8th tamil samacheer kalvi guide book answers

8th Tamil Guide Unit 6.3

8th Tamil Guide Unit 6.3

8th Standard Tamil Book Back Answers & Additional Question and Answers

8th Tamil Samacheer Kalvi Full Term Book Answers download PDF. 8th Tamil 6th Lesson இயல் 6.3 கொங்குநாட்டு வணிகம் 8th TN Text Books Download PDF. Class 8 Tamil Nadu Samacheer Kalvi Start Board Syllabus Book Back Answers. TNPSC, TNTET, TRB 8th Tamil Important Notes. 8th Tamil Free Online Test. 8th Tamil Full Term All Unit Answers Lesson 1 to 9.

8th tamil samacheer kalvi guide book answers

6.3. கொங்குநாட்டு வணிகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.

  1. தொல்காப்பியம்
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

2. சேரர்களின் தலைநகரம் _____.

  1. காஞ்சி
  2. வஞ்சி
  3. தொண்டி
  4. முசிறி

விடை : வஞ்சி

3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.

  1. புல்
  2. நெல்
  3. உப்பு
  4. மிளகு

விடை : நெல்

4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____.

  1. காவிரி
  2. பவானி
  3. நொய்யல்
  4. அமராவதி

விடை : அமராவதி

5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் _____.

  1. நீலகிரி
  2. கரூர்
  3. கோயம்புத்தூர்
  4. திண்டுக்கல்

விடை : கோயம்புத்தூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ____________
    விடை : சேலம்
  • 2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் ____________
    விடை : சின்னாளப்பட்டி (திண்டுக்கல்).
  • 3. சேரர்களின் நாடு ____________ எனப்பட்டது.
    விடை : குடநாடு
  • 4. பின்னலாடை நகரமாக ____________ விளங்குகிறது.
    விடை : திருப்பூர்

III. குறுவினா

1. மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

  • மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை.
  • வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.
  • இதனால் இவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.

2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

  • கொங்குநாட்டுப் பகுதியில் காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை (அமராவதி) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

3. ‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

  • தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல்.
  • மலர் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால், தமிழ்நாட்டின் ஹாலந்து என்று திண்டுக்கல் போற்றப்படுகிறது.

IV. சிறு வினா

1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?

  • வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி மலை, மேற்கே வெள்ளி மலை, கிழக்கே மதிற்கூரை என இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியாக கொங்கு மண்டலம் விளங்கியதாகச் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது

2. கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.

  • கரூர் நகரத்திற்கு “வஞ்சிமா நகரம்” என்ற பெயரும் உண்டு.
  • கிரேக்க அறிஞர் தாலமி கரூரைத் தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரடப்படுகின்றன.
  • கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
  • கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.
  • தோல் பதனிடுதல், சாயம் ஏற்றுதல், சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.
  • பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.

V. நெடு வினா

கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுவணிகம் குறித்து எழுதுக.

  • உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல் வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது.

உள்நாட்டு வணிகம்

  • சேர நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது
  • மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்து என்பர்.
  • உப்பும், நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை அகநானூற்றின் 390வது பாடல் மூலம் அறியலாம்

வெளிநாட்டு வணிகம்

  • முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.
  • இங்கிருந்து தான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை, தந்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • பொன்மணிமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.

கொங்குநாட்டு வணிகம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திரைகடல் ஓடியும் ______________ தேடு
விடை : திரவியம்
2. சேரர்களின் நாடு ______________  எனப்பட்டது
விடை : குடநாடு
3. மூவேந்தர்களில் பழமையானவர்கள் ______________
விடை : சேரர்
4. சேரர்களின் கொடி ______________
விடை : வில்கொடி
5. ______________ மருவி  கோயம்புத்தூர் என மாற்றம் பெற்றது.
விடை : கோவன்புத்தூர்

II. பொருத்துக

  1. தூத்துக்குடி – தூங்கா நகரம்
  2. சிவகாசி – தீப நகரம்
  3. மதுரை – முத்து நகரம்
  4. திருவண்ணாமலை – குட்டி ஜப்பான்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

III. பொருத்துக

  1. திண்டுக்கல் – மாங்கனி நகரம்
  2. திருப்பூர் – மஞ்சள் சந்தை
  3. ஈரோடு – பின்னலாடை நகரம்
  4. சேலம் – ஏழைகளின் ஊட்டி
  5. ஏற்காடு – தமிழ்நாட்டின் ஹாலந்து

விடை : 1 – உ, 2 – இ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ

IV. குறு வினா

1. மூவேந்தர்கள் யாவர்?

  • சேரர், சோழர், பாண்டியர்

2. கொங்கு நாட்டுப் பகுதிகள் யாவை?

  • சேலம், கோவை பகுதிகள் கொங்கு நாட்டுப் பகுதிகள் ஆகும்

3. ஒரு நாட்டின் மக்களின் நாகரிக நல வாழ்விற்கு அடிப்படை எவை?

