You are currently viewing 5th Tamil Guide Term 1 Unit 2.2

5th Tamil Guide Term 1 Unit 2.2

5th Tamil Guide Term 1 Unit 2.2

5th Tamil Term 1 – Lesson 2 – இயல்  2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் Book Back Answers

5th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 5th Standard Term 1 Lesson 2 – இயல்  2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum work book answers download pdf. 5th Samacheer kalvi guide book in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.

5th Tamil Term 1 Book Back Answers

 

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. “இம்மை” என்ற சொல் குறிக்கும் பொருள் _______________________

  1. இப்பிறப்பு
  2. மறுபிறப்பு
  3. பிறப்பு
  4. முற்பிறப்பு

விடை : இப்பிறப்பு

2. “காரணமாகின்றது” என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது __________________

  1. காரண + மாகின்றது
  2. காரண + ஆகின்றது
  3. காரணம் + மாகின்றது
  4. காரணம் + ஆகின்றது

விடை : காரணம் + ஆகின்றது

3. “வறுமை” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் __________________

  1. செழுமை
  2. இன்மை
  3. செம்மை
  4. ஏழ்மை

விடை : ஏழ்மை

4. “பொருள் + செல்வம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. பொருள்செல்வம்
  2. பொருள்ச்செல்வம்
  3. பொருட்செல்வம்
  4. பொருட்ச்செல்வம்

விடை : பொருட்செல்வம்

5. “பொருள் + இல்லார்க்கு” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. பொருளில்லார்க்கு
  2. பொருள்ளில்லார்க்கு
  3. பொருலில்லார்க்கு
  4. பொருள்இல்லார்க்கு

விடை : பொருளில்லார்க்கு

II. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

  1. பழைமை + மொழி = பழமொழி
  2. நன்மை + வழி = நல்வழி

III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. பணமென்றால் = பணம் + என்றால்
  2. தொலைக்காட்சி = தொலை + காட்சி

IV. தொடரை முழுமை ஆக்குக

(பத்தும், வளம், கல்வி)

  1. பசி வந்திடப் __________ போகும்.விடை : பத்தும்
  2. கேடில் விழுச்செல்வம் __________விடை : கல்வி
  3. பொருளால் நம் வாழ்வு __________ பெறும்.விடை : வளம்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. களர்நிலத்துக்கு ஒப்பானவர் – யார்?

  • கல்வி கற்காதவரே களர்நிலத்துக்கு ஒப்பாவர் ஆவர்.

2. கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது எது?

  • பொருட்செல்வம் கள்வரால்(திருடரால்) கவர்ந்து செல்லக்கூடியது ஆகும்.

3. ‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்’ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்களை உம் சொந்த நடையில் எழுதுக.

  • கற்காதவன் பயன்படாத நிலம் போன்றவன்.
    கல்வி கற்றவருக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கும்.
    பொருட்செல்வம் கொடுத்தால் குறையும், திருடரும் திருடுவர். ஆனால் கல்வி குறையாது. திருடவும் முடியாது.
    இப்பிறப்புக்கும் மறுபிறப்புக்கும் பயன் தருவது கல்வியே. ஆகியவை ‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்’ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்கள் ஆகும்.

4. பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்களைத் தொகுத்து எழுதுக.

  • வள்ளுவரும் பொருள் இல்லாதவருக்கும் உலகம் இல்லை என்கிறார்.
    கல்வி கற்பதற்கும் பணம் தேவை.
    பணம் இல்லாதவன் பிணம் ஆகியவை பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்கள் ஆகும்.

சிந்தனை வினாக்கள்

1. கல்விச் செல்வம் அல்லது பொருட்செல்வம் இரண்டில் ஒன்றுதான் உனக்கு வழங்கப்படும் எனில், நீ எதைத் தெரிவு செய்வாய்? ஏன்?

  • நான் கல்விச் செல்வத்தைத் தான் வாங்குவேன். ஏன் என்றால், கல்வியால் பொருட்செல்வத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.

2. ‘நன்மை மேன்மைப்படுத்துவது கல்வி’ – இதைப் பற்றி உன் சொந்த நடையில் பேசுக.

  • வணக்கம்! ‘நம்மை மேன்மைப்படுத்துவது கல்வி’ என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது.
  • ம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது. கல்வி, அறியாமையைப் போக்குவது என்பதை நான்மணிக் கடிகையும் தெரிவித்துள்ளது. கற்றபடி வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.
  • ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ (391) என்னும் அடியில் இதே கருத்து இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணமுடியும். கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது.
  • கல்வி ஒன்று மட்டுமே ஒருவனை நல்லவனாகவும், அறிவுள்ளவனாகவும் ஆக்கும். எனவே ‘நம்மை மேன்மைப்படுத்துவ கல்வி’ என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.

V. கூடையிலுள்ள சொற்களுக்கு உரிய எதிர்ச் சொற்களைத் தொட்டியிலிருந்து கண்டறிந்து எழுதுக

  1. இம்மை x மறுமை
  2. வருத்தம் x மகிழ்ச்சி
  3. புதுமை x பழைமை
  4. நன்மை x தீமை
  5. நல்வழி x தீயவழி
  6. நேற்று x இன்று
  7. வறுமை x செழுமை

Leave a Reply