10th Social Science Unit 4 Additional question answers

10th Social Science Unit 4 Additional question answers

10th Social Science Samacheer kalvi guide – Unit 4 Additional Questions

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide Unit 4 Additional Question and answers Tamil Medium. SSLC Social Science 4th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide 4. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 4. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் – Additional Question – Answers

10th Social Science Unit 4 Question answers

10th Social Science – History

Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )

 

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.………………. சீனாவில் ஒரு கம்யூனிச அரசை நிறுவியது.

அ) முதல் உலகப் போர்
ஆ) இரண்டாம் உலகப் போர்
இ) அ (மற்றும்) ஆ
ஈ) பனிப்போர்.

விடை: ஆ) இரண்டாம் உலகப் போர்

2.மார்ஷல் திட்டத்தின் மூலம் அமெரிக்கா ………………………ன் நம்பிக்கையை வென்றது.

அ) ஜெர்மனி
ஆ) ஐரோப்பா
இ) ஜப்பான்
ஈ) இத்தாலி

விடை: ஆ) ஐரோப்பா

3.……………… சுவர் உடைக்கப்பட்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது.

அ) சீனா
ஆ) பெர்லின்
இ) ஐரோப்பா
ஈ) எதுமில்லை

விடை: ஆ) பெர்லின்

4.நீண்ட வரலாற்றைக் கொண்ட ……………… நாகரிகம் ஐரோப்பாவை விட மேம்பட்டதாகும்.

அ) ரஷ்யா
ஆ) சீன
இ) பிரெஞ்சு
ஈ) அ (மற்றும்) ஆ

விடை: ஆ) சீன

5.மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசியார் தாவேகரின் மரணத்தோடு …………………..ல் துவங்கியது.

அ) 1917
ஆ) 1929
இ) 1908
ஈ) 1999

விடை: இ 1908

6.இராணுவக் கிளர்ச்சி ……………………….. ல் ஏற்பட்டது.

அ) 1911 அக்டோபர்
ஆ) 1929 அக்டோபர் .
இ) 1909 அக்டோபர்
ஈ) 1999 அக்டோபர்

விடை: 1911 அக்டோபர்

7.சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராக …………….. தேர்வு செய்யப்பட்டார்.

அ) ஷியாங் கைஷேக்
ஆ) சோ என் லாய்
இ) Dr. சன்யாட் சென்
ஈ) மாசே துங்

விடை: இ Dr. சன்யாட் சென்

8.யுவான் ஷி கேயின் கீழ் ………………. வருடம் சீனா ஒருமைப்பாட்டுடன் விளங்கியது.

அ) 2
ஆ) 3
இ) 6
ஈ) 4

விடை: ஈ) 4

9.பீகிங் பல்கலைக் கழகத்தில் ……………… கற்கும் அமைப்பு உருவானது.

அ) பாசிசம்
ஆ) நாசிசம்
இ) மார்க்ஸியம்
ஈ) சீக்கியம்

விடை: இ மார்க்ஸியம்

10.பொதுவுடைமை (மற்றும்) செல்வாக்கின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………… ஆவார்.

அ) ஷியாங் கை ஷேக்
ஆ) கோமிங்டாங்
இ) சன்யாட் சென்
ஈ) மா சே துங்

விடை: ஆ) கோமிங்டாங்

11.1928ல் கோமிங்டாங் …………………….. யைக் கைப்பற்றினார்.

அ) நான்கிங்
ஆ) பீகிங்
இ) ஹாங்கிங்
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) பீகிங்

12.………………. முழு சீன பொதுவுடைமையும் மாவே வசம் வந்தது.

அ) 1933
ஆ) 1928
இ) 1954
ஈ) 1952

விடை: அ) 1933

13.பீகிங்கை சுற்றியிருந்த பகுதி …………….. கட்டுப்பாட்டின் கீழிருந்தது.

அ) மார்ஷல்
ஆ) ஷியாங் கை ஷேக்
இ) யுவான் கே ஷேக்
ஈ) எதுவுமில்லை

விடை: ஷியாங் கை ஷேக்

14.……………. வர்க்கத்தின் ஆதரவைப் பெற மாவோ முயற்சித்தார்.

