You are currently viewing 8th Tamil Guide Unit 4.5

8th Tamil Guide Unit 4.5

8th Tamil Guide Unit 4.5

8th Standard Tamil Tamil Samacheer kalvi guide 4th Lesson Unit 4.5 வேற்றுமை Book Back and Additional Question answers. 8th Tamil TNPSC, TET Notes. 8th Tamil All Lesson Guide. 8th TN Text Books Download PDF. Tamil Nadu State Board Syllabus 8th standard Lesson 4 Full Guide book back and additional question & answer. 8th Tamil Guide Lesson 4 Book Back Question and Answers, 8th Standard Tamil guide Unit 4 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answer key Notes, 8th Tamil book Answers. 8th Tamil Lesson 1 to 9 Full Answer Key.
8th Tamil Guide Unit 4

8th Tamil Samacheer Guide Unit 4.5. வேற்றுமை

8th Tamil Guide Lesson 4 Book Back Question and Answers TN Students Guide

 தெரிந்து தெளிவோம்

  • சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
  • ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார். இதில் ஆல் என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது.
  • ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில் கொண்டு என்பது சொல்லுருபாக வந்துள்ளது.

இரண்டாம் வேற்றுமை

ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்

 

  • ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
  • அழித்தல் – பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
  • அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்
  • நீத்தல் – காமராசர் பதவியைத் துறந்தார்
  • ஒத்தல் – தமிழ் நமக்கு உயிரைப் போன்றது
  • உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்

நான்காம் வேற்றுமை

    நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு கு என்பதாகும். இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.

 

  • கொடை – முல்லைக்குத் தேர் கொடுத்தான்.
  • பகை – புகை மனிதனுக்குப் பகை.
  • நட்பு – கபிலருக்கு நண்பர் பரணர்.
  • தகுதி – கவிதைக்கு அழகு கற்பனை.
  • அதுவாதல் – தயிருக்குப் பால் வாங்கினான்.
  • பொருட்டு – தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
  • முறை – செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ.
  • எல்லை – தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்.

ஐந்தாம் வேற்றுமை

இன், இல் ஆகியவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது போன்ற பொருள்களில் வரும்.
  • நீங்கல் – தலையின் இழிந்த மயிர்.
  • ஒப்பு – பாம்பின் நிறம் ஒரு குட்டி.
  • எல்லை -தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்.
  • ஏது – சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.

  1. எழுவாய்
  2. செயப்படுபொருள்
  3. பயனிலை
  4. வேற்றுமை

விடை : வேற்றுமை

2. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

  1. எழுவாய்
  2. செயப்படுபொருள்
  3. விளி
  4. பயனிலை

விடை : விளி

3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும். 

  1. மூன்றாம்
  2. நான்காம்
  3. ஐந்தாம்
  4. ஆறாம்

விடை : மூன்றாம்

4. ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று வந்துள்ளது.

  1. இரண்டாம்
  2. மூன்றாம்
  3. ஆறாம்
  4. ஏழாம்

விடை : மூன்றாம்

5. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.

  1. ஆக்கல்
  2. அழித்தல்
  3. கொடை
  4. அடைதல்

விடை : ஆக்கல்

பொருத்துக.

  1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
  2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.
  3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
  4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

சிறு வினா

1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.

  • எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை ஆகும்.
  • முதல் வேற்றுமை என்றும் கூறுவர்.

(எ.கா.) பாவை வந்தாள்.

2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?

  • கொடை
  • பகை
  • நட்பு
  • தகுதி
  • அதுவாதல்
  • பொருட்டு
  • முறை
  • எல்லை

3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

  • வினை கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும்.
  • ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்
  • சான்று
  • தாயோடு குழந்தை சென்றது, அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்

வேற்றுமை – கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வேற்றுமை வகை _______________
விடை : எட்டு
2. இரண்டாம் வேற்றுமை உருபு __________
விடை : ஐ
3. __________________ வரும் வேற்றுமை ஆறாம் வேற்றுமை
விடை : உரிமைப் பொருளில்
4. தலையின் இழிந்த மயிர் இதில் இடம் பெறும் __________________ பொருள் நீங்கல்
விடை : ஐந்தாம் வேற்றுமை

சிறு வினா

1. வேற்றுமை என்றால் என்ன?

  • பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைமையை வேற்றுமை என்பர்.

2. வேற்றுமை உருபுகள் என்றால் என்ன?

  • பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகைள வேற்றுமை உருபு என்பர்.

3. மூன்றாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?

  • ஆல், ஆன், ஒடு, ஓடு

4. ஐந்தாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?

  • இல், இன்

5. ஆறாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?

  • அது, ஆது, அ

6. மூன்றாம் வேற்றுமை உருபு எவ்வெவ் பொருள்களில் வரும்?

  • கருப்பொருள், கருத்தா பொருள்

7. சொல்லுருபுகள் என்றால் என்ன?

  • சில இடங்களில் உறுப்புகளுக்கு பதிலாக முழு சொற்களே வருவது உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.

8. ஐந்தாம் வேற்றுமையிலும், ஏழாம் வேற்றுமையிலும் வரும் உருபு எது?

  • இல்

9. முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ஆகியவற்றின் வேறு பெயர்கள் யாவை?

  • முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்பர்
  • எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்பர்

குறு வினா

வேற்றுமை எத்தனை வகைப்படும்?

  • வேற்றுமை  எட்டு வகைப்படும்
  • முதல் வேற்றுமை
  • இரண்டாம் வேற்றுமை
  • மூன்றாம் வேற்றுமை
  • நான்காம் வேற்றுமை
  • ஐந்தாம் வேற்றுமை
  • ஆறாம் வேற்றுமை
  • ஏழாம் வேற்றுமை
  • எட்டாம் வேற்றுமை

மொழியை ஆள்வோம்!

கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

  • மா – மாவிலை, மாமரம், மாங்காய்
  • தேன் – மலர்த்தேன், தேன்சிட்டு, தேன் கூடு
  • மலர் – தேன்மலர்
  • செம்மை – சேயிலை, செங்குருவி, செந்தேன்
  • சிட்டு – சிட்டுக்குருவி, தேன்சிட்டு
  • கனி – மாங்கனி, கனிமரம், தேன்கனி
  • குருவி – சிட்டுக்குருவி, குருவிக்கூடு
  • இலை – மாவிலை
  • காய் – மாங்காய், காய்கனி
  • கூடு – குருவிக்கூடு, தேன்கூடு
  • முட்டை – குருவிமுட்டை
  • மரம் – மாமரம், செம்மரம்

பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்

விடை : பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது

விடை : திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது

விடை : தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.

4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்

விடை : கபிலன், “தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.

5. திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது

விடை : திரு.வி.க. எழுதிய ‘பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.

பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்

விடை :-  
  • ‘நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். ‘எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்’ என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?

உலக புத்தக நாள்

2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம்

3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?

11 நாட்கள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை)

4. புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?

நுழைவு கட்டணம் இல்லை

5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?

10% கழிவு

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.

1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்.

ஆ ல ங் கு டி

2. கேடில் விழுச்செல்வம் ____.

க ல் வி

3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று.

நீ தி நெ றி வி ள க் க ம்

4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்.

அ ணி க ல ன்

5. ஏட்டுக்கல்வியுடன் ________ கல்வியும் பயில வேண்டும்.

இ ய ற் கை

6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.

உ ரி மை வே ட் கை

7. மா + பழம் என்பது _____ விகாரம்.

தோ ன் ற ல்

கட்டத்தில் சிக்கிய எழுத்துகள்

ஆ ல் றி அ ற் வே ற

பழமொழி : அறிவே ஆற்றல்

நிற்க அதற்குத் தக….

  • கலைச்சொல் அறிவோம்
  • நிறுத்தக்குறி – Punctuation
  • மொழிபெயர்ப்பு – Translation
  • அணிகலன் – Ornament
  • விழிப்புணர்வு – Awareness
  • திறமை – Talent
  • சீர்திருத்தம் – Reform

கூடுதல் வினாக்கள்

நீரப்புக.

