10th History Unit 9 Additional Questions

10th History Unit 9 Additional Questions

10th Social Science History Unit 9 Additional Questions

10th Social Science Samacheer kalvi guide – Unit 9 Additional Question – Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide History Unit 9 Answers Tamil Medium. SSLC Social Science 9th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide 8. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 9. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் – Additional Question – Answers

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.…………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.

அ) நவம்பர் 1884
ஆ) டிசம்பர் 1994
இ) டிசம்பர் 1884
ஈ) நவம்பர் 1994

விடை: ஆ) டிசம்பர் 1994

2.இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.

அ) 1886
ஆ) 1898
இ) 1868
ஈ) 1888

விடை: அ) 1886

3.இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.

அ) 22
ஆ) 72
இ) 83
ஈ) 17

விடை: ஆ) 72

4.மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.

அ) ஆங்கிலம்
ஆ) தமிழ்
இ) ஹிந்தி
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) தமிழ்

5.புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.

அ) தமிழ்நாடு
ஆ) பாண்டிச்சேரி
இ) கேரளா
ஈ) கர்நாடகா

விடை: ஆ) பாண்டிச்சேரி

6.…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.

அ) 1912
ஆ) 1921
இ) 1812
ஈ) 1821

விடை: அ) 1912

7.……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.

அ) சுப்பராயலு
ஆ) T.M. நாயர்
இ) சி. நடேசனார்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சுப்பராயலு

8.தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

அ) மே 17, 2000
ஆ) 17 ஏப்ரல் 1920
இ) 12 ஏப்ரல் 1922
ஈ) 25 ஏப்ரல் 1930

விடை: ஆ) 17 ஏப்ரல் 1920

9.………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.

அ) 13 ஜனவரி 1922
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930)
ஈ) அக்டோபர் 1919

விடை: அ) 13 ஜனவரி 1922

10.……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.

அ) காந்திஜி
ஆ) ராஜாஜி
இ) நேரு
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) ராஜாஜி

10th History Unit 9 Additional Questions

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.………………. 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.

விடை:G. சுப்ரமணியம்

2.தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற துவக்ககால அமைப்பு ……………… ஆகும்.

விடை:சென்னை மகாஜன சபை

3.……. ஆகிய இரண்டும் முக்கிய தேசப்பத்திரிக்கை இதழ்களாகும்.

விடை:சுதேசமித்ரன், தி ஹிந்து

4.…………… இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

விடை:சுதேசி

5.சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த ………………க்கு இடம்பெயர்ந்தார்.

விடை:பாண்டிச்சேரி

6.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ………………. ஆவார்.

விடை:ஆஷ்

7.……………… பாரதமாதா சங்கம் என்ற அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.

விடை:செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன்

8.…………….. பிரம்மஞான சபையின் தலைவரும் மற்றும் அயர்லாந்துப் பெண்மணியும் ஆவார்.

விடை:அன்னிபெசன்ட்

9.1923-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த ……………… அமைச்சரவையை அமைத்தார்.

விடை:பனகல் அரசர்

10.1919 ஏப்ரல் 6-ல் …………….. எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.

விடை:கருப்புச் சட்டத்தை

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1.கூற்று: வங்கப்பிரிவினை சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்றது.
காரணம்: வங்கப் பிரிவினை 1905ஆம் ஆண்டு நடந்தது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி

விடை: அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

2.கூற்று: சைமன் குழு இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டது.
காரணம்: ஒரு இந்தியர்கள் கூட அக்குழுவில் இடம்பெறவில்லை என்பதால்

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விடை: ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

சுருக்கமான விடையளிக்கவும்.

1.சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் பற்றிக் குறிப்பு வரைக.

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

2.ஜார்ஜ் ஜோசப் பற்றிக் குறிப்பு வரைக.

  • வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
  • செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பி மக்களின் வழக்கறிஞராகப் பணி செய்தார்.
  • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இவர் ஆற்றி சேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை ‘ரோசாப்பு துரை’ என அன்புடன் அழைத்தனர்.

3.நீல் சிலை அகற்றும் போராட்டம் பற்றிக் குறிப்பு வரைக.

  • ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர்.
  • 1857 பேரெழுச்சியின்போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

4.திருப்பூர் குமரனின் வீரமரணம் குறித்து எழுதுக.

  • 1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்தியவண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.
  • பரவலாக திருப்பூர் குமரன் என்றழைக்கப்படும் O.K.S.R. குமாரசாமி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்தார்.
  • ஆகையால் இவர் கொடிகாத்த குமரன் என புகழ்ப்படுகிறார்.

5.முதல் காங்கிரஸ் அமைச்சரவை பற்றிக் கூறு.

  • 1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
  • நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
  • தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது, மக்களிடையே அது பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டிக்காட்டியது.

விரிவான விடையளிக்கவும்.

1.சென்னை மகாஜன சபை மற்றும் மிதவாதக் கூட்டத்தை விவரி.

  • சென்னை மகாஜன சபை:
  • தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
  • 1884 மே 16இல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு , P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் முதல் தலைவராக P. ரங்கையா பொறுப்பேற்றார்.
  • இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் பங்காற்றினார்.
  • அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப்பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர்.
  • குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
  • இவ்வமைப்பின் பல கோரிக்கைகள் பின்னர் 1885இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.

மிதவாதக் கூட்டம் :

  • சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகில இந்திய அளவிலான அமைப்புகள் நிறுவப்படுவதற்கு வழிகோலியது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
  • அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில் அடையாறு எனும் இடத்தில் உள்ள பிரம்மஞான சபையில் கூடியது.
  • தாதாபாய் நௌரோஜி, K.T. தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G. சுப்பிரமணியம், P. ரங்கையா, P. அனந்தாச்சார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் உள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.

தமிழ்நாட்டில் உள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.

Leave a Reply