12th Botany Unit 10 Lesson 9 Additional 2 Marks

  12th Botany Unit 10 Lesson 9 Additional 2 Marks

TN 12th Bio-Botany Unit 10, 9th lesson Additional 2 Marks Question and Answers, 9th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 9. பயிர் பெருக்கம் – Additional 2 Mark Answers

 

12th Botany 9th Lesson பகுதி-II. கூடுதல் வினாக்கள் 2 Marks

1.பொருளாதாரத் தாவரவியல் என்றால் என்ன? 
  • மனிதர்களுக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைப் பற்றி படிப்பது பொருளாதாரத் தாவரவியல் எனப்படும்.

2.வேளாண்மை தோன்றிய காலம் எது ? 

  • தொல்லியல் தரவுகள் மூலம் நாம் அறிவது என்ன வென்றால் டைக்ரிஸ் மற்றும் யுஃபரேட்ஸ் நதிப் படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமை பிறைப்பகுதியில் ஏறக்குறைய 12,000 ஆண்டு களுக்கு முன்பாகும்.

3. வேளாண்மையில் டி-காண்டேலின் பங்கு என்ன? 

  • அவர் 247 பயிரிடும் தாவரச் சிற்றினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
  • அப்பயிர்களின் மூதாதையர்களின் வடிவம் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட பகுதி மற்றும் அவற்றின் வரலாறு போன்றவற்றின் புரிதலின்மையைத் தீர்த்து வைத்தார்.

4.வாவிலோ எத்தனை பயிர் தோற்ற மையங்களை முன்மொழிந்தார்?

  • 19268 மையங்களை முன்மொழிந்தார்.
  • பின்னர் 1935 பதினோரு மையங்களாக அறிவித்தார்.
  • இறுதியாக அமெரிக்க மையத்தை சேர்த்து மொத்தம் 12 மையங்களாக அறிவித்தார்.

5.உயிரி உரங்கள் என்றால் என்ன?

  • உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப் படுகிறது.

6.கடற்பாசி திரவ உரத்தில் காணப்படும் ஊட்டச் சத்துக்கள் யாவை?

  • இதில் சைட்டோகைனின், ஜிப்ரலின் ஆக்சின், மாவுச்சத்து 70க்கும் மேற்பட்ட கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.

7. ட்ரைகோடெர்மா ஒரு உயிரி கட்டுப்படுத்தும் காரணியாக அங்கீகாரம் பெற்றிருத்தலுக்கான காரணம் என்ன?

  • தாவர நோய்களை கட்டுப்படுத்துதல்
  • வேரின் வளர்ச்சிப் பெருக்கத்தைத் திறம்பட மேம் படுத்துகிறது
  • பயிர் உற்பத்தி
  • உயிரற்ற காரணிகளின் இறுக்கத்தை தாங்கும் திறன்
  • சத்துக்களை உள்ளெடுத்தல் மற்றும் பயன் படுத்துதல்.

8. தாவர அறிமுகம் என்றால் என்ன? 

  • வழக்கமாக வளருமிடத்திலிருந்து ஒரு தாவரத் தின் மரபணுவிய இரகங்களை வேறொரு புதிய சூழலில் அறிமுகப்படுத்துவது தாவர அறிமுகம் எனப்படும்.

9. இணக்கமாதல் என்றால் என்ன? 

  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத் தகவ மைத்துக் கொள்ளுதல் இணக்கமாதல் எனப் படும்.

10. தொற்றுத் தடைகாப்பு என்றால் என்ன? 

  • அறிமுகப்படுத்தப்படும் அனைத்து தாவரங்களும் களைகளற்றும், பூச்சி மற்றும் நோயுண்டாக்கும் உயிரிகளற்றும் இருக்கின்றனவா என கவனமாக பரிசீலிப்பதே தொற்று தடைகாப்பு எனப்படும்.

11. இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

  • இது டார்வின் பரிணாமக் கோட்பாடான தகுந்தன. பிழைத்தல் என்பதாகும்.
  • இதில் மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தைப் பெற அதிக காலமாகும்.

12. செயற்கைத் தேர்வு சிறு குறிப்பு வரைக. 

  • இது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு வழி முறையாகும்.
  • கலப்பினக் கூட்டத்திலிருந்து தனிதன்மையுடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாகும்.

13. மூன்றாம் வேளாண் புரட்சியின் திட்டம் யா?

