8th tamil samacheer kalvi guide book answers

8th Tamil Guide Unit 6.2

8th Tamil Guide Unit 6.2

8th Standard Tamil Book Back Answers & Additional Question and Answers

8th Tamil Samacheer Kalvi Full Term Book Answers download PDF. 8th Tamil 6th Lesson இயல் 6.2 மழைச்சோறு 8th TN Text Books Download PDF. Class 8 Tamil Nadu Samacheer Kalvi Start Board Syllabus Book Back Answers. TNPSC, TNTET, TRB 8th Tamil Important Notes. 8th Tamil Free Online Test. 8th Tamil Full Term All Unit Answers Lesson 1 to 9.

8th tamil samacheer kalvi guide book answers

6.2. மழைச்சோறு

I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.

1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____. 

  1. பெருமழை
  2. சிறு மழை
  3. எடைமிகுந்த மழை
  4. எடை குறைந்த மழை

விடை : பெருமழை

2. ‘வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. வாசல் + எல்லாம்
  2. வாசல் + எலாம்
  3. வாசம் + எல்லாம்
  4. வாசு + எல்லாம்

விடை : வாசல் + எல்லாம்

3. ‘பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பெறு+ எடுத்தோம்
  2. பேறு + எடுத்தோம்
  3. பெற்ற + எடுத்தோம்
  4. பெற்று + எடுத்தோம்

விடை : பெற்று + எடுத்தோம்

4. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. கால்லிறங்கி
  2. காலிறங்கி
  3. கால் இறங்கி
  4. கால்றங்க

விடை : காலிறங்கி

II. குறுவினா

1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது?

  • கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது.
  • பெற்றெடுத்த குழந்தைகளின் பசியை தீர்க்க முடியவில்லை
  • கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரி மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்

2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

  • மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை எனவே மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்

III. சிறுவினா

1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

  • வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்
  • இந்தக் கோலத்தை கரைக்க மழை வரவில்லை.
  • பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.
  • அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை.

2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

  • கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.
  • முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை.
  • கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை
  • மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை

3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?

  • மழைச்சோறு எடுத்த பின், பேய் மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.
  • சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.
  • ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.

மழைச்சோறு – கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.

1. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது _____.

  1. உணவு
  2. உடை
  3. பணம்
  4. மழை

விடை : மழை

2. கல் இல்லாக் காட்டில் _______________ போட்டனர்

  1. முருங்கைச் செடி
  2. கருவேலமரம்
  3. கடலைச் செடி
  4. காட்டு மல்லி

விடை : கடலைச் செடி

3. முள் இல்லாக் காட்டில் _______________ போட்டனர்

  1. கடலைச் செடி
  2. கருவேலமரம்
  3. முருங்கைச் செடி
  4. காட்டு மல்லி

விடை : முருங்கைச் செடி

II. பிரித்து எழுதுக

  1. பாதையெலாம் = பாதை + எலாம்
  2. முருங்கைச்செடி = முருங்கை + செடி
  3. வேலியிலே = வேலி + இலே
  4. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்
  5. காலிறங்கி =  கால் + இறங்கி
  6. உலகமெங்கும் = உலகம் + எங்கும்

III. குறுவினா

1. எங்கெல்லாம் கோலம் இடப்பட்டது?

  • வாசல் மற்றும் பாதைகளில் கோலம் இடப்பட்டது

2. வாடிப்போன செடிகள் எவை? காரணம் யாது?

  • கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது.

III. சிறுவினா

1. மழைச்சோற்று நோன்பு பற்றிக் கூறு

  • மழை இல்லாமல் பஞ்சம் ஏற்படும் நேரங்களில் சிற்றூர் மக்கள் வீடு வீடாகச் சென்று உப்பில்லாத சோற்றை ஒரு பானையில் வாங்குவார்கள்.
  • ஊர் பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர்.
  • கொடிய பஞ்சத்தை காட்டும் அடையாளமாக இது நிகழும்.
  • இதனைக் கண்டு மனம் இறங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
  • இதனை மழைச்சோறு நோன்பு என்று கூறுவார்கள்.

 

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு ………………….. உண்டு.
2. ‘கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு’ என்னும் கட்டுரை …………………. என்னும் நூலில் உள்ளது.
3. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்’ என்னும் நூலின் பதிப்பாசிரியர் ………………….

Answer:

1. மாமழைக்கு
2. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
3. அ. கௌரன்

விடையளி :

1.‘மழைச்சோறு’ பாடலில் மழை பெய்யாததால் மக்கள் என்ன செய்தனர்?

  • மழை பொய்த்ததால் மக்கள் மூன்று அல்லது ஐந்து நாள்கள் பாடி வழிபாடு செய்தனர். அதன் பிறகும் மழை பெய்யாததால் காட்டிற்குச் செல்ல முடிவெடுக்கின்றனர்.
  • பாடலைப் பாடிக்கொண்டே சோறு வாங்கிய பானை, அகப்பை, பழைய முறம் போன்றவற்றைத் தலையில் வைத்தவாறு ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.

2.‘மழைச்சோற்று நோன்பு’ என்பது யாது?

  • மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில் சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர்.
  • ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.
  • கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வு மழைச்சோற்று நோன்பு எனப்படுகிறது.

நூல் வெளி

  • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு ‘மழைச்சோற்று வழிபாடு’ என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.

தெரிந்து தெளிவோம்

  • மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.
  • கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.

Leave a Reply