You are currently viewing 8th Tamil Guide Unit 2.3

8th Tamil Guide Unit 2.3

8th Tamil Guide Unit 2.3

8th Standard Tamil Samacheer Kalvi Guide 2nd Lesson Book Answers

8th Standard Tamil Guide Lesson 2. இயல் 2.3 நீலம் பொது Book Back and additional Question and answers. 8th Standard Samacheer Kalvi Guide, 8th Tamil Unit 2.1  Answers Notes, 8th Tamil Full Guide book Answers. 8th Tamil book back question iyal 2 you can download 8th Tamil book back question and answer all subjects. 8th Study Materials. 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers. 

8th Tamil Samacheer Kalvi Guide Unit 2

2.3 நிலம் பொது

2.3 நிலம் பொது tn students guide

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.

  1. தாயாக
  2. தந்தையாக
  3. தெய்வமாக
  4. தூய்மையாக

விடை : தாயாக

2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. இன் + ஓசை
  2. இனி + ஓசை
  3. இனிமை + ஓசை
  4. இன் + னோசை

விடை : இனிமை + ஓசை

3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. பால்ஊறும்
  2. பாலூறும்
  3. பால்லூறும்
  4. பாஊறும்

விடை : பாலூறும்

II. தொடரில் அமைத்து எழுதுக.

1. வேடிக்கை:

  • குழந்தை  விளையாடுவதை தந்தை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

2. உடன்பிறந்தார்:

  • தர்மன் தன் உடன்பிறந்தார் உடன் மிகுந்த அன்பு வைத்திருந்தான்.

III. குறுவினா

1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

  • இந்த பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு யாருக்கும் சொந்தமானவை அல்ல.
  • அப்படி இருக்கையில், அவற்றை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் என்று சியாட்டல் கூறுகின்றார்.

2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

  • இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுப் புனிதமாகும்.
  • இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்கு தாயாகும்.
  • அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள்; அந்த மண்ணும் அவர்களுக்கு உரியதாகும்.

3. எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

  • செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,
  • எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,
  • தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும்
  • தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்

IV. சிறு வினா

1. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

  • ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை.
  • இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
  • இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
  • எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
  • இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும் என நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்

2. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?

  • இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
  • மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
  • மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும்
  • இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்

V. நெடு வினா

1. தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

  • இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்கு புனிதமாகும். எமது மக்கள், இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இது எமக்கு தாயாகும்.
  • நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க சம்மதிப்பது எனபது மிகவும் இயலாத ஒன்றாகும்.
  • நாங்கள் பூமியை தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.
  • நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும். அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.
  • இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவு முறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
  • இப்பூமியின் மீது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவே யாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.
  • இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த இறைவனை அவமதிக்கும் செயலாகிவிடும்.
  • நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும்.

நிலம் பொது – கூடுதல் வினாக்கள்

I. பிரித்து எழுதுக

  • ஊசியிலை = ஊசி + இலை
  • மறப்பதேயில்லை = மறப்பதே + இல்லை
  • உணவளிக்கின்றனர் = உணவு + அளிக்கின்றனர்
  • நீரானது = நீர் + ஆனது
  • நிலத்திலிருந்து = நிலத்தில் + இருந்து
  • உங்களுடைய = உங்கள் + உடைய
  • பாழாக்கி = பாழ் + ஆக்கி
  • முறையிலிருந்து = முறையில் + இருந்து
  • காட்சிகளெல்லாம் = காட்சிகள் + எல்லாம்
  • ஒன்றாகும் = ஒன்று + ஆகும்
  • சொந்தமானவை = சொந்தம் + ஆனவை
  • பனித்துளி = பனி + துளி
  • புனிதமானது = புனிதம் + ஆனது
  • தண்ணீரன்று = தண்ணீர் + அன்று
  • தேவையானவை = தேவை + ஆனவை

II. சிறு வினா

1. சுகுவாமிஷ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?

  • அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர்.

2. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?

  • சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் ஆவார்

 நிரப்புக :

  • 1. அமெக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் ………………………. பழங்குடியினர்.
  • 2. பூஜேசவுண்ட்/சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ……………………
  • 3. சியாட்டல் ……………………….. காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
  • 4. சியாட்டல் அமெரிக்கக் ……………………… கடிதம் எழுதினார்.
  • 5. விலை கொடுத்து வாங்க முடியாதவை என சியாட்டல் கூறியவை ……………………….
  • 6. சுகுவாமிஷ் பழங்குடியினர் ………………… தாயாகவும் …………………… தந்தையாகவும் கருதக் கூடியவர்கள்.

