12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany PURE SCIENCE 1st Lesson Additional 2 Marks

12th Botany PURE SCIENCE 1st Lesson Additional 2 Marks Answers

12th Botany PURE SCIENCE 1st Lesson Book Back Answers. 12th Standard Pure Science Grout Unit 6, 1st Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 6, 1st lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.

12th Bio-Botany Unit 6 | Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம் – Additional 2 Marks Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

2 மதிப்பெண்கள்

1.தாவர இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
  • தாவரங்கள் நிலைத்து வாழ்வதற்கும்.
  • தாவரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்து வாழும் மற்ற எல்லா உயிரினங்களும் தொடர்ந்து நிலைத்து வாழ்வதற்கும் முக்கியமானதாக உள்ளது.
  • புதிய பண்புகளை உருவாக்குவதால் பரிணாமத்தில் இனப்பெருக்கம் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.
2. வங்கத்தின் அச்சுறுத்தல் என அழைக்கப்படும் தாவரம் எது? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
  • “வங்கத்தின் அச்சுறுத்தல்” என அழைக்கப்படும் நீர் தாவரம் ஆகாய தாமரை (ஜக்கார்னியா கிராசிப்பஸ்) ஆகும். இது ஒரு வகை களையாகும்.
  • இது வேகமாக பரவி நீரில் கலந்துள்ள ஆக்சிஜனை குறைத்து மற்ற நீர்வாழ் உயிரினங்கள் மடிய காரணமாகிறது. எனவே இத்தாவரம் “வங்கத்தின் அச்சுறுத்தல்” என அழைக்கப்படுகிறது.
3. கீழ்நிலை உயிரினங்களில் காணப்படும் இனப்பெருக்க முறைகள் யாவை?
உயிரினம்
  1. ஆஸ்பர்ஜில்லஸ்,
  2. பெனிசிலியம்
  3. ஈஸ்ட், ஹைட்ரா
  4. ஸ்பைரோகைரா
  5. மார்கான்ஷியா
  6. பிளனேரியா
  7. பாக்டீரியா
இனப்பெருக்க முறை
  1. கொனிடியம்
  2. மொட்டு விடுதல்
  3. துண்டாதல்
  4. ஜெம்மாஉருவாதல்
  5. மீளுருவாக்கம்
  6. இரு பிளவாதல்
4. பொலினியம் என்றால் என்ன?
  • சில தாவரங்களில் ஒரு நுண்வித்தகத்தி லுள்ள நுண் வித்துகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் அமைப்பு பொலினியம் எனப்படும்.

5. உறைகுளிர் பாதுகாப்பு என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் யாது?

