12th Botany Unit 10 Lesson 9 Additional 5 Marks

  12th Botany Unit 10 Lesson 9 Additional 5 Marks

TN 12th Bio-Botany Unit 10, 9th lesson Additional 5 Marks Question and Answers, 9th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.

12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 9. பயிர் பெருக்கம் – Additional 5 Mark Answers

 

1. தாவரங்களை வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்து வதால் பயிர்களில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? 

  • பல்வேறு சூழல் காரணிகளுக்கு ஏற்ப தகவ மைத்துக் கொள்ளும்
  • பரவலான புவிப்பரப்பில் வளரும் தன்மை கொண்டவை
  • ஒருமித்த மற்றும் சீரான முறையில் பூத்தல் மற்றும் காய்த்தல்
  • விதை சிதறல் மற்றம் விதை பரப்பில் இல்லா திருத்தல்.
  • கனிகள் மற்றும் விதைகளின் அளவை அதிகரித்தல்
  • அதிக நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறனைப் பெற்றிருத்தல்
  • விதையற்ற கனிகளை உருவாக்குதல்.
  • நிறம், தோற்றம், உண்ணும் தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரித்தல்.

2. வேளாண்மையின் வரலாறு பற்றி ஒரு கட்டுரை  எழுதுக

  • 1807 – அலெக்சாண்டர்ஃலான் அம்போல்ட் பயன்தரும் தாவரங்களின் மூலங்களையும், அவற்றின் தோற்றத்தையும் உட்புக முடியாத இரகசியமென்றே கருதினார்.
  • 1868- டார்வின் முன் வைத்த பரிணாமக் கோட் பாடு பயிரிடும் தாவரங்களின் தோற்றமானது இயற்கைத் தேர்வு மற்றும் கலப்புறுத்தல் மூலமாக நடைபெற்றது என்பதை உணர்த்தியது.
  • 1883 – டிகாண்டோல் தன்னுடைய ஆரிஜன் ஆஃப் கல்டிவேடட் பிளாண்ட்ஸ் என்ற நூலில் 247 பயிரிடும் தாவரச் சிற்றினங்களின் வரலாற்றை பற்றிய புரிதலின்மையத் தீர்த்து வைத்தார்.
  • 1887-1943-வாவிலோ முக்கியமாக பயிரிடப் படும். தாவரங்களின் வேறுபட்ட வகைகளையும் அவற்றின் பரவலையும் பல தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தார். இவர் 1926ல் 8  – பயிர் தோற்ற மையங்களை முன்மொழிந்தார். பின்பு 1935ல் அவற்றை 12 மையங்களாக்கினார்.
  • 1968 சுகோஸ்கி பெரும் மரபணு மையங்களே பயிரடப்படும் தாவரங்களின் தோற்ற மையங்கள் என்றார். உலகத்தை மொத்தம் 12 பெரும் மரபணு மையங்களாகப் பிரித்தார்.
  • 1971 ஹார்லன் – வேளாண்மை என்பது மூன்று மையங்களில் தோன்றியிருக்கலாம் என்றார். மையம் அல்லாத பகுதி என்பது ஒரு பயிர் அறிமுகப்படுத்தப்பட்டு பரவிய பகுதியாகும்.
3.சில பயிர்களின் இரகங்கள் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு திறன் பற்றி அட்டவணை வரைக.
12th Botany Unit 10 Lesson 9 Additional 5 Marks

 

4. இந்தியப் பயிர் பெருக்கவியலாளர்கள் மற்றும் அவர் களின் கண்டுபிடிப்பையும் அட்டவணையிடுக. 

  • Dr.M.S.சுவாமிநாதன் – சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி
  • Dr.B.P.பால் புகழ்பெற்ற கோதுமை பெருக்க வியலாளர். மேம்பட்ட நோய் தாங்கும் திறன் உடைய கோதுமை இரகத்தை உருவாக்கியவர்.
  • Dr.K.ராமையா பல உயர் விளைச்சல் நெல இரகங்களை உருவாக்கிய புகழ்பெற்ற நெல் பெருக்கவியலாளர்,
  • N.G.P.ராவ் – உலகின் முதல் கலப்பினச் சோளத்தை (CSH I) உருவாக்கிய சிறந்த சோளப் பயிர் பெருக்கவியலாளர்.
  • C.T.படேல் – கலப்பினப் பருத்தியின் தந்தையான இவர் உலகின் முதல் கலப்பினப் பருத்தியை
  • சவுத்ரி ராம் தன் – பஞ்சாபைக் கோதுமைக் களஞ் சியமாக மாற்றிய C 591 கோதுமை இரகத்தை உருவாக்கிய கோதுமை பெருக்கவியலாளர்,
5. உயிரி உரமாகச் செயல்படும் ரைசோபியம் மற்றும் அசோலா வேறுபடுத்துக.

  • உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

ரைசோபியம் :

  • வேர் மூண்டுகளில் கூட்டுயிர் வாழ்க்கையை கொண்டுள்ளது.
  • வளி மண்டலத்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகிறது.
  • இது நெல் விளைச்சலை 15 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்கிறது.

அசோலா :

  • மிதக்கும் நீர்வாழ் பெரணியாகும்.
  • நிலப்பசும்பாசியுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகிறது.
  • விரைவாக சிதைவடைந்து நெற்பயிரின் விளைச் சலை அதிகரிக்கிறது.

ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை: 

  • மண்ணிலுள்ள அதிக பாஸ்பேட்டுகளை கரைக்கும் திறன் கொண்டது.
  • நோய் எதிர்ப்பு மற்றும் சாதகமற்ற சூழ்நிலையைத் தாங்கும் திறன் உள்ளது.
  • நிலத்தில் நீர் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.

கடற்பாசி திரவ உரம்:

  • சைட்டோகைனின், ஜிப்ரலின் மற்றும் ஆக்சினையும் உடையது. இது கெலப் என்னும் கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்டது.
  • இதில் 70க்கு மேற்பட்ட கனிமங்கள். வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.
  • இதில் ஊறவைத்த விதைகள் வேகமாக முளைக்கும்.

6. சில பயிர்களின் இரகங்கள் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு திறன் பற்றி அட்டவணை வரைக..

7. உயிரி பூச்சிக் கொல்லிகள் பற்றி விரிவாக விவரி. 
  • உயிரிகளை அடிப்படையாகக் கொண்ட தாவரநோயுரிகளை கட்டுப்படுத்தும் பூச்சி கொல்லிகள்.
  • செயற்கை பூச்சிகொல்லிகளை விட நச்சுதன்மையற்றும் மலிவாகவும், சூழலுக்கு உகந்த தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

ட்ரைகோடெர்மா :

  • பொதுவாக மண்ணிலும், வேர்தொகுதியிலும் தனித்து வாழும் பூஞ்சையாகும்.
  • இவை தாவர நோய்களை கட்டுப்படுத்தும். வேரின் வளர்ச்சிப் பெருக்கத்தைத் திறம்பட மேம் படுத்துகிறது.
  • பயிர் உற்பத்தியை அதிகரிக்கும்.
  • சத்துக்களை உள்ளெடுத்து பயன்படுத்தும்.

பியூவிரியா:

  • உலகெங்கிலும் மண்ணில் இயற்கையா வாழக் கூடிய ஒரு பூச்சி நோயுயிரி பூஞ்சையாகும்.
  • இவை பல்வேறு கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர் டைன் நோயை தடுக்கிறது.
  • இது ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சையால் தக்காளியில் ஏற்படுத்தப்படும் நாற்றமடிதல் நோயைக் கட்டுப்படுத்துகிறது.

8. பயிர்பெருக்கத்தின் குறிக்கோள்கள் எவை?

  • பயிர்களின் விளைச்சலையும், வீரியத்தையும், வளமையையும் அதிகரித்தல்.
  • வறட்சி, வெப்பநிலை, உவர்தன்மை மற்றும் அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன்.
  • முதிர்ச்சிக்கு முன்னரே மொட்டுகள் மற்றும் பழங்கள் உதிர்வடைதலை தடுத்தல்,
  • சீரான முதிர்ச்சியை மேம்படுத்தல்.
  • பூச்சி மற்றும் நோய் உயிரிகளை எதிர்த்து வாழும் திறன்.
  • ஒளி மற்றும் வெப்பக் கூருணர்வு இரகங்களை உருவாக்குதல் போன்றவையாகும்.

9.தேர்வு செய்தல் மற்றும் அதன் வகைகளைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுக. 