  • உழவுத் தொழில், கைத்தொழில்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

  • 1. மூவேந்தர்களின் பழமையானவர்கள் ………………..
  • 2. சேரர்களின் நாடு ………………… எனப்பட்டது.
  • 3. சேரர்களின் தலைநகரம் …………….
  • 4. வஞ்சி நகர் …………………. தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் ………………….. இருந்தது.
  • 5. பேரியாறு …………….. கடலில் கலக்கிறது.
  • 6. வஞ்சி நகரைக் ………………. என்றும் அழைப்பர்.
  • 7. சேரர்களின் கொடி …………………..
  • 8. சேரர்களின் பூ ……………… .
  • 9. சேலம் கோவைப் பகுதிகள் ……………… எனப் பெயர் பெற்றன.
  • 10. சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்த பகுதி ……………….
  • 11. கொங்கு மண்டலச் சதகம் இயற்றியவர் …………………
  • 12. சேரமன்னர்களால் அடக்கப்பட்ட கடற்கொள்ளையர்கள் ………………
  • 13. செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் …………………. என்று அழைக்கப்பட்டான்.
  • 14. சேரர்களின் துறைமுகம் ……………
  • 15. விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது ……………
  • 16. நீலகிரி மாவட்டம் ………………… தொழிற்சாலைகள் நிறைந்தது.
  • 17. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் ஊர் …………………….,
  • 18. அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ……………….
  • 19. திண்டுக்கல்லில் புகழ்பெற்ற சேலையின் பெயர் ………………………
  • 20. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் …………….

Answer:

  • 1. சேரர்கள்
  • 2. குடநாடு
  • 3. வஞ்சி
  • 4. மேற்குமலைத், பேரியாற்றங்கரையில்
  • 5. அரபிக்
  • 6. கருவூர்
  • 7. விற்கொடி
  • 8. பனம்பூ
  • 9. கொங்குநாடு
  • 10. கொங்குநாடு
  • 11. கார்மேகக் கவிஞர்
  • 12. கடம்பர்
  • 13. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
  • 14. முசிறி
  • 15. நெல்
  • 16. தேயிலைத்
  • 17. திண்டுக்கல்
  • 18. திண்டுக்கல்
  • 19. சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள்
  • 20. ஈரோடு

குறுவினா :

1.மூவேந்தர்கள் பற்றிய தொன்மையான சான்றுகள் யாவை?

  • தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு -‘, உரியதாகக் கூறுகின்றன.
  • வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
  • வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

2.சேரர்கள் பற்றியும், சேரநாடு பற்றியும் எழுதுக.

  • மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள்.
  • சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடர் இதுக்குச் சான்றாகும்.
  • தொல்காப்பியமும் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” எனச் சேரரை முன் வைக்கின்றது.
  • சேரர்களின் நாடு குட நாடு. தலைநகர் வஞ்சி.
  • இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் இருந்தது. இதனைக் கருவூர் என்றழைப்பர்.
  • துறைமுகப் பட்டினங்கள் – தொண்டி, முசிறி, காந்தளூர்.
  • கொடி – விற்கொடி, பூ – பனம்பூ.

3.சேர நாட்டின் எல்லைகள் யாவை?

  • பண்டைய சேரநாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது என்பர்.
  • சேலம், கோவைப் பகுதிகள் கொங்கு நாடு என்று பெயர்பெற்றன. இப்பகுதிகளைச் சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

4.நீலகிரி மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.

  • கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி மாவட்டம்.
  • இம்மாவட்டம் முழுவதும் மலைப் பகுதியாலானது.
  • தோட்டப்பயிர்கள் – காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோசு.
  • தைலமரம் வளர்க்க ப்படுகிறது.
  • தொழிற்சாலை – புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் எண்ணெய்த் தொழிற்சாலை.

5.கோயம்புத்தூர் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.

  • கோவன்புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.
  • பயிர்கள் – நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்.
  • தொழிற்சாலைகள் – பஞ்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.

6.ஈரோடு மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.

  • பரப்பளவில் ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
  • பயிர்கள் – நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள்.
  • தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில்தான் நடைபெறுகின்றது.
  • ஆலைகள் – துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள்
  • தொழில்கள் – நூல்நூற்பு, துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல், அச்சிடுதல், தோல் பதனிடுதல்.

7.திருப்பூர் மாவட்டம் பற்றிய செய்திகள் யாவை?

  • மிகச்சிறந்த பின்னலாடை நகரம்.
  • பயிர்கள் – நெல், கரும்பு, பருத்தி, வாழை.
  • இம்மாவட்டம் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித் தருகிறது.
  • இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.

8.நாமக்கல் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.

  • இங்குள்ள மலைகள் – பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை.
  • பயிர்க ள் – நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி.
  • மலைப்பயிர்கள் – திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம்.
  • முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றது.
  • தொழில்கள்- சிமெண்ட், காகிதத் தொழிற்சாலை.
  • தொழில் – கைத்தறி நெசவு, வெண்கலப்பொருள்கள் செய்தல்.
  • சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டமாக விளங்குகிறது.

9.சேலம் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.

  • மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்டது.
  • பயிர்கள் – நெல், பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு.
  • இந்தியாவிலேயே இங்குதான் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
  • தொழில் – பால் பண்ணைத் தொழில், முலாம் பூசும் தொழில்.
  • ஆலைகள் – இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் உள்ளன
  • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் இம்மாவட்டத்தில்தான் கைத்தறி நெசவு அதிகமாக நடைபெறுகிறது.

Leave a Reply