10th Social Science History Unit 5 Additional Questions

10th Social Science History Unit 5 Additional Question Answers

10th Social Science Samacheer kalvi guide – Unit 5 Additional Questions

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide History Unit 5 Additional Question and answers Tamil Medium. SSLC Social Science 5th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide 5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் – Additional Question – Answers

10th Social Science – History Unit 5 Question answers

10th Social Science – History

Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )

 

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.நவீன இந்தியாவின் முன்னோடி …………

அ) ஜோதிபாய் பூலே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) விவேகானந்தர்
ஈ) இராஜாராம் மோகன்ராய்

விடை:
ஈ) இராஜாராம் மோகன் ராய்

2.மகரிஷி …………….. கொள்கைக் கூறுகளை முன்வைத்தார்.

அ) 4
ஆ) 5
இ) 8
ஈ) 6

விடை:
அ) 4

3.தேவேந்திரநாத் ……………… சீர்திருத்தவாதியாவார்.

அ) மிதவாத
ஆ) தீவிரவாத
இ) கம்யூனிச
ஈ) எதுவுமில்லை

விடை:
அ) மிதவாத

4.அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் ………….

அ) யாசர் அரபாத்
ஆ) கமால் பாட்சா
இ) ஆசாத்
ஈ) சர் சையது அகமது கான்

விடை:
ஈ) சர் சையது அகமது கான்

5.ஜோதிபா பூலேவின் ……………. சாவித்திரி பாய் ஆவார்.

அ) மகள்
ஆ) தாய்
இ) சகோதரி
ஈ) மனைவி

விடை:
ஈ) மனைவி

6.வங்காளத்தை சேர்ந்த முதன்மையான சீர்திருத்தவாதி ……………

அ) அஹமது கான்
ஆ) M.G. ரானடே
இ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஈ) அய்யன்காளி

விடை:
இ ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

7.……………… நூல்கள் முற்போக்கானவை.

அ) சீக்கியம்
ஆ) இந்து
இ) கிறித்துவ
ஈ) இஸ்லாமிய

விடை:
ஆ) இந்து

8.தியோபந்த் இயக்கம் ஒரு ……………… இயக்கம் ஆகும்.

அ) அரசியல்
ஆ) சமூக
இ) கலாச்சார
ஈ) மீட்பு

விடை:
ஈ) மீட்பு

9.ராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் ……………. ஆவார்.

அ) ஜோதிபா பூலே
ஆ) அய்யன்காளி
இ) விவேகானந்தர்
ஈ) எதுவுமில்லை

விடை:
இ விவேகானந்தர்

10.ஜோதிபா பூலே எழுதிய நூல் …………… ஆகும்.

அ) சுதேசி
ஆ) குலாம்கிரி
இ) இண்டிகா
ஈ) வெனிஸ் நகர வணிகர்

விடை:
ஆ) குலாம்கிரி

11.……………….. நாராயணகுருவால் கவரப்பட்டார்.

அ) பூலே
ஆ) அய்யன்காளி
இ) ராமலிங்க அடிகள்
ஈ) அயோத்தி தாசர்

விடை:
ஆ) அய்யன்காளி

12.இராமகிருஷ்ணரின் போதனைகளை பரப்பும் பெரும்பணியின் பின்புலமாய் …………………… இருந்தார்.

அ) பரமஹம்சர்
ஆ) விவேகானந்தர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) அய்யன்காளி

விடை:
ஆ) விவேகானந்தர்

13.மௌலானா முகமத் உல்-ஹசன் ……………… புதிய தலைவரானார்.

அ) தியோபந்தின்
ஆ) புதிய தியோபந்த்
இ) அலிகார்
ஈ) அஹமது கான்

விடை:
அ) தியோபந்தின்

14.விவேகானந்தரின் இயற்பெயர் …………………………

அ) நரேந்திரநாத் தத்தா
ஆ) இராமலிங்க அடிகள்
இ) அயோத்தி தாசர்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

விடை:
நரேந்திரநாத் தத்தா

15.மேற்கத்திய கருத்துக்களின் சிந்தனைகளின் தாக்கங்களுக்குள்ளானது ……………………… வர்க்க ம் ஆகும்.

அ) இஸ்லாம்
ஆ) இந்து
இ) நடுத்தர
ஈ) எதுவுமில்லை

விடை:
இ நடுத்தர

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.இராஜா ராம் மோகன் ராய் …………….., ……………… பெற்றிருந்தார்.