  • தேர்வு செய்தல் என்பது தாவரப் பயிர்பெருக்கத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் அடிப்படை முறைகளில் ஒன்றாகும்.
  • தேர்வு செய்தல் இரண்டு வகைப்படும்.

இயற்கைத் தேர்வு :

  • இது இயற்கையிலேயே நடைபெறும்.
  • இதில் விரும்பத்தகுந்த மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தைப் பெற அதிக காலமாகும்.
  • இது டார்வினின் கோட்பாட்டை ஒத்திருக்கும்.

செயற்கைத் தேர்வு

  • இது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு வழி முறையாகும்.
  • கலப்பினக் கூட்டத்திலிருந்து தனித்தன்மையுடைய தாவரங்களை தேர்ந்தெடுத்தலாகும்.

அ) கூட்டுத்தேர்வு :

  • அதிக எண்ணிக்கையிலுள்ள தாவரத் தொகை யிலிருந்து ஒரே மாதிரியான புறத்தோற்றப் பண்பு களைக் கொண்ட தாவரங்களை தேர்வு செய்து அவற்றின் விதைகளை ஒன்றாகக் கலந்து புதிய இரகத்தை உருவாக்குதலாகும்.
  • அவ்வாறு பெறப்படும் சந்ததிகளின் விதைகளை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆ) தூயவரிசைத் தேர்வு:

  • இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப் படும் தாவரங்களாகும்.
  • இவ்வாறு பெறப்பட்ட இரகமானது ஒரே சீர் தன்மையைக் கொண்டிருக்கிறது. புதிய மரபணுவகையம் கொண்ட தாவரங்களை உருவாக்க முடியாது.

இ) நகல் தேர்வு :

  • உடல் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் மைட்டாடிக் செல்பிரிதல் மூலம் உண்டான தாய் தாவாத்தின் ஒத்த பண்புகள் கொண்ட வழித் தோன்றல்கள் பெறப்படுகின்றன.
  • தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் உடல் இனப் பெருக்கத்தின் மூலம் பெருக்கமடையச் செய்யப் படுகின்றன.
  • இந்த நகல் தாவரத்தின் மரபணு வகையம் நீண்ட காலத்திற்கு மாறாமல் அப்படியே இருக்கும்.

10. கலப்புறுத்தலின் படிநிலைகளைப் பற்றி விவரி.

அ) பெற்றோரைத் தேர்ந்தெடுத்தல்;

  • தெரிவு செய்யப்பட்ட பண்புடைய ஆண் மற்றும் பெண் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தல்,இத்தாவரங்களின் ஒத்த பண்பிணைவுத் தன்மையைச் சோதனை செய்தல் மிக முக்கியமாகும்.

ஆ) ஆண் மலடாக்குதல் :

  • தன் மகரந்தச் சேர்க்கையை தடுப்பதற்காக ஆணகச் சிதைவு செய்தல்.அதை ஆண் மலடாக்குதல் என்றழைக்கப்படுகிறது.

இ) பையிடுதல் :

  • சூலக முடியை உறையிட்டுப் பாதுகாக்கும் முறை பையிடுதல் ஆகும். இது தேவையற்ற மகரந்தத்துகள்கள் சூலக முடியில் கலந்துவிடாமல் தடுக்கும்.

ஈ)கலப்பு செய்தல் :

  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் மலரின் மகரந்தங் களை ஆண் மலடாக்கப்பட்ட பெண் மலரின் சூலக முடிக்கு மாற்றம் செய்வது.

(உ) விதைகளை அறுவடை செய்து புதிய தாவரங்களை உண்டாக்குதல்

  • மூலம் கருவுறுதல் ஏற்பட்டு விதைகள் உருவாகின்றன.
  • இவ்விதைகளிலிருந்து உருவாகும் புதிய சந்ததிக்கு கலப்புயிரி எனப்படும்.

