You are currently viewing 6th Tamil Guide Term 2 Lesson 1.2

6th Tamil Guide Term 2 Lesson 1.2

6th Tamil Guide Term 2 Lesson 1.2

TN 6th Standard Tamil Book Back Answers Term 2 – Lesson 1.2 துன்பம் வெல்லும் கல்வி Solution Samacheer kalvi

6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 1.2 துன்பம் வெல்லும் கல்வி Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 2 – Lesson 1.2 கண்ணெனத் தகும் – துன்பம் வெல்லும் கல்வி

எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.

மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

I. சொல்லும் பொருளும்

  1. தூற்றும் படி – இகழும் படி
  2. மூத்தோர் – பெரியோர்
  3. மேதைகள் – அறிஞர்கள்
  4. மாற்றார் – மற்றவர்
  5. நெறி – வழி
  6. வற்றாமல் – அழியாமல்

II.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.

  1. போற்றும்படி
  2. தூற்றும்படி
  3. பார்க்கும்படி
  4. வியக்கும்படி

விடை : தூற்றும்படி

2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும்.

  1. இளையோர்
  2. ஊரார்
  3. மூத்தோர்
  4. வழிப்போக்கர்

விடை : மூத்தோர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. கையில் + பொருள்
  2. கைப் + பொருள்
  3. கை + பொருள்
  4. கைப்பு + பொருள்

விடை : கை+பொருள்

4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. மானம்இல்லா
  2. மானமில்லா
  3. மானமல்லா
  4. மானம்மில்லா

விடை : மானமில்லா

III. சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனமாற்றம்

விடை : மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம்  அடைய வேண்டும்.

2. ஏட்டுக்கல்வி

விடை : மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்

3. நல்லவர்கள்

விடை : இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது

4. சோம்பல்

விடை : சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி

IV. குறுவினா

1. நாம் யாருடன் சேரக்கூடாது?

  • நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது

2. எதை நம்பி வாழக்கூடாது?

  • மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது

3. இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?

  • கற்க கசடறக் கற்பவை கற்றபின்
  • நிற்க அதற்குத் தக

4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

  • மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின் படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமைகளையும் பெறலாம்

V. சிறுவினா

நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?

  • நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக்கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
  • பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பில் வாழக் கூடாது.
  • தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலை போக்கிட வேண்டும்.
  • பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். வானைத்தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமையையும் பெற வேண்டும்.
  • பெற்ற தாயின்  புகழும் நம் தாய் நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்

துன்பம் வெல்லும் – கல்வி கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. துன்பத்தை வெல்ல _______________ வேண்டும்விடை : கல்வி
  2. நெறி என்னும் சொல் தரும் பொருள் _______________விடை : வழி
  3. மானமில்லா _______________ சேரக்கூடாதுவிடை : கோழையுடன்
  4. _______________ என்னும் சிறப்பினை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்விடை : மக்கள் கவிஞர்
  5. திரையாசைப் பாடல்களில் _______________ உயர்வைப் போற்றினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்விடை : உழைப்பாளிகளின்
  6. துன்பத்தை நீக்கும் _______________ கற்க வேண்டும்விடை : கல்வியினைக்
  7. வானைத்தொடும் அளவுக்கு ______________ வளர்த்துக் கொள்ள வேண்டும். விடை : அறிவை

II. பிரித்து எழுதுக

  1. குணமிருந்தால் = குணம் + இருந்தால்
  2. கைப்பொருள் = கை + பொருள்

III. பாடலில் எதுகை, மேனைச் சொற்களை கூறுக

மேனைச் சொற்கள்                                           எதுகைச் சொற்கள்

நடந்துவிடாதே – நல்லவர்கள்                   வெற்றிமேல் – வெற்றிவர

மாற்றார் – மானமில்லா                                   பெற்ற – வற்றாமல்

வம்பு – வளர்ச்சி                                                       மண்ணில் – வேண்டும்

வெற்றிமேல் – வெற்றிவர                             கொல்லும் – கல்வி

கல்வி – கற்றிட                                                        மீற – மாற

III. சிறுவினா

1. நாம் யார் தூற்றும்படி வாழக் கூடாது என பட்டுக்கோட்டையார் கூறுகின்றனார்?

  • நாம் நல்வர்கள் தூற்றும்படி வாழக்கூடாது என பட்டுக்கோட்டையார் கூறுகின்றனார்

2. நாம் எதனை மறக்கக் கூடாது?

  • நூல்களை கற்றதன் பயனை மறந்து விடக் கூடாது.

Leave a Reply