You are currently viewing 4th Tamil Guide Term1 Lesson 1 Book Back Answers

4th Tamil Guide Term1 Lesson 1 Book Back Answers

4th Tamil Guide Term1 Lesson 1 Book Back Answers

4th standard Tamil Book 1st Term Unit 1 அன்னைத் தமிழே! Solution

4th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 4th Standard Term 1 Lesson 1 – இயல் 1  அன்னைத் தமிழே! Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

4th Tamil Guide Lesson-1: அன்னைத் தமிழே!

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “அன்னை + தமிழே” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________

  1. அன்னந்தமிழே
  2. அன்னைத்தமிழே
  3. அன்னத்தமிழே
  4. அன்னைதமிழே

விடை : ) அன்னைத்தமிழே

2. “பிறப்பெடுத்தேன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பிறப் + பெடுத்தேன்
  2. பிறப்பு + எடுத்தேன்
  3. பிறப் + எடுத்தேன்
  4. பிறப்ப + எடுத்தேன்

விடை : ) பிறப்பு + எடுத்தேன்

3. “மறந்துன்னை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. மறந்து + துன்னை
  2. மறந் + துன்னை
  3. மறந்து + உன்னை
  4. மறந் + உன்னை

விடை : ) மறந்து + உன்னை

4. “சிறப்படைந்தேன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. சிறப்பு + அடைந்தேன்
  2. சிறப் + அடைந்தேன்
  3. சிற + படைந்தேன்
  4. சிறப்ப + அடைந்தேன்

விடை : ) சிறப்பு + அடைந்தேன்

5. “என்னில்” என்ற சொல்லின் பொருள் ____________________

  1. உனக்குள்
  2. நமக்குள்
  3. உலகுக்குள்
  4. எனக்குள்

விடை : ) எனக்குள்

வினாக்களுக்கு விடையளி

1. சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?

  • சொல்லில் விளையாட சொல்லித்தந்தவள் தமிழன்னை ஆவாள்.

2. எதைச் சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?

  • தமிழ்ச்சொல்லினால் தமிழன்னையின் புகழைச் சொல்ல முடியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

3. இப்பாடலின் ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்?

  • “என் அன்னையாகிய தமிழே! என் உயிரில் கலந்தவளே! என்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். சொல் கொண்டு விளையாடுவதற்குச் சொல்லிக் கொடுத்தவளே! அதே சொல்லினால் உனது புகழை என்னால் கூற முடியவில்லையே!” என்று ஆசிரியர் அன்னையாகிய தமிழைப் புகழ்கிறார்.

4th Tamil Guide Term1 Lesson 1 Book Back Answers

1. மொழியின் சிறப்பினைக் கூறும் இரண்டு பாடல்களை எழுதி வந்து படித்து/ பாடிக் காட்டுக.

1. அன்னை மொழியே!
அழகான செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிந்த நறுங்கனியே!
– பாவலரேறு பெருசித்திரனார்

 

2. எங்கள் தமிழ்
அருள்நெறி அறிவைத் தரலாகும்.
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது.
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம். – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

2. இப்பாடலில் இடம் ­பெற்றுள்ள ஒரே எழுத்தில் ­தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக.

  1. என்னை – என்னில்
  2. உன்னை – உலகில்
  3. சொல்லில் – சொல்லித் – சொல்ல
  4. வளர்ப்பவளே – வளர்பவளே

3. இப்பாடலில் இடம் ­பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

  1. வளர்ப்பவளே – வளர்பவளே
  2. கலந்தவளே – தந்தவளே
  3. அன்னை – என்னை – உன்னை

4. சொல் உருவாக்கலாமா?

4th Tamil Guide Term1 Lesson 1 Book Back Answers

  1. குழந்தை
  2. அன்னை
  3. கவியசர்
  4. தமிழ் மொழி
  5. அரசர்
  6. தந்தை

Leave a Reply