  • 1. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் ……………….. ஆகும்.
  • 2. வேற்றுமை ……………….. வகைப்படும்.
  • 3. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் …………….. இல்லை.
  • 4. முதல் வேற்றுமையை …………………. என்றும் கூறுவர்.
  • 5. எட்டாம் வேற்றுமையை …………………. என்றும் கூறுவர்.
  • 6. இரண்டாம் வேற்றுமையைச் ……………………. வேற்றுமை என்றும் கூறுவர்.
  • 7. கருவிப் பொருள், கருத்தாப்பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும் வேற்றுமை …………………
  • 8. ஆக’ என்னும் அசை சேர்ந்து வரும் வேற்றுமை …………………… வேற்றுமை.
  • 9. உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் மூன்றாம் வேற்றுமை உருபுகள் ……………….
  • 10. கிழமைப்பொருளில் வரும் வேற்றுமை ………………… வேற்றுமை.

Answer:

1. வேற்றுமை உருபுகள்
2. எட்டு
3. உருபுகள்
4. எழுவாய் வேற்றுமை
5. விளிவேற்றுமை
6. செயப்படுபொருள்
7. மூன்றாம் வேற்றுமை
8. நான்காம்
9. ஒடு, ஓடு
10. ஆறாம்

விடையளி :

1.வேற்றுமை என்பது யாது?

  • பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை வேற்றுமை எனப்படும்.

2.வேற்றுமை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  • வேற்றுமை எட்டு வகைப்படும். அவை முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை.

3.முதல் வேற்றுமை – விளக்குக.

  • எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
  • முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்றும் அழைக்கப்படும்.

எ.கா. பாவை வந்தாள்.

4.இரண்டாம் வேற்றுமை உருபு யாது? இரண்டாம் வேற்றுமையை விளக்குக.

  • இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’.
  • இது ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டும். அதனால் இதனைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.

எ.கா. – கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.

5.இரண்டாம் வேற்றுமை எவ்வெவப் பொருள்களில் வரும்?

இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறுவகையான பொருள்களில் வரும்.

6.இரண்டாம் வேற்றுமை உருபு – சான்றுகள் தருக.

  • ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
  • அழித்தல் – பெரியார் மூட நம்பிக்கைகளை ஒழித்தார்.
  • அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்.
  • நீத்தல் – காமராசர் பதவியைத் துறந்தார்.
  • ஒத்தல் – தமிழ் நமக்கு உயிரைப் போன்றது.
  • உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்.

7.மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?

  • மூன்றாம் வேற்றுமை உருபுகள் : ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை.

8.கருத்தாப் பொருள் விளக்குக.

  • கருத்தாப் பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரு வகைப்படும்.
  • ஏவுதல் கருத்தா – பிறரைச் செய்ய வைப்பது.

எ.கா. கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.

  • இயற்றுதல் கருத்தா – தானே செய்வது.

எ.கா. சேக்கிழாரால் பெரிய புராணம் இயற்றப்பட்டது.

9.மூன்றாம் வேற்றுமை உருபுகளுக்கான எடுத்துக்காட்டுகள் தருக. .

  • ஆல் – மரத்தால் சிலை செய்தான்.
  • ஆன் – புறந்தூய்மை நீரான் அமையும்.
  • ஒடு – தாயொடு குழந்தை சென்றது.
  • ஓடு – அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

10.நான்காம் வேற்றுமை உருபு யாது? அது எவ்வெவப் பொருள்களில் வரும்?

  • நான்காம் வேற்றுமை உருபு – கு.
  • இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவதால், பொருட்டு, முறை, எல்லை ஆகிய பொருள்களில் வரும்.

11.ஐந்தாம் வேற்றுமை உருபுகள் யாவை? அவை எவ்வெவப் பொருள்களில் வரும்?

  • ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இன், இல்.
  • அவை நீங்கல், ஒப்பு, எல்லை , எது ஆகிய பொருள்களில் வரும்.

Leave a Reply