Answer:

1. சுகுவாமிஷ்
2. சியாட்டல்
3. இயற்கை வளங்கள்
4. குடியரசுத் தலைவருக்குக்
5. காற்றின் தூய்மை, நீரின் உயர்வு
6. பூமியைத், வானத்தைத்

குறுவினாக்கள் :

1.சுகுவாமிஷ் பழங்குடியினருக்கு எவையெல்லாம் புனிதமானவை?

  • சுகுவாமிஷ் பழங்குடியினருக்கு பூமியின் ஒவ்வொரு துகளும் புனிதமானது. கூடவே, மின்னும் ஒளியுடைய ஒவ்வொரு ஊசியிலையும் எல்லாக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பித் திரியும் பூச்சி வகைகளும் நினைவிலும் வாழ்விலும் மிகவும் புனிதமானவை.

2.சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றையெல்லாம் சகோதர சகோதரிகள் என்று கருதுகினற்னர்?

  • சுகுவாமிஷ் பழங்குடியினர், அவர்களுடைய பூமியில் உள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் தமது சகோதரிகள் என்றும் மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் தமது சகோதரர்கள் என்றும் கருதுகின்றனர்.

3.சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியையும் வானத்தையும் எவ்வாறு கருதுகின்றனர்?

  • சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதுகின்றனர்.

4.சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றையெல்லாம் விரும்புவார்கள்?

  • சுகுவாமிஷ் பழங்குடியினர் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும் நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும் மண்வாசனையையும் தேவதாரு மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள் என்று சியாட்டல் கூறுகிறார்.

5.சியாட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?

  • பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவது, எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பது, தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவது ஆகியவற்றைத் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சியாட்டல் குறிப்பிடுகிறார்.

6.சியாட்டல் குடியரசுத் தலைவருக்கு வைத்த வேண்டுகோள் யாது?

  • “நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல நிலத்தை நேசியுங்கள்” என்று சியாட்டல் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

7.குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியவையாக சியாட்டல் கூறியது யாது?

  • “எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். இந்நிலமே எங்கள் தாயாகும். எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.”

சிறுவினாக்கள்:

1.அமெரிக்கர்கள், பழங்குடியினரின் நிலத்தை எவ்வாறு மாற்றி விடுவார்கள் என்று சியாட்டல் கூறுகின்றார்?

சியாட்டல் கூறுவன :

  • “இப்பூமியானது உங்களின் உடன்பிறந்தார் அன்று; பகைவரே. இதனை வென்று கையகப்படுத்தியபின் நீங்கள் வேறு இடத்திற்கு நகர்ந்து விடுங்கள். நீங்கள் உங்கள் தந்தையர்களின் இடுகாடுகளைக்கூட மறந்துவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவீர்கள். பிறப்புரிமைக்குரிய சொந்த மண்ணையுங்கூட நீங்கள் மறந்துவிடுவீர்கள். நிலத்தை வாங்குவதும் விற்பதும் உங்களுக்கு ஆடுகள் அல்லது மணிகள் விற்பது போன்றவை. உங்களுடைய கோரப் பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் பாலைவனம் ஆக்கிவிடும். ஆனால் நாங்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.”

2.அமெரிக்க நகரங்களின் காட்சிகளெல்லாம் செவ்விந்தியர்களின் கண்களை எவ்வாறு உறுத்துகின்றன?

  • அந்நகரங்களில் அமைதியான இடம் என்று எதுவும் இல்லை . அவர்கள் வாழும் எந்த ஓர் இடத்திலும் அசைந்தாடும் இலைகளின் ஓசைகளையோ பூச்சி இனங்களின் ரீங்காரங்களையோ கேட்க முடிவதில்லை.
  • மாறாக, சடசடவொலிகள் காதைப் பிளக்கின்றன. மகிழ்வூட்டும் இராக்கூவற் பறவைகளின் ஒலிகளையோ, குளத்தைச் சுற்றிக் கேட்கும் தவளைகளின் கூச்சல்களையோ கேட்க இயலாது.

3.காற்றின் இன்றியமையாமை குறித்து சியாட்டல் கூறுவன யாவை? (அல்லது) காற்றைப் பற்றி செவ்விந்தியர்களின் கருத்து யாது?

  • காற்று மிகவும் மதித்துப் போற்றக்கூடியது. விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒரு காற்றையே இவை யாவும் சுவாசிக்கின்றன. இந்தக் காற்றானது அனைத்து உயிர்களையும் காக்கிறது. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் காற்று இன்றியமையாத ஒன்றாகும்.

4.‘நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்று’ – விளக்குக.

  • நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த கடவுளை அவமதிக்கும் செயலாகும். நாம் படுத்துறங்கும் இடத்தை நாமே அசுத்தப்படுத்தினால் ஒருநாள் இரவு நாம் தூக்கியெறிந்த குப்பைகளுக்குள்ளேயே நாம் மூச்சுமுட்டி இறக்க நேரிடும். எனவே நிலத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply