You are currently viewing 6th Tamil Guide Term 2 Lesson 2.2

6th Tamil Guide Term 2 Lesson 2.2

6th Tamil Guide Term 2 Lesson 2.2

TN 6th Standard Tamil Book Back Question & Answers Term 2 – Lesson 2.2 கண்மணியே கண்ணுறங்கு Solution

6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 2.2 கண்மணியே கண்ணுறங்கு Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 2 – Lesson 2.2 பாடறிந்து ஒழுகுதல் – கண்மணியே கண்ணுறங்கு Book answers

நூல்வெளி

தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.

நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது.

குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

I. சொல்லும் பொருளும்

  1. நந்தவனம் – பூஞ்சோலை
  2. பார் – உலகம்
  3. பண் – இசை
  4. இழைத்து – செய்து

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “பாட்டிசைத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. பாட்டி + சைத்து
  2. பாட்டி + இசைத்து
  3. பாட்டு + இசைத்து
  4. பாட்டு+சைத்து

விடை : பாட்டு + இசைத்து

2. “கண்ணுறங்கு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. கண் + உறங்கு
  2. கண்ணு + உறங்கு
  3. கண் + றங்கு
  4. கண்ணு + றங்கு

விடை : கண் + உறங்கு

3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. வாழையிலை
  2. வாழைஇலை
  3. வாழலை
  4. வாழிலை

விடை : வாழையிலை

4. “கை + அமர்த்தி” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. கைமர்த்தி
  2. கைஅமர்த்தி
  3. கையமர்த்தி
  4. கையைமர்த்தி

விடை : கையமர்த்தி

5. “உதித்த” என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________

  1. மறைந்த
  2. நிறைந்த
  3. குறைந்த
  4. தோன்றிய

விடை : மறைந்த

III. குறுவினா

1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?

  • சேர நாடு
  • சோழ நாடு
  • பாண்டிய நாடு

2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?

  • நமது வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரிக்க வேண்டும் என நாட்டுப் புறப்பாடல் கூறுகிறது

3. தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறார்?

  • தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயாே!
  • தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தாெட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேர நாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவளை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியாே!
  • குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் பாேக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழாே! கண்வண கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று, தாய் தன் குழந்தையைப் பாராட்டுகிறாள்.

கண்மணியே கண்ணுறங்கு – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. “பார்” என்ற சொல்லின் பொருள் _______________விடை : உலகம்
  2. _______________ என்ற சொல்லின் பொருள் இசைவிடை : “பண்”
  3. “தால்” என்னும் சொல் தரும் பொருள் ____________விடை : நாக்கு
  4. தாலாட்டு _____________________ ஒன்றுவிடை : வாய்மொழி இலக்கியங்களுள்
  5. குழந்தையின் ____________, குழந்தைகளை ____________ பாடும் பாட்டு தாலாட்டு

விடை : அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும்

II. சேர்த்து எழுதுக

  1. மூன்று + தேன் = முத்தேன்
  2. மூன்று + கனி = முக்கனி
  3. மூன்று + தமிழ் = முத்தமிழ்
  4. பூ + சோலை = பூஞ்சோலை
  5. நன்மை + தமிழ் = நற்றமிழ்

III. பாடப்பகுதியிலுள்ள எதுகை. மோனைச் சொற்களை எழுதுக

மோனைச் சொற்கள்                        எதுகைச் சொற்கள்

ந்தவன் – ற்றமிழ்                             கண் – பண்

பாட்டிசைத்து – பார்                               தொட்டில் – கட்டி

ந்தத்திலே – ங்கத்திேல         வைக்கும் – முக்கனி

குளிக்க – குளம்                                         வெட்டி – கட்டி

ண்ணே – ண்ணுறங்கு                 கண்ணே – கண்ணுறங்கு

IV. வினாக்கள்

1. முந்நாடுகளின் சிறப்புகள் எவையென தாய் கூறுகின்றாள்?

  • சேரநாடு – முத்து
  • சோழ நாடு – முக்கனி
  • பாண்டிய நாடு – முத்தமிழ்

2. தாலாட்டு பற்றிய குறிப்பினை எழுதுக

  • தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
  • தால் என்பதற்கு நாவு (நாக்கு) என்று பொருள். நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) எனப் பெயர் பெற்றது.
  • குழந்தையின் அழுகையை நிறுத்தவும், குழந்தைகளை தூங்க வைக்கவும் பாடும் பாட்டு தாலாட்டு

3. தொகைச்சொற்களின் விளக்கத்தை கூறு

முத்தேன்

  • கொம்புத்தேன்
  • பொந்துத்தேன்
  • கொசுத்தேன்

முக்கனி

  • மா
  • பலா
  • வாழை

முத்தமிழ்

  • இயல்
  • இசை
  • நாடகம்

Leave a Reply