அ) முதல்தர
ஆ) நடுத்தர
இ) கீழ்த்தர
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) நடுத்தர

15.தற்போதைய உலகில் …………….. வல்லரசுகள் உள்ள ன.

அ) 4
ஆ) 5
இ) 2
ஈ) 3

விடை: இ 2

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.…………….. என்பது வடக்கு அட்லாண்டிக் சாசனம் ஆகும்.  விடை:நேட்டோ

2.…………….. சீனப் புரட்சியில் ஒரு முக்கிய எழுச்சியாகும்.  விடை:தைபிங் கலகம்

3.…………… என்பது இராணுவக் கூட்டுகளின் ஒப்பந்தமாகும்.  விடை:NATO

4.நேட்டோ போல எந்தவொரு அமைப்பையும், ……………… கொண்டிருக்கவில்லை.   விடை:சீட்டோ

5.……………. 1991ல் முடிவுக்கு வந்தது.  விடை:வார்சா ஒப்பந்தம்

6.சீட்டோ ……………….ல் கலைக்கப்பட்டது.  விடை:1979

7.1958ல் அமெரிக்கா சீட்டோவில் இணைந்ததோடு இவ்வொப்பந்தம் ……………… எனப் பெயர் மாற்றப்பட்டது.  விடை:மத்திய உடன்படிக்கை அமைவு

8.யூதர்களின் பூர்வீகப்பகுதி …………….. ஆகும்.  விடை:பாலஸ்தீனம்

9.உலக சீயோனிய இயக்கம் ……………… உருவானது.  விடை:1897

10.பெர்லின் சுவர் ………………. தகர்க்க ப்பட்டது.  விடை:1961

11.…………….. கிழக்கு, மேற்கு ஜெர்மனியை இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.  விடை:ஹெல்மட்கோல்

12.பெரிட்ஸ்ரோய்கா என்பதன் பொருள் …………….. என்பதாகும்.  விடை:மறுகட்டமைப்பு

13.மாஸ்கோ நகரின் மேயர் ……………. ஆவார்.  விடை:எல்சின்

14.செர்னோபில் பேரழிவு. ……………… நடந்தது.  விடை:உக்ரைனில்

15.ஐரோப்பிய ஒன்றியத்தில் ……………… உறுப்பு நாடுகள் உள்ளன.  விடை:28

 

சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க.

1.i) ஒற்றை ஐரோப்பிய சட்டம் 1992 பிப்ரவரி 7ல் கையெழுத்தானது.
ii) ஒற்றை ஐரோப்பியா வெளியுறவுக் கொள்கையின் ஒத்துழைப்பை நாடியது.
iii) ஐரோப்பிய ஒன்றியத்தில் 29 நாடுகள் உள்ளது.
iv) மாஸ்டிரிக்ட் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவானது.

அ) i, iii சரி
ஆ) ii, iv சரி
இ) ii, iii சரி
ஈ) iv சரி

விடை:
ஆ) ii, iv சரி

2.கூற்று : இஸ்ரேல் என்ற தேசம் 1948ல் உருவானது.
காரணம் : பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முக்கிய தலைவர் “யாசர் அராபத்” ஆவார்.

அ) கூற்று, காரணம் சரி
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.
ஈ) கூற்று, காரணம் தவறு, காரணம் கூற்றுக்கு பொருத்தமானது.

விடை:
இ கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.

 

சுருக்கமான விடையளிக்கவும்.

1.பனிப்போர் பற்றிக் குறிப்பு வரைக.

  • விடை:
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் இந்நாடுகளின் நட்பு நாடுகளுக்குமிடையே மூண்ட விரோதம், பரபரப்பையே பனிப்போர் என்கின்றனர்.
  • அவை நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தவில்லை.
  • மாறாக அவர்கள் அரசியல் பொருளாதார சிந்தனைத் தளங்களைத் தேர்வு செய்து கொண்டனர்.

2.அணிசேரா இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை?

விடை:

  • அமைதியோடு இணைந்திருத்தல்.
  • அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தப் பாடுபடல்.
  • எந்த அணியோடும் ராணுவக் கூட்டுறவுக் கொள்ளாமல் இருத்தல்.
  • எந்த வல்லரசுக்கும் நாட்டிற்குள் ராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல்.

3.புலம்பெயர் சமூகம் பற்றி எழுதுக.