  • வளரும் நாடுகளில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காகப் உயர் விளைச்சல் தரும் தாங்கு திறன் கொண்ட இரகங்களை அறிமுகப்படுத்துவதும் நீர் மற்றும் உரப் பயன்பாட்டு முறைகளும், வேளாண் மேலாண்மையை மேம் படுத்த தீவிர திட்டமிட்டு 1960-களில் உருவாக்கப்பட்டது பசுமை புரட்சி அல்லது மூன்றாம் வேளாண் புரட்சி எனப்படுகிறது.

14. பன்மடிய பயிர்பெருக்கத்தின் பயன்கள் என்ன? 

  • காட்டுத்தாவரங்கள் மற்றும் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் தாவரங்களின் பரிணாமத்தில் பன்மடியால் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
  • உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளின் இறுக்கத்தைத் தாங்கும் திறன்.
  • தீங்கு விளைவிக்கக்கூடிய சடுதிமாற்றத்தினை தாங்கும் திறன்.

15. பன்மடியத்தை செயற்கையாக தூண்டும் காரணி என்ன? பன்மடியத்தின் மூலம் பெறப்பட்ட பயிர்கள் யாவை?

  • காலசிசினை பயன்படுத்திக் குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் தூண்டுவதன் மூலம் பன்மடியத்தை ஏற்படுத்தலாம்.
  • இம்முறையில் விதையில்லாத் தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி மற்றும் டிரிட்டிகேல் போன்ற தாவரங்களை உருவாக்கியிருக்கிறது.

16. பசுமைப்புரட்சி – வரையறு.

  • தொடர் ஆய்வுகள், முன்னேற்றங்கள், புதுமைகள், தொழில்நுட்பப் பரிமாற்றங்களுக்கான முயற்சிகள் போன்றவற்றின் ஒருமித்த விளைவே பசுமைப் புரட்சி.

17. சடுதிமாற்றப் பயிர்பெருக்கத்தின் Dr.M.S. சுவாமிநாதனின் பங்கு என்ன?

  • இவர் சடுதிமாற்றப் பயிர்பெருக்கத்தின் முன்னோடியாவார்.
  • சடுதி மாற்ற முறை மூலம், பொன்னிறமுடைய ஷர்பதி சோனாரா என்ற கோதுமை இரசுத்தை உருவாக்கினார்.
  • இதுவே இந்தியாவின் பசுமைப்புரட்சிக்கு வழி கோலியது.

18, உயர்த்தப்பட்ட ஊட்டச்சத்து தரம் நிறைந்த பயிர் பெருக்க குறிக்கோள் என்ன? 

  • புரதச்சத்து மற்றும் தரம்
  • எண்ணெய் சத்து மற்றும் தரம்
  • வைட்டமின் சத்து
  • நுண் ஊட்டச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களை உயர்த்துதல்

19. பயிர் மற்றும் பூச்சி எதிர்க்கும் இரகங்களைப் பற்றிய ஒரு அட்டவணை வரைக.

பயிர்

  1. பிராசிகா (கடுகு சிறிய வகை)
  2. தட்டை பன்ஸ்
  3. வெண்டைக்காய்

இரகங்கள்

  1. பூசா கவ்ரவ்
  2. பூசாசெம் – 2, பூசாசெம் – 3
  3. பூசா சவானி, பூசா -A- 4

பூச்சி / சிறுபூச்சி

  1. அசுவினி பூச்சி
  2. இலைதத்துப் பூச்சி, அசுவினி மற்றும் பழத்துளைப்பான்
  3. தண்டு மற்றும் பழத் துளைப்பான்

20. விரிவாக்கம் தருக.

  • ODM – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி NBT – புதிய பயிர் பெருக்கத் தொழில்நுட்ப முறைகள்,

21. தாவரபயிர் பெருக்கத்திற்கு எந்த வகை செயற்கை தழைவழி பெருக்கம் நல்லது? அதற்கான காரணங்கள் தருக.

  • திசு வளர்ப்பு முறை என்ற நவீன செயற்கை தழை வழி பெருக்கமுறையே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • காரணங்கள் : 1. இதனால் விரும்பத்தக்கப் பண்புடைய தாவரத்தின் குளோன்கள் (ஒத்த ஜீனாக்கம் கொண்டவை ) உருவாக்கப்படுகிறது. வருடம் முழுவதும் குறைந்த காலத்தில் பயிர் மற்றும் வனத்திற்கு பயன்படும் மரச்சிற்றினங்கள் அதிக எண்ணிக்கையிலான நாற்றுருக்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே இதன் சிறப்பாகும்.