  • மகரந்தத்துகள்களை நீண்ட காலம் உயிர்ப்புத்தன்மையுடன் பாதுகாக்க திரவ நைட்ரஜன் (-196°c) பயன்படுத்தப்படுகிறது.
  • இந்நுட்பம் உறைகுளிர் பாதுகாப்பு எனப்படும்.
  • இந்நுட்பம் பொருளாதார முக்கியத்துவமுள்ள பயிர்களின் மகரந்தத்துகள்களை தாவர மேம்பாடு செயல் திட்டங்களுக்காக சேமித்து வைக்க உதவுகிறது.
6. தேனீ மகரந்தத்தின் பயன்கள் யாது? 
  • தேனீ மகரந்தம் ஒரு இயற்கை பொருளாகும்.
  • இதில் அதிக அளவு புரதம், கார்போஹைட்ரேட், மிக குறைவான தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுவதால் கூடுதல் கூட்டப் பொருளாக பயன் படுத்தப்படுகிறது.
  • இது மகரந்த மாத்திரைகளாகவும் பாகுநீராகவும் விற்கப்படுகிறது.
  • தடகள வீரர்கள் மற்றும் பந்தயக் குதிரைகளின் செயல்பாட்டை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • தீக்காயத்தினால் ஏற்படும் புண்கள் ஆறுவதற்கு உதவுகிறது.
7.ஆண் பெண் மலர் தாவரங்கள் மற்றும் ஒரு பால் மலர்த் தாவரங்கள் வேறுபடுத்திக் காட்டுக.
ஆண் பெண் மலர்த் தாவரங்கள்
  1. ஆண் மற்றும் பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் காணப்படுதல்
  2. மகரந்தச்சேர்க்கை தடுக்கப்படுகிறது கேய்ட்டினோகேமி நடைபெறுகிறது.
  3. எ.கா. தென்னை மற்றும் பாகற்காய்
ஒரு பால் மலர்த் தாவரங்கள்
  1. ஆண் மற்றும் பெண் மலர்கள் வெவ்வேறு தாவரங்களில் காணப்படுதல்.
  2. தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் கேய்ட்டினோகேமி இரண்டும் தடுக்கப்படுகிறது.
  3. எ.கா. பொராசஸ் மற்றும் பேரீச்சை
8. தன் மலட்டுத்தன்மை அல்லது தன் ஒவ்வாமைத்தன்மை என்றால் என்ன?
  • சில தாவரங்களில் ஒரு மலரின் அதே மலரின் சூலக மகரந்தத் துகள் முடியை அடைந்தால் அதனால் முளைக்க இயலாது அல்லது முளைப்பது தடுக்கப் படுகிறது. இதற்கு தன் மலட்டுத் தன்மை அல்லது ஒவ்வாமைத் தன்மை என்று பெயர்.
  • இது மரபணுசார் செயல்பாடாகும். எ.கா. அபுட்டிலான், பேசிஃபுளோரா
9. இலை வளர் மொட்டுகள் என்பது யாது?
  • இலையில் தழைவழி இனப்பெருக்க உறுப்புகளாகச் செயல்படுகின்றன.
  • பெற்றோர் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய தனி தாவரங்களாக வளர்கின்றன.
  • இவ்வாறு இலையில் தோன்றும் வேற்றிட மொட்டுகள் இலைவளர் மொட்டுகள் எனப்படும். எ.கா? பிரையோஃபில்லம், சில்லா. பெகோனியா.
10.சில்லா தாவரத்தின் சிறப்பு யாது? 
  • சில்லா ஆற்று மணலில் வளரும் ஒரு குமிழ்தண்டு தாவரம். –
  • இத்தாவரத்தில் இலையில் தழைவழி இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • இவற்றின் இலைகளின் நுனியில் இலைவளர் மொட்டுகள் தோன்றி, அவை தரையைத் தொட்டவுடன் புது தனி தாவரங்களாக மாறுகின்றன.
14.முளைக்குருத்து உறை மற்றும் முளைவேர் உறை வேறுபடுத்துக.
முளைக்குருத்து உறை
  • ஒரு வித்திலை தாவர விதையின் முளைக் குருத்தைச் சுற்றி காணப்படும் பாதுகாப்பு உறை முளைக்குருத்து உறை எனப்படும்
முளைவேர் உறை
  • ஒரு வித்திலை தாவர விதையின் வேர் மூடியை உள்ளடக்கிய முளைவேவரைச் சுற்றி காணப்படும் பாதுகாப்பு உறை முளைவேர் உறை எனப்படும்.
12. வேற்றிட கருநிலை அல்லது வித்தகத் தாவர மொட்டு உருவாதல் என்றால் என்ன?
  • இருமடிய வித்தகத்தாரை செல்களாகிய சூல்திசுவிலிருந்தோ அல்லது சூல் உறையிலிருந்தோ நேரடியாக கரு உருவானால் அது வேற்றிட கருநிலை அல்லது வித்தகத்தாவர மொட்டு உருவாதல் எனப்படும்.
  • ஏனெனில் கேமீட்டாக தாவர நிலை முழுவதுமாக இதில் காணப் படுவதில்லை. எ.கா. சிட்ரஸ் மற்றும் மாஞ்சிஃபெரா
13.விதைத்துளைமூடி என்பது யாது?
  • ஒரு சில தாவரங்களில் வெளிச்சூலக உறையின் நுனிப்பகுதியில் சூலதுளையைச் சுற்றியுள்ள செல்கள் சதைப்பற்றுடன் காணப்படுகின்றன. இவ்வமைப்பு விதைத்துளைமூடி என்று அழைக்கப்படுகின்றன. எ.கா. ரிசினஸ் கம்யூனிஸ்

Leave a Reply