4. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க.

Answer:
(எ.கா) 
 12th Tamil Guide Unit 3.5 Answers இயல்: 3.5 பொருள் மயக்கம்

5. அண்ணன் அடித்துவிட்டான். காற்புள்ளி இடாமல் எழுதுவதானல் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.

Answer:
எழுதும்போது காற்புள்ளியிடாமல் எழுதினாலோ இடம்மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ, தொடரில் உள்ள சொற்கள், அத்தொடருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வேறு பொருளைத் தரும். சான்று : அவன், அக்கா வீட்டிற்குச் சென்றான், அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றான். 

6. சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.

Answer:
இரட்டைக்கிளவித் தொடர்கள் – சலசல, கலகல.
இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
  • நீர் சல சலவென ஓடியது (தவறு)
  • நீர் சலசலவென ஓடியது (சரி)
  • கல கலவென சிர்த்தாள். (தவறு)
  • கலகலவெனச் சிரித்தாள். (சரி)

7. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?

Answer:
  • ‘திருவளர் செல்வன்’ என்பதே சரியான தொடராகும்.
  • திருவளர் செல்வன் என்பது வினைத்தொகை.
  • வினைத் தொகைக்கு சொல்லுக்கிடையில் வல்லினம் மிகக்கூடாது என்ற இலக்கண விதியின் படி திருவளர்செல்வன் என்பதே சரியான தொடராகும்.

கூடுதல் வினாக்கள் | இயல்: 3.5 பொருள் மயக்கம்

 பலவுள் தெரிக

1. சரியானதைத் தேர்க.
அ) உடம்படுமெய் – பேசியபடி
ஆ) பண்புத்தொகை – கத்துகடல்
இ) சொற்புணர்ச்சி – சுடர் ஆழி
ஈ) மேடுபள்ளம் – எதிரிணைச் சொல்
Answer: ஈ) மேடுபள்ளம் – எதிரிணைச் சொல் 
2. சரியானதைத் தேர்க.
அ) துணைவினையுடன் கூடிய சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
ஆ) இடைச் சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
இ) பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
ஈ) வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் அல்ல.
Answer: இ) பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும். 
3. சரியானதைத் தேர்க.
அ) காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்.
ஆ) இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.
இ) பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
Answer: ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான். 
4. தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ………….. இடத்திலும் வரும்.
அ) படர்க்கை
ஆ) தன்மை
இ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) முன்னிலை
Answer: ஈ) முன்னிலை 
5. பொருந்தாததைத் தேர்க.
அ) பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.
ஆ) எதிரிணைச் சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
இ) விடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ஈ) பண்புத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் என்னும் தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
Answer: அ) பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது. 
6. பொருந்தாததைத் தேர்க.
அ) குதிரையும் யானையும் வேகமாக ஓடின.
ஆ) அவன் வெண்மதியிடம் பேசினான்.
இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.
ஈ) கோவலன் மதுரைக்குச் சென்றான்.
Answer: இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது. 
7. பொருத்துக.
அ) அவன் – 1. அன்று
ஆ) அவர் – 2. அல்ல
இ) நாய் – 3. அல்ல ர்
ஈ) குதிரைகள் – 4. அல்லன்
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:அ) 4, 3, 1, 2 
8. பொருத்துக.
அ) உற்றாருறவினர் – 1. நேரிணைச் சொற்கள்
ஆ) சீரும்சிறப்பும் – 2. உம்மைத் தொகை
இ) மேடுபள்ளம் – 3. வினைத் தொகை
ஈ) கத்துகடல் – 4. எதிரிணைச் சொற்கள்
அ) 2, 1, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 4, 1, 2
Answer: ஆ) 2, 1, 4, 3 
9. சரியான தொடரைக் கண்டுபிடி.
அ) ஆண்டுதோறும் மறைந்த தி. ஜானகிராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும்.
ஆ) மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.
இ) தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் மறைந்த கூட்டம் நடைபெறும்.
ஈ) மறைந்த நினைவாக தி. ஜானகிராமன் ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்
Answer: ஆ) மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும். 
10. சரியான கருத்துகளைக் கண்டறிக.
i) பண்புத்தொகை, வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை.
ii) எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
iii) செங்கடல் என்று பிரிக்காமல் எழுதுவதே சரியானது.
அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer: ஈ) மூன்றும் சரி 
11. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருைைளத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களை …………. எழுத வேண்டும்.
அ) சேர்த்து
ஆ) பிரித்து
இ) இடைவெளியுடன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer: அ) சேர்த்து 
12. சரியான கூற்றுகளைக் கண்டறிக.
i) இடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ii) உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுதல் வேண்டும்.
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) இரட்டைக் கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer: ஈ) நான்கும் சரி 
13. அது என்னும் வேற்றுமை உருபு ……………….. உரியது.
அ) அஃறிணைக்கு
ஆ) உயர்திணைக்கு
இ) ஐந்திணைக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer: அ) அஃறிணைக்கு 

குறுவினா | 12th Tamil Guide Unit 3.5 Answers

1. படிப்போர்க்கும் கேட்போருக்கும் எப்போது பொருள் குழப்பம் ஏற்படும்?