11. பன்மடிய பயிர்பெருக்கம் பற்றி விவரி, 

  • இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம் தொகுப்புகளைக் கொண்ட
  • தாவரங்கள் பன்மடியம் ஆகும்,
  • தாவரங்கள் மற்றும் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் தாவரங்களின் பரிணாமத்தில்
  • பன்மடியம் உதவுகிறது. பன்மடியம் கலப்பின உயிரி உருவாக்க உதவு கிறது
  • உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளின் இறுக்கத் தைத் தாங்கும் திறன்.
  • இது குன்றல்பகுப்புக் குறைபாட்டால் குறைந்த வளத்தன்மையுடைய விதையற்ற இரகங்கள் உருவாகும்.
  • ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள் தானா கவே இரட்டிப்பானால் – தன்பன்மடியாதல் எனப்படும்.
  • இரண்டு சிற்றினங்களிலிருந்து பெறப்பட்ட குரோமோசோம் தொகுதிகளைப் பெருக்கமடைய செய்யும்
  • கால்சிசினை பயன்படுத்திக் குரோமோசோம்களை இரட்டிப்பாக்கலாம்.

12. நவீன பயிர்பெருக்கம் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

  • நவீன பயிர்பெருக்கத்தின் மூலம் புதிய பண்புகளை வளர்க்கலாம்.
  • தாவரங்களில் DNA வின் குறிப்பிட்ட இடங்களை மரபணு தொகையை திருத்தம் செய்யலாம்.
  • மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR போன்ற முறைகள் செய்கின்றன.
  • DDM மூலம் மரபணு தொகையைத் திருத்தலாம்
  • ஒரு சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்பு உடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுகிறது.
  • DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை.

13. கடற்பாசி திரவ உரத்தின் பயன்கள் யாவை? 

  • திரவக் கடற்பாசி உரம் கரிம உரமாக மாறி சுற்றுச்சூழலுக்கு பயன்படுகிறது.
  • கடற்பாசியிலுள்ள ஆல்சினேட்டுகள் மண்ணிலுள்ள உலோகங்களுடன் வினைபுரிந்து நீண்ட ஒன்றுடன் ஒன்று குறுக்கே இணைந்த பாலிமர்களை உருவாக்குகின்றன.
  • பாலிமர்கள் மண்ணைச் சிறு துகள்களாக ஆக்கி நீர்பட்டதும் விரிந்த ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்து கொள்கிறது,
  • கடற்பாசிகளில் 70 க்கு மேற்பட்ட வைட்டமின்கள், நொதிகள் உள்ளதால் தாவரங்களின் அப்ரீத
  • விதைகளை ஊறவைத்து விதைத்தால் அவை வேகமாக வளர்ந்து சிறந்த வேர்த்தொகுப்பையும் உருவாக்குகிறது

14.ராமுவும்,சோமுவும் விவசாயிகள். ராமு தற்கலப்பின் மூலம் பயிர் செய்தார். சோமு கலப்பு தாவரங்கள் மூலம் பயிர் செய்தார்.

(i) இதில் யாருக்கு புதிய தாவர வகைகள் கிடைக்ககும்? 
(ii) அந்த தேர்வு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.

  • சோமுவுக்கு தான் புதிய வகை கிடைக்கும். ஏனெனில் அவன் கலப்பு தாவரங்களை தேர்வு செய்து கலப்பு செய்தார்.

(ii) தற்கலப்பின் நன்மைகள் :

  • இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்படும் தாவரங்களென்பதால், இவை ஒரே சீர்தன்மையைக் கொண்டிருக்கிறது.

தீமைகள்:

  • இதனால் புதிய மரபணுவகையம் கொண்ட தாவரங்களை உருவாக்க இயலாமல் போவதுடன் இவ்வகை இரகங்கள் குறைந்த தகவமைப்புகளோடும் சூழல் காரணிகளின் மாற்றங்களுக்கு ஏற்ப நிலைக்கும் தன்மையைக் குறைவாகவும் கொண்டுள்ளன. கலப்பு தாவரங்களின் கலப்பு

நன்மைகள்:

  • கூட்டுத்தேர்வில் அதிக எண்ணிக்கையிலுள்ள தாவரத் தொகையிலிருந்து ஒரே மாதிரியான புறத்தோற்ற விகிதம் அல்லது புறப்பண்புகள் கொண்ட தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் விதைகளை ஒன்றாகக் கலந்து புதிய இரகத்தை உருவாக்குதலாகும்.

தீமைகள்:

  • இதன் மரபுவழி வேறுபாடுகள் கலப்பினமாதல் (அ) சூழ்நிலை மாறுபாடுகள் இவ்விரண்டில் எதிலிருந்து உருவானது என்பதை பிரித்தறிய முடிவதில்லை.

Leave a Reply