You are currently viewing 5th Tamil Guide Term 1 Lesson 3.2

5th Tamil Guide Term 1 Lesson 3.2

5th Tamil Guide Term 1 Lesson 3.2

5th Tamil Term 1 – Lesson 3 – இயல் 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே? Book Back Answers

5th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 5th Standard Term 1 Lesson 3 – இயல் 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே? Book Back Answers Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum work book answers download pdf. 5th Samacheer kalvi guide book in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.

5th Tamil Term 1 Book Back Answers

 

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. “மரப்பொந்து” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. மரம் + பொந்து
  2. மர + பொந்து
  3. மரப் + பொந்து
  4. மரப்பு + பொந்து

விடை : மரம் + பொந்து

2. “அக்கரை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. அக் + கரை
  2. அந்த + கரை
  3. அ + கரை
  4. அ + அரை

விடை : + கரை

3. “சூறை + காற்று” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. சூறைகாற்று
  2. சூற்காற்று
  3. சூறக்காற்று
  4. சூறைக்காற்று

விடை : சூறைக்காற்று

4. “கண் + இமைக்கும்” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. கண்ணிமைக்கும்
  2. கண்இமைக்கும்
  3. கண்மைக்கும்
  4. கண்ணமைக்கும்

விடை : கண்ணிமைக்கும்

5. “அமர்ந்து + இருந்த” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. அமர்ந்திருந்த
  2. அமர்ந்துஇருந்த
  3. அமர்திருந்த
  4. அமர்ந்துதிருந்த

விடை : அமர்ந்திருந்த

II. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. மணியோசை = மணி + ஓசை
  2. தேனிசை = தேன் + ஓசை

III. பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க:

(புத்தி, அடி, காலை, பயிர், வளையாதது)

  1. யானைக்கும் _______________ சறுக்கும்விடை : அடி
  2. விளையும் _______________ முளையிலே தெரியும்விடை : பயிர்
  3. ஐந்தில் _______________ ஐம்பதில் வளையாதுவிடை : வளையாதது
  4. ஆத்திரக்காரனுக்குப் _______________ மட்டுவிடை : புத்தி
  5. ஆழம் தெரியாமல் _______________ விடாதே

விடை : புத்தி

IV. சொல்லை இடம் மாற்றிப் பழமொழியைக் கண்டுபிடிக்க.

1. உழுவதை அகல விட உழு ஆழ

விடை : அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

2. வளையாதது வளையாது ஐம்பதில் ஐந்தில்

விடை : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

3. மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு அமிழ்தமும்

விடை : அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு

4. குற்றம் சுற்றம் பார்க்கின் இல்லை

விடை : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

5. வருத்தம் சோம்பல் முதுமையில் இளமையில்

விடை : இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. பழமொழி என்பது யாது?

  • நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய வார்த்தைகளே பழமொழிகள் ஆகும்.

 

2. கிளி, யாருக்கு மாம்பழம் தருவதாகக் கூறியது?

  • செல்லம்மாவுக்கு மாம்பழம் தருவதாகக் கிளி கூறியது.

3. கிளியைப் ‘பழமொழிக் கிளி’ என அழைக்கக் காரணம் என்ன?

  • மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப்பொந்திலிருந்து எடுத்துக்காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால் அதைப் ‘பழமொழிக் கிளி’ என்று அழைக்கின்றனர்.

4. இப்பாடத்தில் நீ அறிந்து கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடுக.

  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • இக்கரைக்கு அக்கரை பச்சை.
  • ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
  • அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்.

சிந்தனை வினா

கிளியைப்போல், நீ பழமொழி கூறுவதாய் இருந்தால் என்ன பழமொழிக்கு எப்படிப் படம் வரைந்து விளக்குவாய்? வகுப்பறையில் செயல்படுத்து.

  • பழமொழி: அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.

Leave a Reply