Answer:
எழுதும் போதோ, பேசும் போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும், தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும், நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இடாமல் எழுதுவதும், இடக்கூடாத இடங்களில் இடுவதும், வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுவதும் தேவையற்ற இடங்களில் இட்டும் எழுதினால் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பொருள் குழப்பம் ஏற்படும். 

2. இடைவெளி விட்டு எழுதும் போது பொருள் வேறுபடுவதற்கு இரண்டு சான்று தருக.

Answer:
சான்று :
  • ஐந்து மாடி வீடு – ஐந்து மாடிவீடு
  • அப் பாவின் நலங்காண்க. – அப்பாவின் நலங்காண்க.

3.  வல்லின மெய்களால் ஏற்படும் பொருள் வேறுபாட்டிற்கு இரண்டு சான்று தருக.

Answer:
சான்று : பிட்டுத் தின்றான் – பிட்டைத் தின்றான்
பிட்டு தின்றான் – பங்கு வைத்து தின்றான்
ஈட்டிக் கொண்டு வந்தான் – மேற்செய்யும் ஈட்டியைக் கொண்டு வந்தான்
ஈட்டி கொண்டு வந்தான் – பொருளை ஈட்டி கொண்டு வந்தான் 

4. இடைச்சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதினால் ஏற்படும் தவறினை இரண்டு சான்றுகள் மூலம் நிரூபி.

Answer:
இடைச்சொற்கள் : பால், படி
பால் :
அவன்பால் கொண்டுசென்றான். (அவனிடம் கொண்டு சென்றான்)
அவன் பால்கொண்டு சென்றான். (அவன் பால் (குடிக்கும் பால்) கொண்டு சென்றான்)
படி :
அளக்கும்படி வேண்டினான். (பொருளை அளக்கும்படி வேண்டினான் )
அளக்கும் படி வேண்டினான். (பொருளை அளக்க படி வேண்டினான்) 

5. தொடரமைப்பு மாறினால் பொருளும் மாறிவிடும் என்பதற்குச் சான்று தருக. தொடரமைப்பு மாறினால் பொருள் மாறிவிடும்.

Answer:
சான்று : ஆண்டு தோறும் மறைந்த தி.ஜானகி ராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும். இத்தொடர் தி.ஜானகி ராமன் ஆண்டுதோறும் மறைந்தார் என்னும் தவறான பொருளைத் தருகின்றது.
சரியான தொடரமைப்பு :
“மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்” என்பதேயாகும். 

6. உரிச்சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

Answer:
உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும் போது சேர்த்தே எழுத வேண்டும்.
சான்று : கடிமணம் (சரி)
கடி மணம் (தவறு) 

சிறுவினா

1. பிழை தவிர்க்கச் சில குறிப்புகளைத் தருக.

Answer:
  • ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதிப் பழகுதலும் உதவும்.
  • சொல்லுக்கான பொருளை நினைவில் கொள்ளுதல் சிறந்த பயிற்சியாகும்.
  • மரபுச் சொற்களைச் கற்றல் இன்றியமையாத ஒன்றாகும்.
  • இலக்கண விதிகளை மனத்துள் பதித்து வைப்பதும் நமது கடமை.
  • எழுதியதை மீளப் படித்துப் பார்த்தல் பிழையில்லாத் திருத்தலும் கடமையாகும்.

2.  தாய்வழிக் குடும்பத்தைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுபவன யாவை?

Answer:
  • சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தான்.
  • தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது.
  • பதிற்றுப் பத்து கூறும் சேர நாட்டு மருமக்கள் தாய் முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
  • சிறுவர்தாயே பேரிற் பெண்டே (புறம். 290)
  • செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் (புறம். 276)
  • வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் (புறம். 277)
  • முளரிமருங்கின் முதியோள் சிறுவன் (புறம். 278)
  • என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் (கலி. பாலை. 8)
  • முதலான தொடர்களில் இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

3. சங்ககாலத்தில் தந்தைவழிக் குடும்ப முறை குறித்தெழுதுக.