22. நெல் வயல்களில் அசோலாவின் பணி யாது?

  • அசோலாவில் காணப்படும் அனபீனா எனும் நீலப்பச்சை பாசி வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி நெல் வயல்களில் நைட்ரேட் உப்புச் சத்துக்களை சேர்க்கிறது.

23. தழை இலை உரத்திற்கு பயன்படும் தாவரச் சிற்றினங்கள் ஏதேனும் மூன்றின் பெயர் தருக.

  • கேசியாஃபிஸ்டுலா (கொன்றை)
  • செஸ்பேனியா கிரான்டிஃளோரா (அகத்தி)
  • அசோடிராக்டா இண்டிகா (வேம்பு)

24. உயிரி பூச்சிக் கொல்லிகள் என்றால் என்ன? 

  • உயிரிகளை அடிப்படையாகக் கொண்ட தாவர நோயுயிரிகளை கட்டுப்படுத்தும் பூச்சிகொல்லிகள் உயிரி பூச்சிக் கொல்லிகள் எனப்படும்

  12th Botany Unit 10 Lesson 9 Additional 2 Marks

கீழ்கண்ட இணையை வேறுபடுத்துக

1.உயிரி உரங்கள் மற்றும் தழை உரம்
உயிரி உரம்

  1. இது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
  2. தங்களுடைய வினையாற்றல் மூலம் வேர் மண்டலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகின்றன.
  3. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும்.

தழை உரம்

  1. தழை உரப்பயிர்களை வளர்த்து அவற்றை நேரிடையாக வயல்களிலிட்டு உழுவது தழை உர இடலாகும்.
  2. இது மண்ணிலுள்ள தழைச்தச்தை உயர்த்தும்.
  3. இது மண்ணின் அமைப்பையும் இயற்பியல் காரணியையும் மேம்படுத்துகிறது.

2.தூயவரிசைத் தேர்வு மற்றும் நகல் தேர்வு

தூயவரிசைத் தேர்வு

  1. இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப் பட்ட தாவரங்களாகும்.
  2. எல்லா மரபுக்கூறுகளிலும் இவ்வாறு பெறப்பட்ட இரகமானது ஒரே சீர்தன்மையைக் கொண்டிருக்கிறது

நகல் தேர்வு

  1. உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் மைட்டாடிக் செல்பிரிதல் மூலம் உண்டான தாய் தாவரத்திலிருந்து ஒத்த பண்புகள் கொண்ட வழித் தோன்றல்கள் பெறப்படுகின்றன.
  2. கலப்பினத் தாவரத் தொகையிலிருந்து புறத்தோற்ற விகிதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த இரகத்தை தெரிவு செய்ய நகல் தேர்வு உட்படுத்தப்படுகிறது.

3.சடுதி மாற்ற பயிர்பெருக்கம் மற்றும் பன்மடியப் பயிர்பெருக்கம்

சடுதி மாற்ற பயிர்பெருக்கம்

  1. ஒரு உயிரினத்தின் மரபணு வகையத்திலோ அல்லது புறத்தோற்ற வகையிலோ மரபுவழியாக ஏற்படும் மாற்றம்
  2. சடுதி மாற்றப் பயிர்பெருக்கம் பரிணாமம். மறுசேர்க்கை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றிற்கு இருபொருள் தருவதால் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.
பன்மடியப் பயிர்பெருக்கம்

  1. இரண்டுக்கு மேற்பட்ட குரோமோசோம் தொகுப்புகளை கொண்ட தாவரங்கள் பன்மடியங்கள் எனப்படும்
  2. கலப்பின வீரியம் மாறுபட்ட பன்பிணைவுத் தன்மை போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.

4.இரகங்களுக்கிடையே மற்றும் சிற்றினங்களுக்கிடையே கலபுறுத்தம்.

இரகங்களுக்கிடையே

  1. ஒரே சிற்றினத்தின் இருவேறு இரகங்களுக் கிடையே கலப்பு செய்தல்.
  2. தன் மற்றும் மகரந்தச்சேர்க்கை அடையும் தாவரங்களை மேம்படுத்தலாம்.
சிற்றினங்களுக்கிடையே

  1. ஒரு பேரினத்தின் இருவேறுபட்ட சிற்றினங் களுக்கிடையே கலப்பு செய்தல்.
  2. இது பொதுவாக சாதகமான மரபணுக்களை ஒரு சிற்றினத்திலிருந்து மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற பயன்படுகிறது.

Leave a Reply