You are currently viewing 6th Tamil Guide Term 2 Lesson 3.1

6th Tamil Guide Term 2 Lesson 3.1

6th Tamil Guide Term 2 Lesson 3.1

TN 6th Standard Tamil Book Back Answers – Term 2 Lesson 3.1  நானிலம் படைத்தவன் Solution Guide

6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 3.1 நானிலம் படைத்தவன் Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Book Back Answers Term 2 – Lesson 3.1 கூடித் தொழில் செய் – நானிலம் படைத்தவன் 

  • முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
  • பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
  • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
  • இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  • மல்லெடுத்த – வலிமைபெற்ற
  • சமர் – போர்
  • நல்கும் – தரும்
  • கழனி – வயல்
  • மறம் – வீரம்
  • எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
  • கலம் – கப்பல்
  • ஆழி – கடல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________

  1. மகிழ்ச்சி
  2. துன்பம்
  3. வீரம்
  4. அழுகை

விடை : வீரம்

2. “கல்லெடுத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. கல் + அடுத்து
  2. கல் + எடுத்து
  3. கல் + லடுத்து
  4. கல் + லெடுத்து

விடை : கல் + எடுத்து

3. “நானிலம்” என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. நா+னிலம்
  2. நான்கு+நிலம்
  3. நா+நிலம்
  4. நான்+நிலம்

விடை : நான்கு+நிலம்

4. “நாடு+ என்ற” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. நாடென்ற
  2. நாடன்ற
  3. நாடுஎன்ற
  4. நாடுஅன்ற

விடை : நாடென்ற

5. “கலம்+ ஏறி” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. கலம்ஏறி
  2. கலமறி
  3. கலன்ஏறி
  4. கலமேறி

விடை : கலமேறி

III. சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மாநிலம்

  • தமிழ்நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்

2. கடல்

  • உலகில் பெருங்கடல்கள் ஏழு

3. பண்டங்கள்

  • இனிப்பு பண்டங்கள் அனைவருக்கும் அதிகமாக பிடிக்கும்

IV. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்களை எழுதுக

  • கல்லெடுத்து – மல்லெடுத்த
  • ஊராக்கி – பேராக்கி
  • பெருமை – மருதம்
  • முக்குளித்தான் – எக்களிப்பு
  • பண்டங்கள் – கண்டங்கள்
  • அஞ்சாமை – அஞ்சுவதை

V. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனை சொற்களை எழுதுக

  • கல்லெடுத்து – கலமேறி
  • மல்லெடுத்து – மறத்தால்
  • நானிலத்தை – நாகரிக
  • முக்குளித்தான் – முத்தெடுத்து
  • பண்டங்கள் – பயன்நல்கும்

VI. குறு வினா

1. நான்கு நிலங்கள் யாவை?

  • நான்கு நிலங்கள் என்பவை முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பவை ஆகும்.

2. தமிழன் எதற்கு அஞ்சினான்?

  • தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.

3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?

  • முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான்

VII. சிறு வினா

1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினார்?

  • தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான்
  • தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான்
  • முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் தமிழன் தான்.

2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?

  • தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான்.
  • ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்
  • பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களில் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றி கொடியை நாட்டினான்.
  • முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான்.  எதற்கும் அஞ்சுவான் ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.

நானிலம் படைத்தவன் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. “சமர்” என்னும் சொல்லின் பொருள் ____________விடை : போர்
  2. “வயல்” என்ற சொல்லின் வேறு பெயர் ____________விடை : கழனி
  3. வீரகாவியம் படைத்தவர் ____________விடை : முடியரசன்
  4. “ஆழி” என்பதற்கு ____________ என்ற பெயர்விடை : கடல்

II. குறு வினா

1. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் யார்?

  • முடியரசன்

2. நானிலம் படைத்தவன் என்ற பாடல் எந்தநூலில் இடம் பெற்றுள்ளது?

  • நானிலம் படைத்தவன் என்ற பாடல் முடியசரன் எழுதிய புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

3. நானிலம் படைத்தவன் பாடலில் முடியரசன் குறிப்பிட்டுள்ள நிலங்கள் யாவை?

  • முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல்

4. முடியரசன் – குறிப்பு வரைக

  • முடியரசனின் இயற்பெயர் – துரைராசு
  • பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
  • திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாராட்டப் பெற்றவர்.

Leave a Reply