You are currently viewing 8th Tamil Guide Unit 3.2

8th Tamil Guide Unit 3.2

8th Tamil Guide Unit 3.2

8th Standard Tamil Samacheer Kalvi Guide 3rd Lesson Unit 3.2 Book Back and additional Questions and answers. Class 8 Lesson 3 இயல் 3.2 வருமுன் காப்போம் Book Back answers. 8th Tamil Full Answers. Eight Tamil TN Text Book Download Here8th Tamil Guide Lesson 3 Question and Answers. 8th Tamil Guide Lesson 3 Question and Answers, 8th Standard Tamil guide Unit 3 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers. 

8th Tamil Guide Unit 3.1

 

3.2. வருமுன் காப்போம்

*உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே! .
காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!*
கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா
ஏழை யேநீ ஆனாலும்,
இரவில் நன்றாய் உறங்கப்பா!
மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!
தினமும் பாயில் விழுந்திடுவாய்!
தூய காற்றும் நன்னீரும்,
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும் அப்பா!
நூறு வயதும் தரும் அப்பா!
அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
வையம் புகழ வாழ்வாயே!
-கவிமணி தேசிக விநாயகனார்.
8th Tamil Guide Unit 3 Book Back Answers TN Students Guide

⏩சொல்லும் பொருளும்

  • நித்தம்  நித்தம் -நாள்தோறும்
  • வையம் – உலகம்
  • மட்டு – அ்ளவு
  • பேணுவயல்  -பாதுகாத்தல்
  • சுண்ட -நன்கு
  • திட்டுமுட்டு -தடுமாற்றம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.

  1. நிலம்
  2. வையம்
  3. களம்
  4. வானம்

விடை : வையம்

2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. நலம் + எல்லாம்
  2. நலன் + எல்லாம்
  3. நலம் + எலாம்
  4. நலன் + எலாம்

விடை : நலம் + எல்லாம்

3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____.

  1. இடவெங்கும்
  2. இடம்எங்கும்
  3. இடமெங்கும்
  4. இடம்மெங்கும்

விடை : இடமெங்கும்

“வருமுன்காப்போம்” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை

டலின் – லகில்
காலை – காற்று
டமும் – னிய
சுத்தமுள்ள  – சுகமும்
ருமை – டையும்
திட்டு – தினமும்

எதுகை

லின் – இமும்
கூழை – ஏழை
சுத்தமுள்ள – நித்தம்
திட்டு – மட்டு
ருமை – வருமுன்
ட்டிடுவாய் – ஓட்டிவிடும்

இயைபு

தினமும் – இடமும்
கூழை – ஏழை
திட்டு – மட்டு
குடியப்பா – உறங்கப்பா
உணணாமல் – தின்பாயேல்

குறுவினா

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?

  • நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்

2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

  • அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.

சிறுவினா

உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக

  • உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
  • சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம்.
  • காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.
  • அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்.
  • நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
  • அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள்.
  • தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
  • அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

வருமுன்காப்போம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நோயற்ற வாழ்வே குறைவற்ற __________
விடை : செல்வம்
2. நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல __________ அடிப்படை
விடை : உடல் நலத்திற்கு
3. கவிமணி எனப் போற்றப்படுபவர் __________
விடை : தேசிய விநாயகனார்
4. தேசிய விநாயகனார் __________ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்துள்ளார்.
விடை : உமர்கய்யாம் பாடல்கள்
5. உடலில் உறுதி கொண்டவரே, உலகில் __________ உடையவர்
விடை : மகிழ்ச்சி
6. சுத்தம் நிறைந்துள்ள இடங்களில் __________ உண்டு
விடை : சுகம்
7. வையம் என்பதற்கு __________ என்பது பொருள்
விடை : உலகம்

II. குறு வினா

1. எவை நம்மை நூறாண்டு வாழ வைக்ககும்?

  • தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.

2. குளித்த பிறகு செய்ய வேண்டும் செயல் என கவிமணி கூறுகிறார்?

  • கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும் என கவிமணி கூறுகிறார்

3. நல்ல உடல் நலத்திற்கு அடிப்படையானது எது?

  • நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை.

4. உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?

  • உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார்

5. இனிய வாழ்வைத் தராது எவை?

  • உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.

6. கவிமணி குறிப்பு வரைக

  • கவிமணி குமரி மாவட்டத்தில் தேரூரில் பிறந்தவர்
  • கவமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர்.
  • இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
  • தேசிய விநாயகனார் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.

 

நிரப்புக :

  • 1. கவிமணி எனப் போற்றப்படுபவர் …………………
  • 2. தேசிக விநாயகனார் பிறந்த ஊர் ……………
  • 3. கவிமணி ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள் ……………….
  • 4. அதிகமாக உண்டால் ………………. தடுமாறும்.
  • 5. நாள்தோறும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ………………..
  • 6. உடலில் …………… உடையவர், உலகில் இன்பம் உடையவர்.
  • 7. நோய் வந்தபின் தீர்க்க முயல்வதைவிட வருமுன் காப்பதே ………………

Answer:

1. தேசிக விநாயகனார்
2. தேரூர்
3. முப்பத்தாறு
4. செரிமானம்
5. தூய்மை
6. உறுதி
7. அறிவுடைமை

விடையளி :

1.கவிமணி தேசிக விநாயகனார் குறிப்பு எழுதுக.

Answer:
(i) தேசிக விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
(ii) இவர் கவிமணி’ எனப் போற்றப்படுகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர்.
(iii) இயற்றிய நூல்கள் – ஆசியஜோதி, மருமக்கள் வழிமான்மியம், கதர் பிறந்த கதை, உமர்கய்யாம் பாடல்கள் (மொழிபெயர்ப்பு நூல்).

ஆசிரியர் குறிப்பு – நூல் வெளி

    கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்; முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.

    

8th Tamil Guide Unit 3 Book Back Answers
காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுகமட்டான். எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும். ‘ அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!.

Leave a Reply