விடை:ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு எதிர்ப்பு

2.இராஜராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை …………….. நிறுவினார்.

விடை:20 ஆகஸ்ட் 1808

 3.தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ……………… எனப்பட்டது.

விடை:ஆதி பிரம்ம சமாஜம்

4.இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் ……………… முக்கியப் பங்காற்றியது.

விடை:பிரம்ம ஞான சபை

5.அன்னிபெசன்டின் நாளிதழ்கள் … ………………….. ஆகியன ஆகும்.

விடை:நியூ இண்டியா, காமன் வீல்

6.ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி ……………… பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.

விடை:1920

7.……………… அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும்.

விடை:சிங்சபா

8.அயோத்தி தாசர் ………………. எனும் அமைப்பை உருவாக்கினார்.

விடை:திராவிடர் கழகம்

9.………………. எனும் ஊரில் பெரிய கோவிலைக் கட்டியவர் நாராயணகுரு.

விடை:அருவிபுரம்

10 .……………… மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டது.

விடை:1856

11.தக்காணக் கல்விக் கழகத்தை நிறுவியவர் …………………..

விடை:M.G. ரானடே

12.வேதங்களுக்கு திரும்புவோம் என்பது ………………. சமாஜத்தின் முழக்கமாகும்.

விடை:ஆசிய

13.ஆணும், பெண்ணும் சமம் என்று ………………. கூறியது.

விடை:சீக்கிய சீர்திருத்த இயக்கம்

14.சுத்தி இயக்கத்தை நிறுவியவர் ………………. ஆவார்.

விடை:தயானந்த சரஸ்வதி

15.உலக சமய மாநாடு ……………….. நடந்தது.

விடை:1893

10th Social Science History Unit 5 Additional Questions

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1.i) அய்யன்காளி 1863ல் பிறந்தார்.
ii) “ஜீவன்” என்பதே “சிவன்” என பரமஹம்சர் கூறினார்.
iii) பரமஹம்சரின் சீடர் ஜோதிபா பூலே.
iv) 1999ல் பிரம்மஞான சபை தொடங்கப்பட்டது.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iv சரி
ஈ) iii சரி

விடை:
அ) i, ii சரி

2.கூற்று : சர்சையது அஹமது கான், ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
காரணம் : இஸ்லாமியர்கள் மேலை நாட்டு அறிவியலை கற்க வேண்டும் என்பதற்காக.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

விடை:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

1.இந்து புத்தெழுச்சி இயக்கத்திற்கு வித்திட்டவர்களின் பெயர்களை குறிப்பிடுக.

விடை:

  • சுவாமி தயானந்த சரஸ்வதி
  • இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • சுவாமி விவேகானந்தர்
  • அன்னிபெசன்ட்

2.இராமகிருஷ்ண மிஷனின் செயல்பாடுகள் யாவை?

விடை:

  • மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது.
  • மருத்துவ உதவி
  • இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வது.

3.பிரம்மஞான சபையின் முக்கியப் பங்கு யாது?

விடை:

  • பிரம்மஞான சபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
  • இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றுகிறது.

4.அலிகார் இயக்கம் பற்றி குறிப்பிடுக.

விடை:

  • சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
  • ‘அலிகார் இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது.
  • இந்திய முஸ்லீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.
  • 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.

5.தியோபந்த் இயக்கம் பற்றி எழுதுக. தியோபந்த் இயக்கம்:

விடை:

  • தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும்.
  • இவ்வியக்கம் பழமைவாய்ந்த முஸ்லீம் உலகமக்களால், தொடங்கப்பெற்றது.
  • இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832 – 1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826 – 1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினர்.
  • இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.

விரிவான விடையளிக்கவும்.

1.சீக்கியர் சீர்திருத்த இயக்கம் பற்றி விவரிக்க.

விடை:

  • சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்):
  • பஞ்சாப் சீக்கியச் சமூகத்திலும் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
  • சிலைவழிபாடு, சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின.
  • மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
  • ஆரியசமாஜம் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரசில் நிறுவப்பட்டது. சீக்கியமதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
  • ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. > சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.

2.இராமலிங்க சுவாமிகள் பற்றி குறிப்பெழுதுக.

விடை:

  • வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட, இராமலிங்க சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் (1823 – 1874) சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.
  • முறையான கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரியப் புலமையைப் பெற்றிருந்தார்.
  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்” எனும் கருத்தினை முன்வைத்தார்.
  • அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

Leave a Reply