விடை:

  • யூதர்களின் பூர்வீகப்பகுதியான பாலஸ்தீனத்தில் 1900இல் ஆயிரம் யூதர்களே குடியிருந்தனர்.
  • இவ்வினத்தின் பதினைந்து மில்லியன் மக்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் பரவிக்கிடந்தனர்.
  • இதுவே ‘புலம்பெயர்’ சமூகம் என்று குறிக்கப்படுகிறது.

4.பாலஸ்தீனிய விடுதலை அமைப்புப் பற்றி எழுதுக.

விடை:

  • இஸ்ரேல் என்ற தேசம் 1948இல் உருவாவதற்கு முன் பாலஸ்தீனில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும்.
  • இரகசியமாக செயல்பட்டு வந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964-இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
  • இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார்.

5.பெரிஸ்ட்ரோய்கா என்றால் என்ன?

விடை:

  • வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் முன்னேற்றத்திற்கு சோவியத்தின் பொருளாதாரம் ஈடுகொடுக்கும்படி அதற்குப் புத்துணர்வு ஊட்ட வெளிப்படைத்தன்மை கொள்கையோடு அறிமுகப்படுத்தப்பட்டதே பெரிஸ்ட்ரோய்கா ஆகும்.

விரிவான விடை தருக.

1.கியூபாவின் புரட்சி பற்றி விவரிக்க.

விடை:

  • அமெரிக்க ஐக்கிய நாடு மத்திய அமெரிக்காவிலும் (ஹோண்டுரஸ், எல் சல்வதோ, நிகரகுவா, பனாமா, க்வாத்தமாலா) கரீபியப் பகுதியிலும் (கியூபா, டோமினியக் குடியரசு, ஹைதி) கிழக்கு ஆசியாவிலும் (பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தெற்கு வியட்நாம், தாய்லாந்து) தனக்கு துணைக் கோள்களாகச் சுற்றிச் செயல்படும் நாடுகளைக் கொண்டிருந்தது.
  • இந்நாடுகள் இராணுவ அதிகாரிகளாலும் பெரும் நிலச்சுவான்தாரர்களாலும் சில சூழ்நிலைகளில் பெருமுதலாளிகளாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தன.
  • காஸ்ட்ரோ பதவியேற்ற பின் கியூபாவிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களைச் சுத்திகரிக்க மறுத்தன.
  • அதற்குப் பதிலடியாக அமெரிக்க ஐக்கிய நாடு அதுவரை கியூபாவிலிருந்து மொத்தமாக சர்க்கரைக் கொள்முதல் செய்து வந்ததை நிறுத்திக் கொண்டது.
  • காஸ்ட்ரோநாட்டிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் சர்க்கரை ஆலைகளை தேசியமயமாக்கியதன் மூலம் மின்சார விநியோகத்திலும் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்துவதிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கிருந்த ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
  • இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

2.சூயஸ் கால்வாய் சிக்கல் பற்றி விவரிக்க.

விடை:

  • எகிப்தில் 1952இல் நிகழ்ந்த ஓர் இராணுவக் கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத்தலைவராக ஆக்கப்பட்டார்.
  • அவர் 1956ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
  • இது பிரிட்டிஷாரின் நல்லெண்ணெத்திற்கு விரோதமாகத் தெரிந்தது.
  • இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவுசெய்தன.
  • இஸ்ரேலியப் படைகள் அக்டோபர் 29இல் எகிப்து மீது படையெடுத்தன.
  • இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரிட்டன் தனது படைகளைக் கால்வாயைக் காப்பாற்றும் வகையில் நிறுத்தி வைக்க அனுமதி கோரியது.
  • இதற்கு எகிப்து மறுத்ததால் அக்டோபர் 31இல் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து அந்நாட்டின் விமானத்தளங்கள் மீதும் இன்னபிற முக்கியத்தளங்கள் மீதும் சூயஸ்கால்வாய்ப் பகுதியிலும் குண்டுவீசின.
  • எனினும் உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் நவம்பர் 6ஆம் தேதி பிரான்சும் பிரிட்டனும் தங்கள் எதிர்ப்பை நிறுத்திக்கொண்டன.
  • இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நேரு இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட சீரிய பங்காற்றினார்.

Leave a Reply