Answer:
  • (i) மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண்மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிய பரவலாகிவிட்டதையும் காண முடிகிறது.
  • (ii) ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும்.
  • “நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும்
  • என்மனை வதுவை நல்மணம் கழிக”
  • (iii) ன்னும் ஐங்குறுநூற்று பாடல் வரிகள் மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்த போது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள் என்பதை அறிவதுடன் மணமக்களின் வாழ்விடம் கணவன் அகம் என்பதை உறுதிப்படுத்தலாம்.
  • (iv) “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” என்னும் குறுந்தொகை பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது. 

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம் 

12th Tamil Guide Unit 3.5 Answers இயல்: 3.5 பொருள் மயக்கம் Students Guide 360
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், “நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயல்படுபொருள் இல்லை, ஆனால் வகுப்பில் இருந்து வெளியேறுக” என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் ‘திராவிட சாஸ்திரி’ என்று சி. வை. தாமோதரனாரால் போற்றப்பட்டட பரிதிமாற் கலைஞர்.
 
பரிதிமாற் கலைஞர் அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப். ஏ (F. A – First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் அண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவுத் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் : 9 கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு. போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.
பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன் : முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004 ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.
பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
 
தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.
உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரையிலிருந்து, “பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி, ஆயின் தமிழ் உயர்தனிச் செம்மொழியாம்.
வினாக்கள்: 
  • 1. சி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு போற்றினார்?
  • 2. பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடக நூல்கள் யாவை?
  • 3. கீழ்வரும் சொல்லின் இலக்கணத்தையும், புணர்ச்சி விதியினையும் எழுதுக.
  • 4. பரிதிமாற்கலைஞர் தமிழுக்குத் தந்திட்ட பெருமைமிகு வரிகளுள் ஒன்றினை எழுதுக.
  • 5. சூரிய நாராயணர் – இதன் தமிழாக்கம் என்ன?
Answer:
  • 1. திராவிட சாஸ்திரி.
  • 2. ரூபாவதி, கலாவதி.
  • 3. செம்மொழி – பண்புத்தொகை
  • செம்மொழி – செம்மை + மொழி
  • ஈறுபோதல் – செம் + மொழி = செம்மொழி
  • 4. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி செம்மொழி.
  • 5. பரிதிமாற்கலைஞர்.
  • தமிழாக்கம் தருக.
In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key that opens many economic, social, and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyze the importance of education largely as a means for better opportunities in life and that is the main theme of this chapter-let it is clearly stated that educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.
 
கல்வி என்பது மனித வளர்ச்சி அடிப்படையில் ஒன்று. அதுவே இறுதியானது. ஆயினும் அது முடிவானது அன்று. கல்வி என்பது மனிதனுடைய அடிப்படை உரிமை. இது மக்களின் பொருளாதாரம் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த துறைகளினுடைய கதவுகளைத் திறக்க உதவும் திறவுகோல். இது வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் உயர்த்துகிறது. மனிதனுடைய வாழ்கையில் நல்ல வாய்ப்புகளைப் பற்றி பொருளாதார வல்லுநர்கள் விரிவாக ஆய்ந்துள்ளனர். மக்களுக்கு கல்வியறிவு வழங்குவது சிறந்த குறிக்கோளாகும். அது எந்த விதமான பொருள் மதிப்பையும் திருப்பி அளிக்காது.
 
இலக்கிய நயம் பாராட்டல் | 12th Tamil Guide Unit 3.5 Answers 
பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ ?
கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.
– நாமக்கல் கவிஞர்
 திரண்ட கருத்து:
தாய்மொழியாகிய தமிழைப் பின்னுக்குத் தள்ளி பிறமொழிக்கு நாம் செய்யும் சிறப்பை நீக்குவோம். தமிழக்கு நிகர் உலகில் எம்மொழியும் இல்லை. அம்மொழியைக் கற்று இனிமைக் காண்போம் என்று கம்பன், வள்ளுவன் போன்றோர் சுட்டி காட்டிய சிறப்பினை உடையதாக தமிழ்மொழி விளங்குகிறது.
 தொடை நயம்:
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கேற்ப இப்பாடலில் தொடை நயங்கள் மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண் அமைந்துள்ளது.
 மோனை :
குயவனுக்குப் பானை
செய்யுளுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
 சான்று:
பெற்றெடுத்த
கற்றுணர்ந்த
தெற்றென
பிறமொழி
கம்பனோடு
தெய்வக்கவி
 எதுகை :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
 சான்று:
பெற்றெடுத்த
கற்றுணர்
உற்றெடுத்த
தெற்றென்
 இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வரத் தொடுப்பது இயைபு.
சான்று:
உண்டோ
விட்ட
 அணி நயம்:
குளத்துக்குத் தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு இப்பாடலில் கம்பன், பாரதி, வள்ளுவன் புகழும், தமிழின் புகழும் பாடுவதால் உயர்வு நவிற்சி அணி ஆகும்.
 முடிவுரை :
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

கவிதையைப் படித்தபின், அக்கவிதை கிளர்த்தும் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வு உரை ஒன்றை எழுதுக.

எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க
ஓணான்கள் முட்டையிட
கள்ளிகள் பிழைத்திருக்க
பிள்ளைகள் விளையாட
பன்றிகள் மேய்ந்திருக்க
வானத்தில் மேகமுண்டு
சூரியனில் மழையுண்டு
காகமோ குருவியோ
நிழல் ஒதுங்க
ஆறெங்கும் முள்மரமுண்டு
எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
ஆற்றுக்கோர் ஊருண்டு
ஊருக்கோர் சனமுண்டு
வாழ்வைப்போல் ஒன்றுண்டு
– இளங்கோ கிருஷ்ணன்
 
விழிப்புணர்வு உரை:
 
(i) இயற்கையின் கொடையாம் மழைநீரை நாம் சேகரிக்காமல் விடுகிறோம். மழை நீர் சேகரிப்புப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் என எத்தனையோ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து புறப்பட்டு மண்ணில் தங்கலாம் என வந்த மழை வீணாகக் கடலில் கலக்கிறது.
(ii) ஆற்று நீரைச் சேகரிக்க மறந்தோம். ஆனால் ஆற்று மணலைக் கொள்ளையடிக்க துணிந்தோம். மரம் வளர்க்க மறந்தோம். மரம் வெட்டத் துணிந்தோம். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி. ஆனால் இன்று மழையும் மரமும் இல்லாததால் ஏதிலியாய் காக்கை குருவிகள் எங்கோ போயின?

 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. 

1. என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.

Answer:
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள். 

2. எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.

Answer:
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கைக் கொள். 

3. நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.

Answer:
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும். 

4. மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

Answer:
மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். 

5. ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.

Answer:
ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்று கொடுக்கும்.
கீழ்க்காணும் பகுதியைப் படித்து அறிவிப்புப் பலகைக்கான செய்தியை உருவாக்குக
வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா, மே – 5, 2019
திருச்சிராப்பள்ளி.
வேலை காரணமாக வெளிநாடுகளில் பிரிந்து வாழும் உறவினர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
திருச்சி உறையூர் அன்பு நகரில் வசிக்கும் தங்கவேல் – பொன்னம்மாள் இணையரின் மூன்று தலைமுறை வழித் தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு மே – 5 ஆம் தேதி இனிதே நடைபெற உள்ளது.
உறவினர் கூட்டத்தில் தங்கவேல் – பொன்னம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் சந்தித்துப் பெரியோர்களிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள். இந்நிகழ்ச்சியைத் தங்கவேல் அவர்களின் கொள்ளுப் பேத்தி செல்வி கண்மணி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.
 வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா
“இணைந்த உறவும்”
“கசிந்த கண்ணீ ரும்”
நாள் : 05.05.2019
இடம் : திருச்சி – உறையூர் தங்கவேல் பொன்னம்மாள் இல்லம்.
நிகழ்வு : மூன்று தலைமுறை வழித் தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு.
பங்கேற்பு : தங்கவேல் – பொன்னம்மாள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேத்திகள் கொள்ளுப் பேரன்கள்.
நிகழ்வின் அவசியம் : தங்கவேல் – பொன்னம்மாள் இணையரிடம் வாழ்த்துப் பெறுதல்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : கொள்ளுப்பேத்தி கண்மணி
விழைவு : உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வருக. “உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்”
மொழியோடு விளையாடு
பட்டிமன்றம்
தலைப்பு : தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா?
பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? (மறுத்துக்கூறல்)
  • மகாபாரத காலத்திலிருந்தே பங்காளிச் சண்டை இன்றும் நடந்தேறி வருவது தெரிந்ததே.
  • பசியைப் பகைவனிடம் சொல், பங்காளியிடம் சொல்லாதே என்பது பழமொழி
  • தான் வாழ பிறரைக் கெடுப்பவன் தான் உறவினர்
  • பாச வார்த்தை முன்னால் பேசி பழித்துத் தூற்றுவான் பின்னால் அவன் உறவினன்.
  • எனவே, உறவு என்பது உதவுதற்கு அல்ல, நம்மை உதறித் தள்ளுவதற்கே.
  • பெரிதும் உதவுபவர்கள் நண்பர்களா? (உடன்பட்டுக் கூறுதல்)
  • உறவும் இல்லை ஒட்டும் இல்லை, ஒரே பலகையில் உட்கார்ந்து கற்றோம் பாடத்தை, உறவாக்கினோம் உள்ளத்தை.
  • துன்பத்தில் துவளும் போது தோள் கொடுத்துத் துவளாமல் பாதுகாத்து நட்பு.
  • செய்வதறியாமல் தவித்த போது அமைச்சனாய் எனக்கு அறிவுரை தந்தது நட்பு
  • தோல்வி கண்ட போது, துயரம் போக்கி, உற்சாக மூட்டி ஊக்கமளித்தது நட்பு
  • தன் உதிரத்தையும் கொடுத்து உயிர் கொடுத்து தியாகத்தின் உச்சமாய் நிற்பது நட்பு.

மூழ்காத ஷிப் ப்ரெண்ட்ஷிப்

 சுழி குளம்
நவமதி மேவிடவே
வசிகுற ளுடனட
மகுடன ருளடவி
திறனறி வருளுமே!
12th Tamil Guide Unit 3.5 Answers இயல்: 3.5 பொருள் மயக்கம் Students Guide 360

 விளக்கம் :

வேண்டுமென்றால், அறிவுச்சுரங்கமாக விளங்கும் திருக்குறளைக் கற்று அதன் வழி வாழ்க்கையை மேற்கொள்வாய்! மேலும், சிறந்த தலைவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுத் திறன் மிக்க பல்துறை அறிவினையும் பெறலாம்.
நவ மதி – புதுமையான ஒளிமயமான அறிவு
வசி – உயர்ந்த
மகுடன் – தலைவன்
அடவி – பெருதல்
பொதுமதி பலமேவு
துணிதரம் தரமே
மததவிர முதல
திரவிய நிரம்ப
12th Tamil Guide Unit 3.5 Answers

 விளக்கம் :

பல துறைகளிலும் பொது அறிவை வளர்த்துக் கொள். அது நல்லதொரு துணிச்சலைத் தரும். முனைப்பு தவிர்ந்தால் முதன்மைப் படுத்தப்படுவாய். செல்வமும் நிரம்பும்.
மத(ம்) தவிர – முனைப்பு நீங்க
திரவியம் – செல்வம்

எண்ணங்களை எழுத்தாக்குக.

12th Tamil Guide Unit 3.5 Answers இயல்: 3.5 பொருள் மயக்கம் Students Guide 360
இருப்பதோ ஒரே அறை
செய்வதோ நேறு மாறு
தொழிலோ வேறு வேறு
தொந்தரவோ பல நூறு
ஆகுமோ நல்ல ஆறு
தகுமோ தேர்ந்து பாரு.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.
எ.கா. குமரன் வீடு பார்த்தேன் – குமரனை வீட்டில் பார்த்தேன்
1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
மாறனின் பேச்சுத்திறனை யார் வெல்ல முடியும்.
2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
போட்டியில் வெற்றி பெற்றதற்காக கலைச் செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.
3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
4. அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்.
அனைவரையும் அன்புடன் அழைத்தவனுக்குத் துன்பம் தர யாருக்கு மனம் வரும்?
5. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
சான்றோருக்கு மதிப்புக் கொடுத்து வாழ்ந்தால் உயரலாம்.
செய்து கற்போம்
உங்கள் குடும்ப உறவு வழிமுறைகளைக் கொண்டு குடும்ப மரம் (Famil tree) வரைக.
நிற்க அதற்குத் தக 

 12th Tamil Guide Unit 3.5 Answers இயல்: 3.5 பொருள் மயக்கம் Students Guide 36012th Tamil Guide Unit 3.5 Answersபடிப்போம் பயன்படுத்துவோம் (உணவகம்)

  • Lobby – ஓய்வறை
  • Checkout – வெளியேறுதல்
  • Tips – சிற்றீகை
  • Mini meals – சிற்றுணவு

கற்பவை கற்றபின் | 12th Tamil Guide Unit 3.5 Answers

1. தொடர்களைப் பொருள் மயக்கமின்றி எழுத வழிகாட்டும் உரைநடை நெறிகளைப் பின்பற்றி ஐந்து தொடர்களை எழுதுக.

Answer:
  • பணி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினேன்.
  • நேற்று நான் வைகையில் குளித்தேன்.
  • மாநில அளவில் தமிழ்நாடு கல்வியில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
  • ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • என் அம்மாவின் சமையல் என்றுமே சுவையாய் இருக்கும்.

Leave a Reply