10th History Unit 8 Additional Questions

10th Social Science History Unit 8 Additional Questions

10th Social Science Samacheer kalvi guide – Unit 8 Additional Questions

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide History Unit 8 Answers Tamil Medium. SSLC Social Science 8th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide 8. தேசியம்: காந்திய காலகட்டம். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 8. தேசியம்: காந்திய காலகட்டம் – Book Back Question – Answers

 Additional Important Questions and Answers

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் ……………… புறப்பட்டுச் சென்றார்.

அ) வடஆப்பிரிக்கா
ஆ) தென்னாப்பிரிக்கா
இ) தென் அமெரிக்கா
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) தென்னாப்பிரிக்கா

2.……………. நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால் இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.

அ) பன்னிரெண்டாம்
ஆ) பதினெட்டாம்
இ) பத்தொன்பதாம்
ஈ) இருபதாம்

விடை: இ பத்தொன்பதாம்

3.………………இல் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அ) அமிர்தசரஸ்
ஆ) நாக்பூர்
இ) தில்லி
ஈ) கொல்கத்தா

விடை: அ) அமிர்தசரஸ்

4.ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் அதிகாரப்பூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் மற்றும் ……………… க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அ) 10
ஆ) 100
இ) 1000
ஈ) 10000

விடை: இ 1000

5.……………… ஆண்டு தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்.

அ) நவம்பர் 1920
ஆ) அக்டோபர் 1919
இ) டிசம்பர் 1991
ஈ) நவம்பர் 1991

விடை: அ) நவம்பர் 1919

6.……………. மாதம் நாக்பூரில் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ) நவம்பர் 1920
ஆ) அக்டோபர் 1919
இ) டிசம்பர் 1920
ஈ) நவம்பர் 1902

விடை: இ டிசம்பர் 1920

7.இந்திய தேசிய காங்கிரஸ் ……………… க்கு அங்கீகாரம் அளித்தது.

அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) கோபால கிருஷ்ண கோகலே
ஈ) எதுவுமில்லை

விடை: அ) காந்தியடிகள்

8.காந்தியடிகள் ………………. பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.

அ) 98
ஆ) 87
இ 78
ஈ) 88

விடை: இ 78

9.…………….. ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.

அ) 1898
ஆ) 1878
இ) 1888
ஈ) 1988

விடை: ஆ) 1878

10.……………… ஆம் ஆண்டு லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது.

அ) டிசம்பர் 1920)
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930
ஈ) அக்டோபர் 1919

விடை: இ நவம்பர் 1930

10th History Unit 8 Additional Questions

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ……………… ஒப்பந்தத்தின் படி ரத்து செய்யப்பட்டது.

விடை:ஸ்மட்ஸ்-காந்தி

2.காந்தியடிகளுக்கு ………………….. ஆகியோரின் எழுத்துகளுடன் அறிமுகம் கிடைத்தது.

விடை:டால்ஸ்டாய், ஜான் ராஸ்கின்

3.ரௌலட் சட்டத்தை ……………… என்றழைத்த காந்தியடிகள் அதனை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6-ல் அழைப்புவிடுத்தார்.

விடை:கருப்புச் சட்டம்

4.……………. மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு பெரும் எண்ணிக்கையில் சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விடை:ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு

5.1922 பிப்ரவரி மாதம் ……………… வரிகொடா இயக்கம் பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.

விடை:பர்தோலி

6.1925ல் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு ……………… கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.

விடை:சுயராஜ்ஜிய கட்சி

7.அரசியல் சாசன வரைவுக்கான குழுவின் ……………… நேரு அறிக்கை என்று அழைக்கப்பட்டது.

விடை:கமிட்டி அறிக்கை

8.………………இல் இடஒதுக்கீடு வழங்குவது கிறித்து ஜின்னா சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

விடை:மத்திய சட்டபேரவையில்

9.தமிழ்நாட்டில் ………………யிலிருந்து ………………வரை தண்டியாத்திரை போன்று ஒரு யாத்திரையை சி.ராஜாஜி மேற்கொண்டார்.

விடை:திருச்சிராப்பள்ளி – வேதாரண்யம்

10.கான் அப்துல் கஃபார்கான் …………….. என்றழைக்கப்பட்ட குடைகிட்மட்கர் இயக்கத்தை நடத்தினார்

விடை:செஞ்சட்டைகள்

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1.கூற்று : ஜாலியன் வாலா பாக் படுகொலை 1919 ஏப்ரல் 13ல் நடந்தது.
காரணம் : ஜெனரல் டயரின் தலைமையில் நடந்தது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

2.கூற்று : காந்தியடிகள் தனது 61வது வயதில் 24 நாட்களில் 241 மைல் கடந்து தண்டியை அடைந்தார்.
காரணம் : ஏப்ரல் 4ஆம் நாள் தண்டி கடற்கரையை சென்றடைந்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

விடை:
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

10th History Unit 8 Additional Questions

சுருக்கமான விடையளிக்கவும்.

1.இரட்டை ஆட்சி குறிப்பு வரைக.

  • 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது.
  • இதன் மூலம் மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது.
  • நிதி, பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிலவருவாய், மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன.

2.நேரு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகள் யாவை?

  • இந்தியாவுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்ற டொமினியன் தகுதி.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்ம்களுக்கு இடஒதுக்கீடு அதேபோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையிராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இட ஒதுக்கீடு.
  • பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது.

3.காந்தி இர்வின் ஒப்பந்தம் குறிப்பு வரைக.

  • காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து 1931 மார்ச் 5ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.

4.B.R. அம்பேத்கரின் தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை எழுதுக.

  • அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார்.
  • கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப்பழக்கத்தை கைவிடவும் அவர் பணியாற்றினார்.
  • கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
  • 1933 ஜனவரி 8ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.

5.இந்திய அரசுச் சட்டம் பற்றி குறிப்பு வரைக.

  • சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935ஆம் ஆண்டு இந்திய அரசர் சட்டமும் ஒன்றாகும்.
  • மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச் சட்டத்தின் ‘ முக்கிய அம்சங்களாகும்.

6.காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல் பற்றிக் கூறு.

  • 1939இல் இரண்டாம் உலக போர் மூண்டது.
  • காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இந்த போரில் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு நுழைந்தது.
  • எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.
  • ஜின்னா 1940ஆம் ஆண்டு வாக்கில் முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.

7.கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்ட அறிக்கை யாது?

  • போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
  • பாகிஸ்தான் உருவாக்க கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய அளவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தைக் கையெழுத்திடலாம்.
  • போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது.

விரிவான விடையளிக்கவும்.

1.ஒத்துழையாமை இயக்கத்தின் திட்டத்தின் கூறுகளை விவரி.

  • பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.
  • அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.
  • நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாமல் இருப்பது. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாகத் தீர்வு காண்பது.
  • 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.
  • அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் இதர அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவு.
  • குடிமைப்பணி (சிவில்) அல்லது இராணுவப் பதவிகளை ஏற்க மறுப்பது.
  • அந்நியப் பொருள்களின் புறக்கணிப்பு மற்றும் உள்ளூர் பொருள்களுக்கு ஊக்கம் தரும் சுதேசி இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவது.

Leave a Reply