ஒரே நாளில் காலாண்டுத் தேர்வும் முதல்வர் கோப்பை போட்டியும்! தீவிர குழப்பத்தில் மாணவர்கள் & ஆசிரியர்கள்!

காலாண்டு தேர்வு அறிவித்த நாட்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடப்பதால், மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி செப்., 9 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிக்கு என தனித்தனியாக போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கான அனைத்து போட்டிகளும் செப்., 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடை பெற உள்ளது. இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு செப்., 16 முதல் 25 வரை நடத்தப்படும் என அட்டவணை வெளியிட்டுள்ளனர்.
ஒரே நாட்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு மற்றும் காலாண்டு தேர்வு நடப்பதால், தேர்வு, விளையாட்டு இவை இரண்டில் எதில் பங்கேற்பது என தெரியாமல் மாணவர்கள் புலம்பி தவிக்கின்றனர்

