You are currently viewing 8th Tamil Guide Unit 5.2

8th Tamil Guide Unit 5.2

8th Tamil Guide Unit 5.2

 8th Tamil 5th Lesson Unit 5.2 Book Back Answers Additional Question & Answers 

8th Standard Tamil Samacheer Kalvi Guide 5th Lesson Unit 5.2 பாடறித்து ஒழுகுதல் Book Answers. 8th Text Books Download PDF. 8th Standard Tamil Samacheer kalvi Guide Full Term Guide. 8th Tamil Lesson 5 Full Answer key Book Back and additional question and answer.8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answer key Notes, 8th Tamil book Answers. 8th Tamil Lesson 1 to 9 Full Answer Key.

8th Tamil Guide Unit 5

 

8th Tamil Guide Unit 5.2. பாடறிந்து ஒழுகுதல்

*ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் *

சொல்லும் பொருளும்

  • அலந்தவர் – வறியவர்
  • கிளை – உறவினர்
  • செறாஅமை – வெறுக்காமை
  • பேதையார் – அறிவற்றவர்
  • நோன்றல் – பொறுத்தல்
  • மறாஅமை – மறவாமை
  • போற்றார் – பகைவர்
  • பொறை – பொறுமை

 

பாடலின் பொருள்

இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல். நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.

நூல் வெளி

கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்; நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை.

  1. பிரிந்தவர்க்கு
  2. அலந்தவர்க்கு
  3. சிறந்தவர்க்கு
  4. உயர்ந்தவர்க்கு

விடை : அலந்தவர்க்கு

2. நம்மை _____ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும்.

  1. இகழ்வாரை
  2. அகழ்வாரை
  3. புகழ்வாரை
  4. மகிழ்வாரை

விடை : இகழ்வாரை

3. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.

  1. சிறை
  2. அறை
  3. கறை
  4. நிறை

விடை : நிறை

4. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பாட் + அறிந்து
  2. பா + அறிந்து
  3. பாடு + அறிந்து
  4. பாட்டு + அறிந்து

விடை : பாடு + அறிந்து

5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. முறையப்படுவது
  2. முறையெனப்படுவது
  3. முறைஎனப்படுவது
  4. முறைப்படுவது

விடை : முறையெனப்படுவது

குறு வினா

1. பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

  • பண்பு என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
  • அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.

2. முறை, பொறை என்பவற்றுக்குக கலித்தொகை கூறும் விளக்கம் யாது?

  • முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்
  • பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

சிறு வினா

நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

  • இல்வாழ்க்கை என்பது ஏழைகளுக்கு உதவி செய்தல்.
  • பாதுகாத்தல் என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
  • அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.
  • அறிவு என்பது அறிவற்றவர்கள் கூறும் சொற்களை பொறுத்தல்.
  • செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
  • நிறை என்பது மறைபொருளை அழியாமல் காத்தல்.
  • முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
  • பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.
  • இத்தகைய பண்புகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது

பாடறிந்து ஒழுகுதல் – கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கலித்தொகை ______________ நூல்களுள் ஒன்று.
விடை : எட்டுத்தொகை
2. கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ______________
விடை : 150
3. கலித்தொகையை தொகுத்தவர் ______________
விடை : நல்லந்துவனார்
4. நல்லந்துவனார் கலித்தொகையில் ______________ கலி பாடியுள்ளார்
விடை : நெய்தல்
4. கிளை என்பதற்கு ______________ என்று பொருள்
விடை : உறவினர்

சிறு வினா

1. இல்வாழ்வு என்பது என்ன?

  • இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் ஆகும்.

2. பொறுமை எனப்படுவது யாது?

  • பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரை பொறுத்தல் ஆகும்.

3. நீதிமறை எனப்படுவது யாது?

  • நீதிமறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் ஆகும்

4. அறிவு என கலித்தொகை கூறுவது என்ன?

  • அறிவற்றவர்கள் கூறும் சொற்களை பொறுத்து கொள்ளுதலே அறிவு என கலித்தொகை கூறிகிறது

குறு வினா

1. நல்லந்துவனார் – குறிப்பு வரைக

  • கலித்தொகையைச் தொகுத்த நல்லந்துவனார் சங்க காலப் புலவர்களுள் ஒருவர்
  • கலித்தொகையின் நெய்தல்கலிப் பாடல்களை இயற்றியவர்

2. கலித்தொகையின் பிரிவுகளை எழுதுக

  • குறிஞ்சிக்கலி
  • முல்லைக்கலி
  • மருதக்கலி
  • நெய்தற்கலி
  • பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.

3. கலித்தொகை குறிப்பு வரைக

  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
  • கலிப்பா என்னும் பாவகையால் ஆனது
  • 150 பாடல்களை கொண்டது
  • குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
  • கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார்

8th Tamil Samacheer Kalvi Guide Unit 5.2 கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

  • 1. கலித்தொகை …………….. நூல்களுள் ஒன்று.
  • 2. கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல் ………………
  • 3. கலித்தொகை ………………. என்னும் பாவகையால் பாடப்பட்டது.
  • 4. கலித்தொகையைத் தொகுத்தவர் ……………….
  • 5. கலித்தொகையில் நல்லந்துவனார் இயற்றிய பிரிவு ……………….
  • 6. சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் …………………
  • 7. பாதுகாத்தல் என்பது ……………… பிரியாது வாழ்தல்.
  • 8. வறியவர்களுக்கு உதவி செய்தல் என்பது ……………..
  • 9. தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் …………….
  • 10. அறிவு எனப்படுவது ………………. கூறும் சொற்களைப் பொறுத்துக் கொள்வது.

Answer:

  • 1. எட்டுத்தொகை
  • 2. கலித்தொகை
  • 3. கலிப்பா
  • 4. நல்லந்துவனார்
  • 5. நெய்தற்கலி
  • 6. பண்பு
  • 7. அன்புடையோரைப்
  • 8. இல்வாழ்வு
  • 9. பொறுமை
  • 10. அறிவற்றவர்

விடையளி :

1.கலித்தொகை – குறிப்பு எழுதுக.

தொகுத்தவர் நல்லந்துவனார்

  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்.
  • நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது.
  • குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.

2.நல்லந்துவனார் – குறிப்பு எழுதுக.

  • கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
  • இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியுள்ளார்.

3.ஆற்றுதல், போற்றுதல் ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

  • இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
  • பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

4.அறிவு, செறிவு என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?

  • அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
  • செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

நூல் வெளி

  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல். நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நெய்தற்கலிப் பாடல்களை இயற்றிவரும் இவரே.

பாடலின் பொருள்

  • இல்வாழ்வு என்பது வறியவர்க்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
  • நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.

Leave a Reply